Total Pageviews

Tuesday, February 28, 2017

சிறுநீர் மட்டுமல்லாமல் இயற்கை உபாதைகள் (மலம், தும்மல், இருமல், தாகம், பசி, விக்கல், அபான வாயு...) எதையும் அடக்க கூடாது."

மிக அவசியமான விழிப்புணர்வு பதிவு
****************************************


ஒரு உண்மை சம்பவம்...

15 வயது சிறுமிக்கு காய்ச்சல் என்று சில நாட்கள் முன்னதாக அந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்தனர்.

அன்று மருத்துவரின் அறிவுரைப்படி அச்சிறுமிக்கு இரத்தப் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

அன்று தான் ஒரு அதிர்ச்சிகரமான விஷயத்தை மருத்துவரும் அச்சிறுமியின் பெற்றோரும் அறிய வந்தனர்.

என்னவெனில் அச்சிறுமியின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டது என்பது.

அச்சிறுமியின் பெற்றோர் கலங்கி விட்டனர்.

எவ்வாறு இந்த பெரிய சங்கடம் உருவானது என்று மருத்துவர் அறிய அச்சிறுமியிடம் விசாரித்தபோது தான் தெரிந்தது அச்சிறுமி பள்ளி செல்லும் பொதெல்லாம் சிறுநீரை கழிக்கவே மாட்டாராம்.

ஏனெனில் சிறுநீர் கழிக்க அச்சிறுமிக்கு இருந்த தயக்கமும் அப்பள்ளியில் அதற்கான வசதி வாய்ப்புகள் குறைவாக இருந்ததுமே இதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது.

சிறுநீரை அடக்கும் இந்த பழக்கத்தால் அச்சிறுமியின் சிறுநீர்ப்பாதையில் தொற்று ஏற்பட்டு இறுதியில் சிறுநீரகமே செயலிழந்து போனது தான் கொடூரத்தின் உச்சம்.

அதைவிட கொடூரம் என்னவெனில் நான் சந்தித்த இரண்டாவது நாள் அச்சிறுமி மரணத்தையும் தழுவி விட்டாள் என்பது மிகுந்த மன வேதனைக்குள்ளாக்கி விட்டது.

பல கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கழிவறைகளை கண்டீர்களானால் நம் வயிற்றுக்குள் உணவு செல்லாது.

அவ்வளவு கொடூரமாக இருக்கிறது கழிவறைகள்.

அது மட்டுமில்லாமல் பல அரசு மற்றும் தனியார் பள்ளிகள் சிறுநீர் கழிக்கும் இடைவெளியை வெறும் 10 நிமிடத்திற்கு ஒதுக்கி 400 மாணவர்களை அங்கு தள்ளுகின்றனர்.

இதனால் பல மாணவர்கள் கூச்சப்பட்டுக் கொண்டு இயற்கை உபாதைகளை கழிக்காமலே அடக்கிக் கொள்கின்றனர்.

இதனால் குழந்தைகள் சிறுநீர் தொற்றிற்கு உள்ளாகி உயிரை இழக்கும் அபாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.

"சிறுநீர் மட்டுமல்லாமல் இயற்கை உபாதைகள் (மலம், தும்மல், இருமல், தாகம், பசி, விக்கல், அபான வாயு...) எதையும் அடக்க கூடாது."

தயவுசெய்து நண்பர்களே இப்பதிவை சாதாரண பதிவாக எண்ணிவிடாமல் அனைவரும் முக்கியத்துவத்துடன் பகிருமாறும் நம் குழந்தைகளையும் தீர கவனிக்குமாறும் பெற்றோர்களுக்கு தகுந்த விழிப்புணர்வை ஏற்ப்பபடுத்தவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.🙏🏻

Tuesday, February 21, 2017

மனிதரை மதிக்க வேண்டும் !




இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒருவர், ஒரு நாள் மாலை வேலை முடியும் தருவாயில் இறைச்சி பதப்படுத்தும் coldroom அறைக்குள் எதோ வேலையாக இருந்த போது எதிர்பாராதவிதமாய் அதன் தானியங்கி கதவு பூட்டிக்கொண்டுவிட்டது.

உடனே பெரும் கூச்சலிட்டாலும் அவர் எழுப்பிய ஓசை வெளியே யாருக்கும் கேட்கவில்லை மேலும் பெரும்பாலானோர் வேலை முடிந்து கிளம்பிவிட்டனர்...

இன்னும் சிறிது நேரத்தில் ஐஸில் உறைந்து இறக்கப்போகிறோம் என்று எண்ணி கவலை அடைந்தார் அவர்.

அப்போது கதவு திறக்கும் சத்தம் கேட்டது. உயிர் வந்தவனாய் வெளியே ஓடி .வந்தார். தொழிற்சாலை காவலாளி நின்று கொண்டிருந்தான். சந்தோஷத்தில் அவனை கட்டி தழுவிக்கொண்டார்.

அவனிடம் "நான் உள்ளே இருப்பது உங்களுக்கு எப்படி தெரிந்தது?" என்று கேட்டார்.

"சார். நான் இங்க 10 வருசமா வேலை செய்றேன்...நீங்க ஒருத்தர் மட்டும் தான் என்னையும் ஒரு மனுசனா மதிச்சு காலைல வணக்கமும் சாயங்காலம் குட் பை ரெண்டும் சொல்றவர்.

இன்னிக்கி காலைல வணக்கம் சொன்னீங்க ..ஆனா சாயங்காலம் உங்களோட குட் பை என் காதில் விழவில்லை.உடனே சந்தேகம் வந்து உள்ள வந்து ஒவ்வொரு இடமா தேடினேன்...அப்போதான் உங்கள் கண்டு பிடிச்சேன் ..." என்றான்

ஒருவருக்கொருவர் மற்றவர்களை தரக்குறைவாக எண்ணாமல் பரஸ்பரம் மரியாதை செலுத்திக்கொள்வது எப்போதுமே நன்மை பயக்கும் ஒரு விஷயம் தானே நண்பர்களே.

பாம்பு புற்றுக்கு பால் ஊத்துகிறோமே..! ஏன் ?

புற்றுக்கு பால் ஊத்துகிறோமே..! அது எதற்கு என்று யாரவாது யோசித்துள்ளீர்களா??


உண்மையும்,விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விஷயமும் என்னவென்றால் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது.

பின்னர் எதற்குப் புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்..?

ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக பாம்புகள் இருந்தன. காரணம் அடர்ந்த காடுகள் மத்தியில் மனித நடமாட்டம் மிக மிகக் குறைவு. மனிதனை விடப் பாம்புகள் அதிகம் காணப்பட்டது .

ஒரு உயிரினத்தை கொல்லும் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை. அப்போது அவர்கள் அனைத்தையும் மதித்தார்கள். ஆகவே அதனைக் கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர்.

பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனை திரவத்தை (பரோமோன்ஸ்) அனுப்பும். அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பைத் தேடி வரும்.

பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையைக் கட்டுப்படுத்தும் வேலையைப் பால் முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கிறது . ஆகவே அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாது.

இதன் முழுமையான காரணம் சொன்னால் நிச்சயம் ஒருவரும் பின்பற்ற மாட்டார்கள்.

அதனாலேயே புற்றுக்குள் பால் ஊற்றி முட்டை வைக்கப்படுகிறது. பாருங்களேன்

 நம்ம முன்னோர்கள் எவ்வளவு கிரிமினலா யோசிச்சிருக்காங்கனு......

Sunday, February 19, 2017

உடலில் ரத்ததை எப்படி சுத்தப்படுத்திக் கொள்ள முடியும்?

உடலில் ரத்ததை நாமே சுத்தப்படுத்திக் கொள்ள முடியும்...எப்படி தெரியுமா?

 

நமது உடலில் உள்ள உறுப்புகளை சுறு சுறுப்பாக இயங்க வைக்கும் ஒன்று தான் ரத்தம். அந்த ரத்தம் சுத்தமாக இருக்க வேண்டியது தான் ரொம்ப முக்கியம். இயற்கையான முறையில் நமது உடம்பில் உள்ள ரத்தத்தை எப்படி சுத்திகரிப்பது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

1. செம்பருத்தி பூ

செம்பருத்திப் பூவின் இதழ்களை நன்றாக சுத்தம் செய்து, காய வைத்து பொடி செய்து அதை தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் 1 கிளாஸ் வெந்நீரில் 1 ஸ்பூன் செம்பருத்தி பூவின் பொடியை கலந்து குடித்து வந்தால், நமது உடலின் சோர்வை குறைந்து ரத்தத்தை தூய்மை அடையச் செய்யும்.

செம்பருத்தி பூவின் இதழ்களை நறுக்கி, அதில் எலுமிச்சை சாறு விட்டு வெயிலில் வைத்து பிசைந்து சாறு எடுத்து அதனுடன் சர்க்கரை கலந்து காய்ச்சி வடிகட்டி நீரில் கலந்து குடித்து வர வேண்டும்.


2. பீட்ரூட்

அதேப்போன்று, தினமும் நமது உணவில் பீட்ரூட்டை சமைத்து சாப்பிட்டு வந்தால், நமது உடம்பில் புத்தம் புதிய ரத்தம் உற்பத்தியாகும். மேலும் பீட்ரூட்டை நறுக்கிப் பச்சையாக எலுமிச்சைப்பழ சாற்றில் கலந்து சாப்பிட்டால், ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும்.

3.பிளம்ஸ்..

பிளம்ஸ் பழத்தின் சதைகளை எடுத்து நிழலில் உலர்த்தி தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும்.

4.முட்டைகோஸ்

வாரம் 2-3 முறை ஒரு டம்ளர் முட்டை கோஸ் ஜூஸை குடித்து வந்தால், உடலில் உள்ள ரத்தமானது சுத்தமாகும்.
 
5.காலிஃப்ளவர்:

பச்சை இலைக் காய்கறிகளில் ஒன்றான காலிஃப்ளவரில் குளோரோஃபில் என்னும் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் பொருள் அதிகம் உள்ளது. ஆகவே, இந்த உணவுப்பொருளை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.


6.பாகற்காய்:

கசப்புத் தன்மையுடைய பாகற்காய் அதிகம் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதோடு, சர்க்கரையின் அளவையும் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும். அதிலும், பாகற்காயை வேக வைத்து சாப்பிட்டால் தான், அதன் முழு நன்மையைப் பெற முடியும்.

7.வேப்பிலை:

வாரத்திற்கு 2 முறை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வேப்பிலையை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்த நீரை பருகி வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் மட்டுமின்றி, கிருமிகளும் அழிந்துவிடும்.

8.பூண்டு:
 
பூண்டு ஒரு சிறந்த நோய்த்தடுப்பு (ஆன்டிபயாடிக்) மட்டுமின்றி, ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மையும் கொண்டது. மேலும் இது உடலில் தங்கியுள்ள நச்சுகளை மட்டுமின்றி, தேவையற்ற கொழுப்புகளையும் கரைத்து விடும்.

9.கேரட்:
 
கேரட் சாப்பிட்டால், சருமம் பொலிவாக இருக்கும் என்று சொல்வார்களே, அது ஏன் என்று தெரியுமா? ஏனெனில் கேரட் சாப்பிட்டால், ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறும் என்பதால்தான். ஆகவே, தினமும் காலையில் வெறும் வயிற்றில் கேரட் ஜூஸ் குடித்து, ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருங்கள்.

10.எலுமிச்சை:
 
எலுமிச்சையில் உள்ள புளிப்புத்தன்மை ரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் உள்ள அளவையும் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும். மேலும் இது உடல் எடையை குறைக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும்.

Thanks to Manithan.com

விரைவில் பிஎஃப் பணத்தைப் பயன்படுத்தி வீடு வாங்கலாம்..!

விரைவில் பிஎஃப் பணத்தைப் பயன்படுத்தி வீடு வாங்கலாம்..! 

Updated: Tuesday, August 16, 2016, 15:11 [IST] Subscribe to GoodReturns Tamil
 ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு உங்கள் பிஎஃப் கணக்கில் இருக்கும் இருப்பைப் பயன்படுத்தி வீடு வாங்கும் திட்டத்தை விரைவில் கொண்டு வர இருக்கிறது. பணிகள் துவங்கிவிட்டன பணிகள் துவங்கிவிட்டன தொழிலாளர் அமைச்சகத்தின் செயலாளர் சங்கர் அகர்வால் இதுகுறித்து கூறும்போது நாங்கள் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு உறுப்பினர்களின் கணக்கை பயன்படுத்தி வீடு வாங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான பணிகளைத் துவங்கி உள்ளோம். இதைப் பயன்படுத்தி எளிதாக வீடு வாங்குவது மட்டும் இல்லாமல் பிஎஃப் பணத்தை மாத தவணையாகும் செலுத்தலாம் என்று கூறியுள்ளார். திட்டம் சமர்ப்பிப்பு திட்டம் சமர்ப்பிப்பு அடுத்த மாதம் மத்திய அறங்காவலர்கள் வாரியத்துடன் நடக்க இருக்கும் ஓய்வூதிய நிதிய தொடர்பான ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் கூட்டத்திற்கு முன்பு இதற்கான திட்டத்தை சமர்ப்பிக்க உள்ளோம் என்றும் கூறினார். 
 
 மத்திய அறங்காவலர்கள் வாரியம் இதற்கு ஒப்புதல் அளித்தவுடன் பிஎஃப் சந்தாதார்கள் இதைப் பயன்படுத்த இயலும். எவ்வளவு கடன் எவ்வளவு கடன் இத்திட்டத்தின் கீழ் எல்லா சந்தாதார்களும் கடன் பெற இயலுமா, எவ்வளவு கடன் பெற இயலும் என்ற எதுவும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. நிர்பந்தமும் ஏதும் இல்லை நிர்பந்தமும் ஏதும் இல்லை சந்தாதார்கள் மீது கண்டிப்பாக வீடு வாங்க வேண்டும் என்றோ இவர்களிடம் தான் வாங்க வேண்டும், இங்கு தான் வாங்க வேண்டும் என்று எந்த நிர்பந்தமும் நாங்கள் விதிக்கவில்லை, வெளி சந்தையில் எங்கு வேண்டும் என்றாலும் வீடாகவோ, இடமாகவோ வாங்கிக் கொள்ளலாம் என்றும் அகர்வால் கூறினார். 

மூன்று தரப்புக்கு இடையிலும் ஒப்பந்தம் மூன்று தரப்புக்கு இடையிலும் ஒப்பந்தம் இத்திட்டத்தில் வீடு வாங்க விரும்பும் சந்தாதார்களுடன் வங்கிகள், நிதி நிறுவனங்கள், மனைக் கட்டும் நிறுவனங்கள், ஊழியர்கள் வைப்பு நிதி அமைப்பு என மூன்று தரப்புக்கு இடையிலும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். தவனை முறை தவனை முறை இதுமட்டும் இல்லாமல் தங்களது எதிர்கால பிஎஃப் தொகையில் இருந்து வீட்டுக் கடனை தவனை முறையிலும் செலுத்திக்கொள்ளவும் இத்திட்டம் பரிந்துரை செய்கிறது. 

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாரி தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாரி சென்ற மே மாதம் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா லோக்சபாவில் கேட்கப்பட கேள்விக்கு ‘குறைந்த விலையில் வீடு வாங்குவதற்கான சத்தியக் கூறுகளைப் பற்றி மத்திய அரசு ஆராய்ந்து வருவதாக' கூறியிருந்தார். 

2015 திட்ட நிரல் 2015 திட்ட நிரல் கடந்த வருடம் செப்டம்பர் 16-ம் தேதி மத்திய அறங்காவல் வாரியம் வெளியிட்ட திட்ட நிரலில் பிஎஃப் சந்தாதார்களுக்கான குறைந்த விலை வீட்டு மனை திட்டம் பட்டியலிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிஎப் சந்தாதார்களுக்கு 6 லட்சம் வரை இலவச ஆயுள் காப்பீடு உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா..?

பிஎப் சந்தாதார்களுக்கு 6 லட்சம் வரை இலவச ஆயுள் காப்பீடு உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா..? 
Written by: Tamilarasu Published: Tuesday, September 27, 2016, 15:44 [IST] Subscribe to GoodReturns Tamil

 நீங்கள் பணி புரியும் நிறுவனத்தில் உங்களது சம்பளத்தின் ஒரு பங்காக ஒவ்வொரு மாதமும் பிஎப் பிடித்தம் செய்கிறார்களா? 
இந்த பணத்திற்கு வரி இல்லை ஆனால் வட்டி உண்டு என்று எல்லோருக்கும் தெரியும், ஆயுள் காப்பீடு உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா..? ஆம், உங்கள் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கில் ஆயுள் காப்பீடும் உள்ளது. பணியாளர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீடு பணியாளர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீடு இது பணியாளர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீடு (EDLI) என்று அழைக்கப்படுகிறது. வருங்கால வைப்பு நிதி கணக்குப் உரிமையாளர் இறக்கும் பொது பிஎப் சந்தாதாரின் வாரிசுகள் இதைப் பெறலாம்.
 யாருக்கெல்லாம் இது பொருந்தும்? யாருக்கெல்லாம் இது பொருந்தும்? 
 இந்தத் திட்டம் யாரெல்லாம் தாங்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் சம்பளத்தில் இருந்து பிஎப் திட்டத்தில் பங்களிக்கிறீர்களோ அவர்கள் எல்லாம் இத்திட்டத்தில் பயன்பெறலாம். பணியாளர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீடு திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அனைத்தும் ஊழியர் சேமலாப நிதியம் (EPFO)மூலம் கட்டமைக்கப்பட்டது. 
கவனத்தில் கொள்ள வேண்டியவை கவனத்தில் கொள்ள வேண்டியவை சில நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஆயுள் காப்பீடு அளிக்கின்றது என்றால் அது EPFO இல்லாமல் தனியாக அளிக்கிறார்களா என்பதை உறுதி செய்வது நல்லது. இந்தக் காப்பீடு திட்டத்திற்கு ஊழியர்கள் கூடுதல் கட்டணம் ஏதும் செலுத்த தேவைல் இல்லை. காப்பீடு தொகை காப்பீடு தொகை இந்தக் காப்பீட்டிற்கான தொகை செப்டம்பர் 2015 ஆம் முதல் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின் படி சந்தாதார்களின் பரிந்துறைப்பாளர்கள் 6 லட்சம் வரை பெறலாம். எவ்வாறு கணக்கிடப்படுகிறது? எவ்வாறு கணக்கிடப்படுகிறது? 
 இந்த காப்பீடு 12 மாத சம்பளம் பெறுவதைப் பொருத்து கணக்கிடப்படுகிறது. அதிகபட்சம் 15,000 ரூபாய் வரை இந்தச் சம்பளம் வாங்குபவர்கள் இதில் பயன்பெறலாம். இங்குச் சம்பளம் என்றால் அடிப்படை ஊதியம் மற்றும் கிராக்கிப்படி இரண்டும் ஆகும். எவ்வளவு தொகை பெற இயலும் எவ்வளவு தொகை பெற இயலும் குறைந்தபட்சம் 1.5 லட்சம் ரூபாயில் இருந்து அதிகபட்சம் 6 லட்சம் ரூபாய் வரை இதன் மூலம் பெற இயலும். இது சராசரியாக தங்களது சராசரி சம்பளத்தில் இருந்து 30 முறைகளுக்கான பணமாக கணக்கிடப்பட்டு அளிக்கப்படும். 
 இது ஊழியர்களின் வயது மற்றும் வேலை செய்த நாட்களைப் பொருத்து மாறும். உரிமைகோரல் செயல்முறை உரிமைகோரல் செயல்முறை ஒரு வேலை ஊழியர் காலமானால் இறப்பு சான்றிதழ், குடும்ப சான்றிதழ், மற்றும் வங்கி விவரங்கள் போன்றவற்றை அளித்து பரிந்துறைப்பாளர்கள் உரிமைகோரலாம். வருங்கால வைப்பு நிதி கணக்கில் பரிந்துறைப்பாளர்கள் யாரும் இல்லை என்றால் சட்ட பூர்வமான வாரிசுகள் இதைப் பெற இயலும். 
இந்த உரிமைகோரல் ஊழியர் இறந்தால் மட்டுமே தவிர வேறு எந்த காரணத்தைக் கொண்டும் பெற இயலாது.

Thanks to Oneindia.com

பிஎப் [ஓய்வு காலச் சேமிப்பு திட்டம்] பணத்தை திரும்பப் பெறுதல் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான 5 விஷயங்கள்..!

பிஎப் விதிகளின் படி 12 சதவீதம் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்தும், மேலும் இதே அளவிற்கான தொகையை நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு அளிக்க வேண்டும்.


Written by: Tamilarasu Published: Saturday, February 18, 2017, 18:46 [IST] Subscribe to GoodReturns Tamil 

பிஎப் என்றாலே ஊழியர்களுக்கான ஓய்வு காலச் சேமிப்பு திட்டம் என்று கூறலாம். நிதி வல்லுநர்கள் எப்போதும் இடையில் பிஎப் பணத்தை எடுக்க பரிந்துரைக்க மாட்டார்கள்.

 பிஎப் விதிகளின் படி 12 சதவீதம் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்தும், மேலும் இதே அளவிற்கான தொகையை நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு அளிக்க வேண்டும். 

ஒவ்வொரு வருடமும் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு பிஎப் திட்டத்திற்கான வட்டி விகிதத்தை மாற்றி அமைக்கும். ஒருவர் தான் வேலை செய்யும் நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்த இரண்டு மாதத்தில் பிஎப் பணத்தை திரும்பப் பெற இயலும். இதற்கான படிவங்களை பிஎப் அலுவலகம் அல்லது தான் பணிபுரிந்த நிறுவனத்தில் பூர்த்தி செய்து அளிப்பதன் மூலம் பெற இயலும். எனவே பிஎப் பணத்தை திரும்பப்பெறும் போது தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அம்சங்களை இங்குப் பார்ப்போம். வரி விலக்கு வரி விலக்கு நீண்ட கால சேமிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் பல சேமிப்பு திட்டங்களில் வரி விலக்கை அளிக்கின்றது அரசு. 

பிஎப் பணத்தை 5 வருடங்களுக்கும் அதிகமாக எடுக்காமல் இருந்தால் மொத்த பிஎப் தொகைக்கும் வரி செலுத்த தேவையில்லை. இரண்டு மூன்று நிறுவனங்களில் மாற்றம் செய்து பணி புரிந்து வந்தாலும் புதிய நிறுவனத்திற்கு மாறும் போது பழைய பிஎப் கணக்கையே தொடரவும் முடியும். இதற்கு புதிய நிறுவனத்திற்கு நீங்கள் பணி புரிந்த பழைய நிறுவனத்தில் இருந்து ஒப்புதல் அளிக்க வேண்டும். அதே போன்று ஊழியர் ஏதேனும் காரணங்களுக்கு வேலையில் இருந்து நீக்கப்பட்டாலும் வரி செலுத்த தேவையில்லை.



 5 வருடங்களுக்கு முன்பு பிஎப் பணத்தை எடுத்துக்கொண்டால் என்னவாகும்..? 5 வருடங்களுக்கு முன்பு பிஎப் பணத்தை எடுத்துக்கொண்டால் என்னவாகும்..? ஐந்து வருடத்திற்கு முன்பு பிஎப் பணத்தை திரும்பப் பெறும் போது அந்த ஆண்டு வருமானத்தில் பிஎப் பணத்தை கணக்கு காண்பித்து வரி செலுத்த வேண்டும். நிறுவனத்தின் பங்கீட்டிற்கும் சேர்த்து வரி நிறுவனத்தின் பங்கீட்டிற்கும் சேர்த்து வரி பிஎப் பணத்தில் தங்களது பங்கீடு மட்டும் இல்லாமல் நிறுவனத்தின் பங்கிடு மற்றும் அதன் வட்டிக்கும் சேர்த்து வருமான வரி செலுத்த வேண்டி வரும். பிரிவு 80 சி பிரிவு 80 சி பிஎப் பணத்தை ஐந்து வருடங்களுக்கு முன்பு எடுக்கும் போது அது உங்களது வருமானமாகத் தான் காண்பிக்கப்படும். இதனைப் பிரிவு 80சி-ன் கீழும் காண்பித்து அதன் மூலம் பெறும் வட்டிக்கும் வரி விலக்கு பெற இயலாது. 

 
பிஎப் மூலம் பெறும் வட்டி பணம் கூட உங்களுக்குக் கிடைத்த பிற வருவாயாகத் தான் கணக்கிடப்படும். டிடிஎஸ்(TDS) டிடிஎஸ்(TDS) தொடர்ந்து ஒரு நிறுவனத்தில் ஐந்து வருடம் பணி புரிந்த பிறகு பிஎப் பணத்திற்கு எந்த வரியும் கிடையாது. 

இதுவே ஐந்து வருடத்திற்குள் பணத்தை திரும்பப் பெறும் போது பான் எண்ணைச் சமர்ப்பிக்கவில்லை என்றால் 30 சதவீதம் வரை டிடிஎஸ் செலுத்த வேண்டி வரும். இதுவே பான் எண்ணை 15ஜி/15எச் உடன் சமர்ப்பித்தால் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படாது. இதுவே படிவம் 15ஜி/15எச் சமர்ப்பிக்காமல் பான் எண்ணை மற்றும் சமர்ப்பித்தால் 10 சதவீதம் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். படிவம் 15ஜி/15எச் யாருடைய வருமான எல்லாம் வருமான வரி விளம்பிற்குக் குறைவாக இருந்தும் வரி பிடித்தம் செய்யப்படுகின்றதோ அவர்களுக்கு அதில் இருந்து விலக்குப் பெற பயன்படுவதாகும்.

Thanks to Oneindia.com

Friday, February 17, 2017

தோல்வி என்றால்...என்ன ?

தோல்வி என்றால்...என்ன ?



வெற்றியின் படிக்கட்டு !

தோல்வி
என்றால் நீங்கள் தோற்றவர் என்று
பொருள் அல்ல. நீங்கள் இன்னும்
வெற்றி பெறவில்லை என்று
பொருள்!

தோல்வி
என்றால் நீங்கள் எதையுமே
சாதிக்கவில்லை என்று
பொருள் அல்ல! சில 

 பாடங்களைக் கற்றுக்கொண்டு
இருக்கின்றீர்கள் என்று
பொருள் !

தோல்வி
என்றால் நீங்கள் அவமானப்பட்டு
விட்டதாக பொருள் இல்லை !
முயன்று பார்க்கும் துணிவு !
உங்களிடம் உள்ளது என்று
பொருள் !

தோல்வி
என்றால் வாழ்க்கை வீணாகி
விட்டதாகப் பொருள் இல்லை !
வெற்றி  மீண்டும் ஆரம்பிக்க ஒரு
வாய்ப்புக் கிடைத்துள்ளது
என்று பொருள் !

தோல்வி
என்றால் விட்டு விட
வேண்டும் என்று பொருள்
அல்ல இன்னும் செம்மையாக
உழைக்க வேண்டும் என்று
பொருள்!

தோல்வி
என்றால் உங்களால் அடைய
முடியாது என்று பொருள் அல்ல !

அடைய கொஞ்சம் காலம்
தாமதமாகலாம் என்று பொருள்!

தோல்வி
என்றால் கடவுள் உங்களைக் கை
விட்டு விட்டார் என்று
பொருள் இல்லை !

உங்களுக்கு
வேறு நல்ல எதிர்காலத்தை
நிர்ணயம் செய்து வைத்து
இருக்கிறார் என்று பொருள்..

முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்குங்கள்!

👍 நல்லதே நடக்கும்....

  Thanks ! KARUNA MSM:

Monday, January 16, 2017

மனநலம் - சிருஷ்டி மனநலக் காப்பகம்- மதுரை





மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான பாதுகாப்பும் தொடர்ச்சியான அரவணைப்புமே மிக முக்கியத் தேவை. அவர்கள் மீது அன்பு செலுத்தி அவர்கள் விரும்பும் ஏதாவது ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தும்படி சுதந்திரமாக இயங்க விட்டால் ஒரு மனப்பட்ட மனநிலைக்கு அவர்கள் வந்துவிடுவார்கள்.

நம்மில் பலரும் மனநோயாளிகள் தான். ஆம். எனக்கு இது பிடிக்கும் அது பிடிக்காது என்பதிலிருந்து துவங்கி, கோபம், விரக்தி, டென்ஷன், அழுகை, சிரிப்பு என ஒவ்வொருவரும் தினந்தோறும் பிடித்தோ பிடிக்காமலோ மற்றவர்கள் மீது வெறுப்பை உமிழ்ந்தபடி இயங்கி வருகிறோம்.

மலரிலும் மெல்லிய மனதில் ஏற்படுகின்ற துயரங்களும், காயங்களும் சிலருக்கு மாறாத வடுக்களாகி தேங்கி விடுகிறது. அப்படிப் பட்டவர்களை அரவணைத்து, ஆறுதல் சொல்லித் தேற்றுவது என்பது எல்லோராலும் இயலாத காரியம்.

இரண்டு மூன்று நாள் பார்த்து விட்டு ‘இந்த லூசு ரொம்ப இம்சை கொடுக்குது’ என்று கூறி, ஏற்கனவே வடுக்களாகிப் போன இதயங்களில் ஈட்டியை எறிபவர்கள் இங்கு ஏராளம். ஆனால் வந்தோரையெல்லாம் வரவேற்று, கொஞ்சமும் முகம்சுளிக்காது அரவணைத்துப் பாதுகாத்து எந்த வித பரபரப்பும் இல்லாமல் அமைதியாக இயங்கிக் கொண்டிருக்கிறது மதுரை சிருஷ்டி மனநல மையம்.

மதுரையிலிருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவில் அட்டப்பட்டி என்ற கிராமத்தின் நுழைவாயிலில் அமைந்துள்ளது சிருஷ்டி மனநலக் காப்பகம். சுற்றிலும் பச்சைப் பசேலென்று காட்சியளிக்கும் செடிகொடிகள். ரம்மியமாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கும் இந்த காப்பகம் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சொர்க்கம் என்றே சொல்லலாம்.

பெற்றோர்களால் கைவிடப்பட்டு, உறவினர்களால் ஒதுக்கப்பட்டு, சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட இவர்களுக்கும் இதயம் ஒன்று உண்டு. அதில் அவர்கள் அன்புக்காக ஏங்கும் ஏக்கமும் உண்டு. தன்னையே யார் என்று தெரிந்து கொள்ள முடியாத இவர்கள் சமுதாய சாடல்களை எவ்வாறு புரிந்து கொள்ள முடியும். மன நலம் பாதிக்கப்பட்ட இவர்களுக்கு சிருஷ்டி எல்லாவித வசதிகளையும் ஏற்படுத்தி தருகிறது. இவற்றில் முதலாவது மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தி தரும் முயற்சிதான்.

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்குள்ளும் ஏதாவது ஒரு தனித்திறமை ஒளிந்திருக்கும். ஆனால் அதனை வெளிப்படுத்த தக்க தருணம் கிடைக்காததால் அது வெளிப்படாமலேயே மறைந்துவிடுகிறது. சிருஷ்டிக்கு வரும் ஒவ்வொரு மனநல பாதிக்கப்பட்டவர்களிடம் உள்ள தனித் திறமையை காப்பகத்தின் நிர்வாகம் முதலில் வெளியே கொண்டு வருகிறது. அதற்காக அனைத்துவித நடவடிக்கையையும் எடுக்கிறது.

உதாரணமாக விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டு இங்கு வருகிறார் என்றால் அவர் விவசாயம் சார்ந்த துறையில் ஈடுபடுத்தப்பட்டு மறுவாழ்வு பெற்று வெளியே செல்லும் போது தன்னம்பிக்கையோடு வாழ வழிவகை செய்கின்றது. இதே போல் பல்வேறு துறைகளில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் திறமைகளை நன்கு கண்டறிந்து வெளிக்கொணர்கின்றனர்.

இறை வழிபாடு, கடமையுணர்வு, எதிர்கால சிந்தனை ஆகியவற்றை அவர்களிடம் வளர்ப்பதோடு மட்டுமல்லாமல், சிருஷ்டியை விட்டு மறுவாழ்வு பெற்று செல்லும் ஒவ்வொருவரும் சமுதாயத்தில் தங்களை இணைத்துக் கொள்ள தகுதியுள்ள நபராக மாற்றுவதில் சிருஷ்டிக்கு நிகர் சிருஷ்டியே. மனநலக் காப்பகம் என்றால் பாதிக்கப்பட்டவர்கள் சங்கிலியாக கட்டப்பட்டிருப்பார்கள். அவர்களுக்கென்று தனி இடம் ஒதுக்கப்பட்டிருக்கும் என்ற எண்ணங்கள் சிருஷ்டியை பொறுத்தவரை மிகவும் அன்னியமானவை. அப்படிப்பட்ட வன்கொடுமைகள் ஏதும் இங்கில்லை.

மனதளவில் பாதிக்கப்பட்டவர்கள் மறுவாழ்வு பெற இயற்கை சூழ்நிலையும் அதற்கேற்ற வசதிகளும் அவசியம் என்பதற்கு சிருஷ்டி ஒரு முன்னுதாரணமாக விளங்குகிறது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் நிர்வாகத்தின் சார்பில் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு அவர்களின் தன்னம்பிக்கையை வளர்த்து வருகிறது. சோப்பு, ஊதுபத்தி, கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை அவர்களே தயாரித்து விற்பனை செய்து வருவது நம்மை எல்லாம் வியப்பில் ஆழ்த்துகிறது.

மருந்துகளும் மாத்திரைகளும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மறுவாழ்வுக்கு அழைத்துச் செல்கிறதோ இல்லையோ இங்கு காட்டப்படும் அன்பும் அரவணைப்பும் அவர்களுக்கு புதிய எதிர்காலத்தை உருவாக்கி தருவது என்னமோ நிச்சயம் தான். இங்கிருந்து புது மனிதனாக செல்லும் அவர்கள் சமுதாயத்தின் கண்ணோட்டத்திலும் வீட்டாரின் கண்ணோட்டத்திலும் அவர்களின் மீதுள்ள எண்ணம் மட்டும் ஏன் இன்னும் மாறவில்லை என்பது வேதனைக்குரியதே.

மனநலம் குன்றியவர்களைப் பார்க்க வருபவர்களையெல்லாம் ‘வணக்கம்’ என்ற வார்த்தைகளால் மனமிளக வைத்துவிடுகின்றனர். வடுக்களாகிப் போன மனங்களில் ஈரம் கசியத் தொடங்கியிருப்பதன் அறிகுறி இது. அவர்களும் சமூகத்தின் அங்கங்கள் தான், அவர்கள் புறக்கணிப்புக் குரியவர்கள் அல்ல; மறுவாழ்வு அவர்களுக்கு உண்டு என்பதை அவர்கள் நெஞ்சில் விளைவித்ததன் எதிரொலி இது.

இத்தகைய அருமையான பணியை திறம்படச் செய்து வருகிறது ‘சிருஷ்டி’. எம்.எஸ்.செல்லமுத்து டிரஸ்ட் அண்ட் ரிசர்ச் பவுண்டேசன் அமைப்பின் சார்பாக இந்த சமூக, உளவியல் மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது.

1992ல் எம்.எஸ்.செல்லமுத்து அவர்களின் பெயரால் (மனநோயால் பாதிக்கப்பட்டு ஒழுங்கான மருத்துவ வசதிகள் இன்மையால் இறந்து போனவர்) அவரது மகன் மனநல மருத்துவப் பேராசிரியர். டாக்டர். சி. இராமசுப்பிரமணியன் அவர்கள் இம்மனநல மையத்தைத் துவங்கினார். தற்போது ராஜகுமாரி இராமசுப்பிரமணியன் அவர்கள் செயல் இயக்குனராக இருந்து இதை நடத்தி வருகிறார்.

அன்றிலிருந்து இன்றுவரை சிருஷ்டி (மனநல காப்பகம்), ‘ரீ டிரீட்’ (நீண்ட கால நலவாழ்வு மையம்) எம்.எச்.டி.ஆர்.சி (மனநலப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்) ஆகாஷ் (சிறப்புப் பள்ளி), விரிக்ஷா (மறுவாழ்வு மையம்) திரிசூல் (மது, போதைக்கு அடிமையானோர் மறுவாழ்வு மையம்) ஆகிய பல்வேறு செயல்பாடுகளால் சமூகப்பணி ஆற்றி வருகிறது.

‘மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான பாதுகாப்பும் தொடர்ச்சியான அரவணைப்புமே மிக முக்கியத் தேவை. அவர்கள் மீது அன்பு செலுத்தி அவர்கள் விரும்பும் ஏதாவது ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தும் படி, சுதந்திரமாக இயங்க விட்டால் ஒரு மனப்பட்ட மனநிலைக்கு அவர்கள் வந்துவிடுவார்கள். அத்தகைய பயிற்சிகளை நாங்கள் அவர்களுக்கு வழங்கி வருகிறோம்” என்கிறார்கள் இம்மையத்தில் திட்ட அலுவலராகப் பணிபுரியும் பாபு மற்றும் கவிதா ஆகியோர்.

Srushti ‘மனநலம் மருத்துவத்தில் சிறந்த ஆராய்ச்சி மையமாக’ மத்திய அரசின் அங்கீகாரம், மத்திய சமூக நீதி அமைச்சகத்தின் ‘சிறந்த ஊழியர்’ விருது (2000), தமிழக அரசின் ‘சிறந்த தொண்டு நிறுவனம்’ (1997) விருது, தமிழக அரசின் ‘சிறந்த மருத்துவர்’ விருது (1998), மதுரை மாவட்ட ஆட்சி தலைவரிடமிருந்து ‘சிறந்த தொண்டு நிறுவன’ விருது (1996) என பல்வேறு விருதுகளை அள்ளிக் குவித்திருப்பது இந்நிறுவனத்தின் சேவைகளுக்கு மிகப்பெரிய சாட்சி.

இலவச மருத்துவம், பாதிக்கட்டணம், முழுக்கட்டணம் என குறைந்த கட்டணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை செய்யும் இந்நிறுவனத்தின் பணி கவனிக்கத்தக்கது. மனநலமையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களையும் இவர்கள் தொடர்ந்து கவனித்து அவர்களது நடத்தையில் மாறுதல் ஏற்படாதவாறு பாதுகாக்கின்றனர்.

“மனநலம் பாதிக்கப்பட்டவர்களை இந்த சமூகம் கேவலமாகவும், கீழ்த்தரமானவர்களாகவும் பாவிக்கிறது. அந்த மனநிலையை மாற்றி அவர்களையும் மனிதர்களாக்குவதற்கான தொடர் முயற்சிகளில் இந்நிறுவனத்தின் பங்கு இருக்கும். அதற்காக நீண்ட கால மனநல ஆராய்ச்சித் திட்டங்களை செய்து வருகிறோம். மனநலப் பாதிப்பற்ற சமூகத்தை உருவாக்குவதே எங்களின் கனவு” என்கிறது சிருஷ்டி அமைப்பு.

இதுவரை மருத்துவ உலகில் தெளிவற்ற புரிதலை அளிக்காத துறையாக ‘மனநல அறிவியல்’ இருந்து வருகிறது. தொடர்ச்சியான ஆய்வுகளும் விடாமுயற்சியுமே அத்துறையில் பல்வேறு அதிர்ச்சிகரமான உண்மைகளை அளித்து வருகின்றன. அத்தகைய கடினமான பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு ஆராய்ச்சிப் பணியும் சேவைப்பணியும் செய்து வரும் ‘சிருஷ்டி’ பாராட்டத்தக்கது. அவர்களது கனவு மெய்ப்பட வேண்டியது.

Friday, January 6, 2017

பெண் பார்ப்பது எப்படி !

பெண் பார்ப்பது எப்படி !

ஒரு தத்துவ ஞானியிடம் ஒரு வாலிபன் சென்று எனக்கு பெண் பார்க்க வேண்டும் என எனது தாய் ஆசைப்படுகிறாள் , நான் எப்படியான பெண்ணை தெரிவு செய்ய வேண்டும் ? என்று சொல்லித் தாருங்கள் என்றான் .

அதற்கு அவர்

அழகானவளை முடிக்காதே! அடுத்தவன் அவள் மீது ஆசைப்படுவான் .

அலங்கோலமானவளை முடிக்காதே! உனக்கே அவள் மீது வெறுப்பு ஏற்பட்டுவிடும் .

உயரமானவளை முடிக்காதே! நீ எட்டி பார்க்க வேண்டி வரும் .

குட்டையானவளை முடிக்காதே! அவளுக்காக தலை குனிய வேண்டி வரும்.  !

பருமனானவளை முடிக்காதே !உன் மேல் முட்டினால் காயம் ஏற்படும் !

மெலிவானவளை முடிக்காதே! உன் கண்ணுக்கு அவளைக் காண மாட்டாய் !

வெள்ளையானவளை முடிக்காதே ! மெழுகுவர்த்தி தான் ஞாபகத்துக்கு வரும்

கறுத்தவளை முடிக்காதே! இருட்டில் பேய் என்று பயப்படுவாய் !

படிக்காதவளை முடிக்காதே! நீ கூறுவதை அவள் புரிந்து கொள்ள மாட்டாள்

படித்தவளை முடிக்காதே! உன்னிடம் விவாதத்துக்கு வருவாள் !

பணக்காரியை முடிக்காதே ! எடுத்ததற்கெல்லாம் எனது பணம் என்பாள் !

ஏழையை முடிக்காதே! உனது மரணத்தின் பின்னர் உனது குழந்தை சிரமப்படும் !

அதிகம் அன்பானவளை முடிக்காதே! உன் மரணத்தின் பின் வேறு ஒருவனிடம் அன்பு திரும்பி விடும் !

கோபக்காரியை முடிக்காதே! உன் வாழ்க்கை நரகமாகி விடும்  !

அனைத்தும் தெரிந்தவளை முடிக்காதே! உண் பணத்தை கரைத்து விடுவாள் !

ஒன்றும் தெரியாதவளை முடிக்காதே! நீ வீட்டு வேலைக்காரனாகி விடுவாய் !

அமைதியானவளை முடிக்காதே! நீ செத்தாலும் அமைதியாகவே இருப்பாள் !

ஆர்ப்பரிப்பவளை முடிக்காதே! ஒரு பூச்சிக்கும் ஊரைக்கூட்டி விடுவாள் !

ஊருக்குள் முடிக்காதே! தாய் வீட்டில் கோழி முட்டையிட்டாலும் பார்க்கப்போவாள் !

தூரத்தில் முடிக்காதே உன் வாழ்க்கை பிரயாணத்தில் கழியும் !

என்று உபதேசித்தார் !

வந்த வாலிபன் ஏன் பெரியவரே சுருக்கமாக திருமணமே முடிக்க வேண்டாம் என்று சொல்லியிருக்கலாமேஎன்றான் கோபத்துடன்!

வாழ்க்கை போதனை.....

அற்புதமான வாழ்க்கை போதனை.....

இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது,,,,

சீன அறிஞர் எழுதியது,அது தமிழாக்கத்தில்.......!!!

வாழ்வென்பது உயிர் உள்ளவரை.........!!!

தேவைக்கு செலவிடு........

அனுபவிக்க தகுந்தன அனுபவி......

இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய்......

இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை......

போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை......

ஆகவே.......அதிகமான சிக்கனம் அவசியமில்லை. .

மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே...

உயிர் பிரிய தான் வாழ்வு...... ஒரு நாள் பிரியும்.....

சுற்றம், நட்பு, செல்வம் எல்லாமே பிரிந்து விடும்.

உயிர் உள்ளவரை, ஆரோக்கியமாக இரு......

உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே.....

உன் குழந்தைகளை பேணு......

அவர்களிடம் அன்பாய் இரு.......

அவ்வப்போது பரிசுகள் அளி......

அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே........

அடிமையாகவும் ஆகாதே.........

பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட
பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ,சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க
இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்.......!!!

அதைப்போல

பெற்றோரை மதிக்காத குழந்தைகள்

உன் சொத்து பங்கீட்டுக்கு-சண்டை போடலாம்......

உன் சொத்தை தான் அனுபவிக்க,
நீ சீக்கிரம் சாக வேண்டுமென,
வேண்டிக் கொள்ளலாம்
பொறுத்து கொள்.

அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்,
கடமை ,அன்பை அறியார்

அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி என அறிந்துகொள்.

இருக்கும்போதே குழந்தைகளுக்கு கொடு,

ஆனால்......
நிலைமையை அறிந்து
அளவோடு கொடு

எல்லாவற்றையும் தந்துவிட்டு, பின்
கை ஏந்தாதே,

எல்லாமே இறந்த பிறகு என,உயில் எழுதி
வைத்திராதே

நீ
எப்போது இறப்பாய் என-எதிர்பார்த்து
காத்திருப்பர்.

எனவே கொடுப்பதை கொடுத்து விடு,
தரவேண்டியதை பிறகு கொடு.

மாற்ற முடியாததை மாற்ற முனையாதே,

மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே.....!!!

அமைதியாக மகிழ்ச்சியோடு இரு.......

பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு..

நண்பர்களிடம் அளவளாவு.

நல்ல உணவு உண்டு.....

நடை பயிற்சி செய்து.....

உடல் நலம் பேணி......

குடும்பத்தினர்-நண்பர்களோடு கலந்து உறவாடி மனநிறைவோடு வாழ் இன்னும்......

இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள். சுலபமாக ஓடிவிடும்...!!

வாழ்வை கண்டு களி...!!
ரசனையோடு வாழ்.....!!

வாழ்க்கை வாழ்வதற்கே,....!!

Sunday, January 1, 2017

நிரூபியுங்கள் நீங்கள் யார் என்று ?



தாயிடம் நிரூபியுங்கள்*- கடைசி வரை அன்பாக இருப்பேன் என்று.

தந்தையிடம் நிரூபியுங்கள் - கடைசி வரை உங்கள் பெயரை காப்பாற்றுவேன் என்று.

மனைவியிடம் நிரூபியுங்கள் - கடைசி வரை என் காதல் உனக்கானது மட்டும் என்று.

சகோதரனிடம் நிரூபியுங்கள்- கடைசி வரை உனக்கு உறுதுணையாய் இருப்பேன் என்று.

சகோதரியிடம் நிரூபியுங்கள் - கடைசி வரை உனக்கு செய்யும் சீர் ஒரு சுமையே இல்லை என்று

மகனிடம் நிரூபியுங்கள் -கடைசி வரை உலகமே எதிர்த்தாலும் நான் உன் பக்கம் என்று

மகளிடம் நிரூபியுங்கள் - கடைசி வரை உன் கண்ணில் நீர் வழிந்தால் என் கண்ணில் ரத்தம் வரும் என்று

வேறு எவருக்கு நீங்கள் எதை நிரூபித்தாலும் அது கடலில் கொட்டிய பெருங்காயமே. —

Thanks to Parasuram

Thursday, December 29, 2016

காலாவதியான கேஸ் சிலிண்டரை உபயோகித்தால் ............?

தனது திருமணத்திற்காக எடுத்த விடுமுறைகள் முடிந்து, தனது காவல் நிலையத்திற்கு சென்று மகிழ்ச்சியுடன் வேலை செய்ய தொடங்கினார் அந்த சப் இன்ஸ்பெக்டர். 

காவல்நிலையத்திற்கு அருகே வீடு, இனி சரியான வேளையில், சரியான உணவை உண்ணலாம் என கனவில் மிதந்து கொண்டு இருக்கிற வேளையில், அவன் முன் இருந்த போன் அலற தொடங்கியது.

போனை எடுத்த சில நொடிகளில், பதற்றத்துடன் " உடனே அந்த இடத்துக்கு வந்துரேன் " எனக் கூறி இணைப்பினை தூண்டித்து, உடனே தடயவியல் நிபுணர் குழுவிற்கு தகவல் தெரிவித்தார். அடுத்த 10 நிமிடத்தில் தீ சூழ்ந்த அந்த இடத்தை காவல் குழுவினரும், தடயவியல் நிபுணர் குழுவினரும் அடைந்த போது, அங்கே தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்க போராடி கொண்டு இருந்தனர். சைரன் ஒலியுடன், ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருந்தது. சில நிமிட போரட்டத்திற்கு பிறகு அந்த வீட்டில் எரிந்த தீ அணைக்கப்பட்ட உடன், சப் இன்ஸ்பெக்டர், தடயவியல் நிபுணர் குழுவுடன், புகை மண்டலத்துடன், நிசப்தமாக இருந்த வீட்டினுள் நுழைந்தார்.

வீட்டினுள் யாரேனும் உள்ளனரா என கவனமாக பார்த்து கொண்டு இருக்கும் வேளையில், சமையலறை பகுதியில் இருந்து," என்னங்க, என்னங்க " என மெல்லிய குரல் கேட்க தொடங்கியது. பதற்றத்துடன் சப் இன்ஸ்பெக்டர், சமையல் அறை பகுதியை அடைந்ததும், அவரின் கை கால்கள் நடுங்கியது. முழுவதும் தீயினால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்த கணவனின் உடலருகே, 90% தீயினால் பாதிக்கப்பட்ட மனைவி, கணவனை அழைத்தவாறு கிடந்தாள். அடுத்த சில நொடிகளிலே, இருவரும் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டனர். அவர்களுடன் சப் இன்ஸ்பெக்டரும், ஆம்புலன்சில் ஏறினார். வாழ்வில் முதல் முறையாக, ஒருவர், உயிருக்கு போராடுவதை காண முடியாமல் தவித்தார். காவல் துறை வழக்கப்படி, வாக்குமூலம் பெற வேண்டிய கட்டாயத்தில், மனவேதனையுடன், உயிருக்கு போராடி கொண்டு இருந்த பெண்ணிடம், தீ விபத்து எப்படி நடந்தது, என கேட்க தொடங்கினார்.

அதற்கு அப்பெண், " எங்களுக்கு கல்யாணம் ஆகி மூன்று மாதம் தான் ஆகுது. நேத்து தான் இந்த வீட்டுக்கு குடி வந்தோம். நேத்து பால் காச்சுன போது, எதிர்பாரத விதமா, சூடான பால் என் கையில கொட்டிடுச்சு. எனக்கு சிரமம் கொடுக்க வேணாம்னு நெனச்ச என் கணவர், இன்னைக்கு சமையல, அவரே பண்ணுறேனு சொன்னாரு. நான் சமையலுக்கு தேவையான பொருள்களை வாங்கிட்டு வீட்டுக்குள்ள நூழையறப்ப தான் அந்த கோர சம்பவம் என் கண் முன்னாடி நடந்துச்சு. பெரிய வெடி சத்ததுடன் வந்த தீ, என் கணவர் மேல பட்டு எரிய ஆரம்பிச்சு. நான் அவர காப்பாத்த போனப்ப, என் மேலயும் தீ பரவிடுச்சு. எங்க வீட்டுல இருந்த கேஸ் ஸ்டவ்வு, கேஸ் ட்யூபு, ரெகுலேட்டரு எல்லாமே புதுசு தான். எல்லாமே சரிய இருந்தும் எப்படி வெடிச்சதுனு தெரியல. தயவு செஞ்சி என்னைய காப்பாத்திடாதீங்க. " என கூறிய சில நிமிடங்களில், அவள் தன்னுடைய கணவனை சொர்க்கத்தில் சந்தித்தாள். ஆம்புலன்ஸ் மருத்துவமனையை அடைந்தது. விபத்து தொடர்பாக, உயர் அதிகாரியை சந்திக்க, காவல் நிலையம் வந்த போது, சப் இன்ஸ்பெக்டர் மொபைலுக்கு, தடயவியல் நிபுணரிடம் இருந்து போன் கால் வந்தது. போனில் தடயவியல் நிபுணர், விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டதையும், எவ்வாறு நடந்தது என விவரித்ததும் பீதியுற்றார்.

காலண்டரில் தேதியைப் பார்த்தார். 10, அக்டோபர், 2016. உடனே தனது மனைவிக்கு கால் செய்தார். அவள் போனினை எடுக்கவில்லை. பதற்றத்துடன் வீட்டை நோக்கி ஓடினார். வீட்டை அடைந்ததும், சமையலறைக்குள் வேகமாக சென்று, சிலிண்டரின் மேல் பகுதியினை பார்த்தார். அதில் B-16 என எழுதப்பட்டு இருந்தது. உடனே, அந்த சிலிண்டரை அப்புறப்படுத்தி, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம், போன் செய்து, காலாவதியான சிலிண்டரை திரும்ப பெற்று கொள்ளுமாறு கூறி நிம்மதி அடைந்தார்.

நம் வீட்டில் உபயோகிக்கும் சிலிண்டர்களுக்கு Expiry Date உள்ளது. அது cylinder body ஐயும், Top ring பகுதியையும் இணைக்கும் மூன்று Metal strip இல், ஏதாவது ஒன்றில், உட்புறமாக, A to D எழுத்தில், ஏதேனும் ஒரு எழுத்தில், ஏதாவது ஒரு எண்ணுடன் சேர்க்கப்பட்டு, பெயின்டில் எழுதப்பட்டிருக்கும்.

அதை புரிந்து கொள்ளும் முறை.

A - January to March

B - April to June

C - July to September

D - October to December

எண்கள் - வருடத்தை குறிக்கும்

B-16 என்றால் June, 2016 கழித்து அந்த சிலிண்டரை நாம் உபயோகிக்க கூடாது.

ஒரு வேளை காலாவதியான கேஸ் சிலிண்டரை உபயோகித்தால், அந்த சிலிண்டரில் இருந்து, எந்த நேரத்திலும், கேஸ் கசிவு ஏற்பட்டு, நம் உயிரை அது பறிக்கும். கேஸ் சிலிண்டர் வாங்கும் போது Expiry date ஐ சரி பார்த்து வாங்கினால், சமையல் மட்டும் அல்ல , நமது வாழ்க்கையும் இனிமையாக அமையும். ( படத்தில் உள்ள சிலிண்டர், டிசம்பர் 2017ல் காலாவதியாகும். இன்றே உங்களது வீட்டில் உள்ள சிலிண்டரின் Expiry Date – ஐ சரி பார்த்துக் கொள்ளவும்)

பொதுப்பணித்துறை அமைச்சர் கறை படியாத தலைவர் "கக்கன்" !

தமிழகத்தின் முதல்வராக காமராஜர் இருந்தபோது, பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார் கக்கன். தனது துறை சார்ந்த பணி தொடர்பாக மதுரைக்கு வந்தார். அப்போது இரவு 11 மணி ஆகிவிட்டது. தங்குவதற்காக அரசு பயணியர் விடுதிக்குச் சென்றார். ஆனால் அங்கே ஏற்கெனவே வேறு ஒரு துறையைச் சேர்ந்த அதிகாரி தங்கியிருந்தார். கக்கனைப் பார்த்ததுமே பதறிப்போன பயணியர் விடுதி மேலாளர், ‘அந்த அதிகாரியை, ஒரு தனியார் விடுதியில் தங்கிக்கொள்ளச் சொல்கிறேன்’ என்றிருக்கிறார்.
images for congress pwd minister kakkan க்கான பட முடிவு 
உடனே கக்கன் அதை மறுத்துவிட்டு, ‘இந்தப் பயணியர் விடுதி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்பது சரிதான். விதிகளின்படி சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சருக்குத்தான் இங்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என்பதும் முறைதான். ஆனாலும் இப்போது தங்கியிருப்பவர் எனக்கு முன்பே வந்துவிட்டவர். தவிர, தனது பணிகளை முடித்துவிட்டு அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் அவரை இந்த நேரத்தில் எழுப்பி சிரமப்படுத்தவேண்டாம். நான் என் தம்பி வீட்டுக்குப் போய் தங்கிக்கொள்கிறேன்’ என்று அமைதியாகச் சொல்ல, உடன் வந்த அதிகாரிகளும் விடுதி மேலாளரும் அப்படியே நெகிழ்ந்து அமைதியாகிவிட்டனர். சொன்ன கையோடு கக்கன் கிளம்பிப்போய், அதே மதுரையில் தனது தம்பியின், ‘சிங்கிள் பெட்ரூம்’ வீட்டில் தங்கிக்கொண்டார்.
images for congress pwd minister kakkan க்கான பட முடிவுகக்கனின் உடன்பிறந்த சகோதரர் விஸ்வநாதன்.சிறந்த தடகள வீரர். உரிய தகுதிகளின் அடிப்படையில் விஸ்வநாதனுக்கு காவல்துறையில் வேலை கிடைத்தது. கக்கன் அப்போது உள்துறை அமைச்சர் என்பதால் காவல்துறையும் அவர் பொறுப்பில்தான் இருந்தது. அண்ணனைப் பார்த்து தனக்கு போலீசில் வேலை கிடைத்திருப்பதை சொன்னார் விஸ்வநாதன். இதைக் கேட்டதுமே, ‘அப்படியா’ என்று சந்தோஷப்பட வில்லை கக்கன். மாறாக ‘தம்பி, உன் தகுதியின் அடிப்படையில் நீ நேர்மையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், நான் சிபாரிசு செய்துதான் இந்த வேலை உனக்கு கிடைத்திருப்பதாக பேச்சு வரும். ஆகவே, வேறு வேலைக்கு முயற்சி செய்’ என்று அழுத்தமாகச் சொல்ல... அதிர்ந்து போனார் விஸ்வநாதன். அதோடு நிற்காமல் அப்போது காவல்துறை ஐ.ஜி.யாக இருந்த அருளிடம் தகவலைத் தெரிவித்து, விஸ்வநாதனுக்கான பணி உத்தரவையும் ரத்து செய்யச் சொல்லி விட்டார் கக்கன்.

எளிமை, நேர்மை, உண்மை இந்த மூன்று அருங்குணங்களையும் உயிர் பிரியும் நாள் வரை தன் உயிரென மதித்துக் காத்த கக்கன், மதுரை மாவட்டம் மேலூரில் பிறந்தவர்.

images for congress pwd minister kakkan க்கான பட முடிவு
பிறப்பு என்பது தற்செயலாக நடக்கும் இயற்கை நிகழ்வு. இதில் பெருமை படவோ அல்லது சிறுமை கொள்ளவோ எதுவுமில்லை. சுய (சொந்த) சாதி பெருமை பேசுவதும் சக மனிதனை தன்னை விட தாழ்தவன் என்று கருதுவதும் ஒரு வகையான 😨மன நோய்😬


கக்கன் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தவர்.ஆனாலும் சாதி அடையாளம் தன்மீது வராமல் பார்த்துக்கொண்டார். சேவாலயம் என்ற ஹாஸ்டலில் வார்டனாக இருந்தார். இளம் வயதிலேயே இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுக் கைதாகி, ஒன்றரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். பின்னர் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராகி, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் உள்துறை, பொதுப்பணித்துறை உட்பட பல முக்கிய துறைகளின் அமைச்சராக 10 ஆண்டுகள் பணியாற்றியவர்.

இவ்வளவு சிறப்புகளுக்குரிய கக்கன் 1962-ஆம் ஆண்டு தேர்தலில் தனது சொந்தத் தொகுதியான மேலூரில் திமுக வேட்பாளரிடம் தோற்றது அதிர்ச்சிக்குரியது.(நாம் நடிகர் கருணாஸ் போன்ற தியாகிகளை ஜெயிக்க வைப்பவர்கள் ) அதன்பிறகு தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார். சொந்த வீடு இல்லாததால் வாடகை வீட்டில்தான் குடியிருந்தார். சாமானிய மக்களுடன் ஒருவராகப் பேருந்தில் பயணித்தார். இதுகுறித்து செய்திகள் வந்தன. மக்கள் நொந்தனர். கக்கன் மீது அனுதாபம் பொங்கியது. ஆனால் இதற்கெல்லாம் ஒரே பதிலாக கக்கன் சொன்னார்: 

எனது வசதிக்கு என்னால் எதைச் செய்துகொள்ள முடியுமோ அதைச் செய்கிறேன். இதில் எனக்கொன்றும் கஷ்டமில்லை’
தன் வாழ்க்கைக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்த இந்தத் தியாகச் சீலரை, வாழ்நாளின் கடைசி நாட்களில் வறுமையும், நோயும் சேர்ந்து வாட்டியது. கேரள மாநிலத்தில் உள்ள கோட்டக்கல் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற பண வசதி இல்லாததால் பாதியிலேயே ஊர் திரும்பி விட்டார் கக்கன்.

1 மே 1980... இந்த நாள் ஏற்படுத்திய அதிர்ச்சியால்தான் அந்தத் தலைவரின் நிலையை நாடே அறிந்து விக்கித்துப்போனது. மதுரையில் நடந்த மே தின விழாவில் கலந்துகொள்ள மதுரை வந்திருந்தார் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். இதனிடையே மதுரை அரசு மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மேயர் மதுரை முத்துவை பார்ப்பதற்காக எம்.ஜி.ஆர். மருத்துவமனைக்கு வந்தார். அவரை நலம் விசாரித்துவிட்டு, வெளியே வந்தவர், காரில் ஏறுவதற்காகத் தயாரானார்.

அப்போது அவருடன் வந்திருந்த அமைச்சர் காளிமுத்து லேசான தயக்கத்தோடு,

‘அண்ணே! முன்னாள் அமைச்சர் கக்கன் ஒரு மாசமா இங்கேதான் அட்மிட் ஆகி இருக்காரு’ என்று சொல்ல... திடுக்கிட்டுப்போன எம்.ஜி.ஆர். ‘அப்படியா? இதை ஏன் முதலிலேயே என்னிடம் சொல்லவில்லை? ஐயா எந்த வார்டில் இருக்கிறார்?’ என்று கேட்டார். அங்கிருந்த யாருக்கும் கக்கன் எந்த வார்டில் இருக்கிறார் என்ற தகவல் தெரியாததால் தர்ம சங்கடத்தோடு நின்றனர். எல்லோரையும் கடிந்துகொள்வது போல் பார்த்த எம்.ஜி.ஆரின் முகம் மேலும் சிவக்கிறது.நல்லவேளையாக சற்றுத் தள்ளியிருந்து ஒரு குரல் வந்தது: ‘ஐயா! அவங்க 24-ஆம் நம்பர் வார்டுல இருக்காங்கய்யா’ யாரென்று எம்.ஜி.ஆர். ஏறிட்டுப் பார்க்க... குரல் கொடுத்தவர், மருத்துவமனையின் துப்புரவுத் தொழிலாளி. அவரை அழைத்து தோளில் தட்டிக்கொடுத்த எம்.ஜி.ஆர்., ‘அந்த வார்டைக் காட்டுங்க’ என்று சொல்லி, தொழிலாளியைப் பின்தொடர்ந்து சென்றார்.

மருத்துவமனைக்குள் திரும்பவும் எம்.ஜி.ஆர். வருவதைப் பார்த்து எல்லோரும் பரபரப்பானார்கள். 24-ஆம் நம்பர் வார்டில் எம்.ஜி.ஆர். நுழைந்தார். அந்த சாதாரணப் பொது வார்டில் ஒரு சின்ன அறையில், வெறும் தரையில் படுத்திருந்த கக்கனுக்கு, எங்கிருந்தோ திடீரென இரண்டு நாற்காலிகள் அந்த அறைக்குள் கொண்டு வந்து போடப்பட்டதன் காரணம் புரியாமல் பார்த்தவரிடம் விஷயம் சொல்லப்பட்டு, நாற்காலியில் அமரவைக்கப்பட்டார்.

உள்ளே நுழைந்த எம்.ஜி.ஆரைப் பார்த்ததுமே இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே கட்டியிருந்த கக்கன், தோளில் ஒரு துண்டைப் போர்த்திக்கொண்டு, நாற்காலியில் இருந்து தடுமாறியபடி எழுந்து நிற்க முயல... கக்கனைத் தடுத்து ஆதரவாக அணைத்துக்கொண்டு உட்கார வைத்த எம்.ஜி.ஆர்.,

எதிரில் உள்ள நாற்காலி தானும் அமர்ந்தார். ‘தன்னலமற்ற ஒரு தலைசிறந்த ஒரு தலைவர் இப்படி முக்கால் நிர்வாணக் கோணத்தில்’ இருப்பதைப் பார்த்த எம்.ஜி.ஆர்., கக்கனின் கைகளைப் பற்றிக்கொண்டு கண்கலங்க... அதைப் பார்த்து எதுவுமே பேச முடியாமல் கக்கனும் கண் கலங்க... இந்தக் காட்சியைக் கண்டு சுற்றி நின்ற அனைவருமே அவரவர் கண்களைத் துடைத்துக்கொள்ள... அந்த இடமே உணர்ச்சிவசத்தால் உருகியது.

கக்கனின் கைகளை விடாமல் பற்றிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., ‘உங்களுக்கு நான் என்ன செய்யணும்?

சொல்லுங்க. உடனே செய்கிறேன். இப்பவே ஸ்பெஷல் வார்டுக்கு மாற்றச் சொல்றேன்’ என்றார் அக்கறையாக. ஆனால் கக்கனோ, ‘அதெல்லாம் வேண்டாம். நீங்க தேடி வந்து என்னைப் பார்த்ததே சந்தோஷம்’ என்றார். இதைக்கேட்டு வார்த்தை வராமல் சில நிமிடங்கள் அமைதியாக இருந்த எம்.ஜி.ஆர். கிளம்பும்போது, ‘என்ன உதவி வேண்டுமானாலும் எனக்குத் தெரியப்படுத்துங்கள், அவசியம் செய்கிறேன்’ என்று வணங்கி விடை பெற்றார்.


கக்கனின் மீது எம்.ஜி.ஆர். கொண்ட அக்கறையும் மரியாதையும் அவர் சென்னை திரும்பிய சில நாட்களிலேயே நாட்டுக்கே தெரிந்தது. ‘முன்னாள் அமைச்சர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை, இலவசப் பேருந்துப் பயணம் போன்றவை வழங்கப்படும்’ என உத்தரவிட்டார் முதல்வர். கூடவே கக்கனுக்கு ஓய்வூதியம் வழங்கவும் ஆவன செய்தார்.

அதன்பின்னர், சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட கக்கனுக்கு நவீன வசதிகளுடன் கூடிய ஒரு படுக்கையையும் எம்.ஜி.ஆர். வழங்கினார். அத்தனை சிகிச்சைகள் அளித்தும், 23 டிசம்பர் 1981-இல் நினைவு திரும்பாமலேயே காலமானார் கக்கன்.

கல்லை வெட்டி, மணலைக் கடத்தி, நிலத்தை வளைத்து, மக்கள் பணத்தைச் சுரண்டி வாழ்கிற எத்தனையோ ஊழல் தலை(வர்)களின் பெயர்கள் குற்றப்பத்திரிகைகளில் இருக்க... ‘குறை சொல்ல முடியாத மனிதர், கறை படியாத தலைவர்’ என்று தமிழக அரசியல் வரலாறு, தனது கல்வெட்டில் காலத்துக்கும் அழியாதபடி பொறித்து வைத்திருக்கிறது கக்கனின் பெயரை!

Friday, December 23, 2016

இந்தியா மற்றும் இந்தியர்களை பற்றி !

இந்தியா மற்றும் இந்தியர்களை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லாத பல விசயங்கள்..!!!*

1. அமெரிக்காவில் உள்ள மருத்துவர்களில் *33%*பேர் இந்தியர்கள்.

2. அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகளில் *12%* பேர் இந்தியர்கள்.

3. உலகில் உள்ள ஐ.பி.எம் (IBM) நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் *23%* பேர் இந்தியர்கள்.

4. அமெரிக்க விண்வெளித்துறை நாசா"வில் (NASA) பணிபுரிபவர்களில் *36%* பேர் இந்தியர்கள்.

5. உலகில் உள்ள இன்டெல் (INTEL) நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் 17% பேர் இந்தியர்கள்.

6. உலகில் உள்ள மைக்ரோசாப்ட் (MICRO SOFT) நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் 34% பேர் இந்தியர்கள்.

7. *உலகின் அனைத்து மொழிகளுக்கும் வேராக முதல் தோன்றிய மொழி என்று எடுத்துக்கொள்ளப்படும் தமிழ் ஒரு இந்திய மொழி..*

8. சமஸ்கிருதம் (SANSKRIT) தான் அனைத்து ஐரோப்பிய மொழிகளுக்கும் வேர் மொழி.

9. ஹாட் மெய்ல்"ஐ (HOT MAIL) உருவாக்கியவரும் ஸ்தாபித்தவருமான சபீர் பாட்டியா (SABEER BHATIA) ஒரு இந்தியர்.

10. பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தவரான ஆர்யபட்டா (ARYABHATTA) ஒரு இந்தியர்.

11. எண்ணியல் முறையை உருவாக்கியவர்கள் இந்தியர்கள்.

12. அல்ஜீப்ரா"வை (ALGEBRA) உருவாக்கியவர்கள் இந்தியர்கள்.

13. சதுரங்க (CHESS) விளையாட்டை உருவாக்கியது இந்தியா.

14. இந்தியாவின் சமஸ்கிருத மொழி கணிணி மொழியுடன் மிகவும் ஒத்து போவதாக போர்ப்ஸ் (Forbes magazine) பத்திரிக்கை 1987"ல் அறிவித்தது.

15. நுண் கணிதம் (CALCULUS) உருவாக்கியது இந்தியா.

16. திரிகோணமிதி (TRIGNOMETRY) உருவாக்கியது இந்தியா.

17. கூகுள்"ன் (GOOGLE) தற்போதைய தலைமை செயல் அதிகாரி (CEO) சுந்தர் பிச்சை ஒரு இந்தியர்.

18. ஹெச்.பி"யின் HEWLETT PACKARD (HP) பொது மேலாலர் ராஜீவ் குப்தா ஒரு இந்தியர்.

19.
*ஜல்லிக்கட்டு* *எதிர்ப்பு* *ஏன்* *?*

சர்க்கரை நோய் இந்தியாவில் ஜெர்சி பால் மூலமே பரப்பப்பட்டது

Diabetic cause cow milk என்று கூகுளில் அடியுங்கள் உண்மை விளங்கும்

வருடத்திற்கு சர்க்கரை நோய் மருந்து விற்பனை மட்டும் அமெரிக்க நிருவனங்களுக்கு
375 லட்சம் கோடி

அமெரிக்க அடிமைகள் ஏன் துடிக்கிறார்கள்

நாட்டு பசும்பால் சர்க்கரை உட்பட பல நோயை தடுக்கிறது

ஜல்லிக்கட்டு காளையை அழித்தால்

அயல் விந்து ஊசி மூலம் நாட்டு பசுவை அழிக்கலாம்

இப்போது புரிகிறதா?

மன்மோகன்சிங் முதல் ஜெய்ராம்ரமேஷ் வரை

அரசியல் கட்சிகள் முதல் அமெரிக்க NGO வரை

மேலைநாடுகள் எல்லாம் சேர்ந்து எதிர்க்கும் ரகசியம்

பத்து ஊரில் நடக்கும் ஜல்லிக்கட்டு எதிர்த்து நூறு நாடுகள் போராடும் ரகசியம்

(இந்த கேசில் பீட்டா சார்பாக வாதாடிய வக்கீல்களுக்கு 2.5கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம்)

Friday, December 2, 2016

அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வோம்❗

🌹 வாழ்வின் எதார்த்தம் 🌹

🌴நாம் இறந்த அடுத்த நொடியே நம்முடைய உயிர் ஆத்மாவாக மாறி
வெளியே நின்றபடி நம்மை வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிடும்.

🌴கொஞ்ச நேரத்தில் எப்படியாவது நாம் இறந்த செய்தி நம் வீட்டுக்கு போய்விடும்,
எல்லோரும் கதறியழுது காத்திருப்பார்கள்,

🌴நம்மை வேடிக்கை பார்க்க ஊரே திரண்டு நிற்கும்,
உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் உடனே தகவல் சென்றுவிடும்,

🌴இவ்வளவு நாள் நேராக வீட்டுக்குள் சென்ற நம்மை இன்று வாசலிலேயே வைத்துவிடுவார்கள்,

🌴இத்தனைக்கும் அந்த வீட்டை நாம்தான் பார்த்து பார்த்து கட்டியிருப்போம்,
எல்லாம் நேரம்!

🌴ஆளுக்கொரு பக்கம் மார்பிலும் தலையிலும் அடித்துக்கொண்டு அழுவார்கள், வருகின்ற நண்பர்களையும் உறவினர்களையும்கூட கட்டிக்கொண்டு அழுவார்கள், நமக்கு ஒன்றுமே புரியாது,

🌴அவர்கள் அழுவதை பார்த்து கஷ்டமாக இருந்தாலும் உள்ளுக்குள் சந்தோஷமாக இருக்கும் நம்மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்களே என்று!

🌴உங்களைவிட்டு எங்கும் போகமாட்டேன் எப்போதும் உங்களுடன் இருப்பேன் என்று ஆறுதல் சொல்லி கண்ணீரை துடைக்கவேண்டும் என்று துடியாய் துடிப்போம்.

🌴ஆனால் எதுவுமே முடியாது. அதுதான் மரணத்தின் மிகமோசமான துயரம்!

🌴பாவம் எல்லோரும்
tired ஆகி tired ஆகி அழுதுகொண்டே இருக்கிறார்கள் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது!

🌴இதோ நாம் எதிர்பார்த்த
அந்த freezer box வந்துவிட்டது, கோடைவெயிலுக்கு சும்மா குளுகுளு என்று இருக்கும்.

🌴ஆனால் நம்மால் தான் உணரமுடியாது, ஒருவழியாக உள்ளே தள்ளி அடைத்துவிட்டார்கள், இருட்டிக்கொண்டதால் வெளியே campfire ம் போட்டுவிட்டார்கள்.

🌴விடியவிடிய விழித்திருந்து உறங்கலாம் என்று நினைக்கும்போது தாரைதப்பட்டையுடன் ஒரு குரூப் வந்துவிட்டது,

🌴சொந்தபந்தங்கள் எல்லாம் வரத்தொடங்கிவிட்டன பாவிமக்கள் இந்த பாசத்தையெல்லாம் எங்கு வைத்திருந்தார்களோ தெரியவில்லை

🌴அழுதுகொண்டே ஓடிவருகிறார்கள், இவ்வளவு நேரத்திற்கு பிறகு தமிழில் நமக்கு பிடிக்காத அந்த வார்த்தையை ஒருவன் சொன்னான்,
'பொணத்தை ' கொஞ்சம் தள்ளிவைங்க பந்தல்போடனும்,

🌴நம்ம அப்பா எவ்வளவு அழகா பெயர் வச்சிருந்தாலும் செத்தபின்னாடி பத்துகாசுக்கு தேறாது!

🌴கூட்டம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது, நம் பகையாளிகள் கூட நம்மை ரொம்ப நல்லவன் என்று certificate தருகிறார்கள்,

🌴ஒருபக்கம் தாரை தப்பட்டை
இன்னொரு பக்கம்
மக்கள் வெள்ளத்தில் மாலை மரியாதைகள் இன்னொரு பக்கம் பட்டாசுசத்தம், எல்லாம் இருந்தும் என்ன பிரயோஜனம்!?

🌴அத்தனைபேரு முன்னாடி அரைகுறை dress சோட நம்மை குளிக்கவச்சி மானத்தை வாங்கிட்டாங்களே!!

🌴என்ன பண்றது
பொணமா பொறந்தாலே இப்படிதான்!
ஒருவழியாக எரிப்பதற்கோ புதைப்பதற்கோ எடுத்துசெல்கிறார்கள்

🌴இவ்வளவு நாள் நாம் போட்ட ஆட்டத்தையெல்லாம் சேர்த்து நாலுபேர் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள்!
கடைசியில் நம்மை எரித்தேவிட்டார்கள்!

🌴இனி எங்காவது நாய் ஊளையிட்டால் கூட நாம்தான் வந்திருக்கிறோம் என்று புலுக ஆரம்பித்துவிடுவார்கள்!

🌴அடுத்த நாள் வீட்டுக்கு சென்று பார்த்தால்
அழுகை குறைந்து விசும்பலாகிவிட்டிருக்கும்
அதற்கு அடுத்த நாள் விசும்பலும் குறைந்திருக்கும்.

🌴இப்படி நாளாக நாளாக நம்மை கொஞ்சம் கொஞ்சமாய் மறந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிடுவார்கள்!

🌴இதில் இன்னொரு சிறப்பு செய்தி என்னன்னா
நாம் இறந்ததை யாரோ
Facebook ல் போட
மொத்தம்
4000 likes(விருப்பங்கள்)
அடப்பாவிகளா,
அப்போ அத்தனைபேரும் எப்போ போவான்னு wait பண்ணிட்டே இருந்தீங்களா?!

🌴ஒவ்வொரு இறப்பின் போதும் எத்தனையோ கனவுகளும் ஆசைகளும்
சேர்ந்தே புதைந்து போகின்றன!

🌴இப்படி ஒவ்வொரு நாளும் சராசரியா உலகம் முழுவதும்
70,000 பேர் உயிர்துறக்கிறார்கள்!

🌴நாளைய விடியல் நமக்கானது என்கின்ற
எந்த உத்திரவாதமும் இல்லாதபோது
நாம் ஏன் பொய்யோடும், பொறாமையோடும், பகையோடும், பாவத்தோடும் நம் வாழ்க்கையை வாழவேண்டும்?

🌴அர்த்தமுள்ள
வாழ்க்கையை வாழ்வோம்❗

Friday, November 25, 2016

மேல்தட்டு மக்களிடம் கற்க வேண்டியவை!

மேல்தட்டு மக்களிடம் கற்க வேண்டியவை!
செல்வம் மற்றும் செல்வாக்கு மிக்கவர்களை பார்த்து, பொறாமை படத் தெரிந்த அளவிற்கு,

 
அவர்களது வெற்றி ரகசியங்களை அறிந்து கொள்ளத் தெரியவில்லை நம்மவர்களுக்கு!

'எவ்வளவு தேறும் இவருக்கு...' என்று கேட்கத் தெரிந்த அளவிற்கு, 'இவர்களைப் போல நாமும் வர வேண்டாமா...' என்று உந்து சக்தியாக பயன்படுத்திக் கொள்ளத் தெரிவது இல்லை.

சிலருடைய அபார வளர்ச்சிகளை பார்க்கும்போது, வெற்றியின் காரணங்கள் பிடிபடுவதில்லை.

'எப்படித்தான் இந்நிலைக்கு வந்தனரோ...' என்று, நம்மை ரொம்பவே யோசிக்க வைக்கின்றனர்.

'சிபாரிசுக்கும், பொருளாதார உதவிக்கும், இவர்கள் எந்த அளவுக்கு நமக்கு பயன்படுவர்...' என்று தான் இவர்களை சுற்றியிருப்போர் கணக்கு போடுகின்றனரே தவிர.. எத்தகைய தனித்திறமைகளால்,  தங்கள் நிலைகளை தக்க வைத்தோ, உயர்த்திக்கொண்டோ செல்கின்றனர் என்கிற ஆராய்ச்சியில், இறங்குவது இல்லை.

நன்கு வளர்ந்தவர்களைப் பொறாமைக் கோணத்துடன் பார்ப்பது வயிற்றில் வைக்கப்படும் நெருப்பை போன்றது.

இது வயிறெரியத்தான் பயன்படுமே தவிர, வேறு பயன் இல்லை.

'என்னோட தான் படிச்சான்;
எப்பவும் கடைசி பெஞ்சுல தான் உட்காருவான்.

இன்னைக்கு என்னடான்னா, எங்கேயோ போயிட்டான். வயிறு பத்திக்கிட்டு எரியுது...' என்று பள்ளித் தோழர் ஒருவர், காதில் புகை வெளிவரும்படி எட்டி நின்று பேசினால், அவர் இன்னும் கீழே போகப் போகிறார் என்று தான் பொருள்.

மாறாக, நெருப்பை நெஞ்சில் வைத்து, அந்த நெருப்பை, நம் வாழ்க்கை நிலை எனும் வாகனத்தை, முன்னோக்கி தள்ளும் எரிசக்தியாகப் பயன்படுத்த வேண்டும்.

'வாடா நண்பா... நல்லா வந்துட்டே...  உன் கூட படிச்சேன்னு சொல்லிக்கவே பெருமையா இருக்கு.

எனக்கும் வாழ்க்கையில் எப்படி ஜெயிக்கிறது, உன்னைப் போல எப்படி முன்னுக்கு வர்றதுன்னு சொல்லித் தரக் கூடாதா...' என்று அண்டிச்சென்று கேட்கிற அணுகுமுறை, எத்தனை பேருக்கு இருக்கிறது?

இப்படி கேட்டே விட்டார் ஒருவர்... உடனே, இதை பாராட்டாகவும், பூரிப்பாகவும் எடுத்து கொண்ட பால்ய நண்பர்,  'நல்ல நேரத்தில் வந்தே... கர்நாடகத்துல ஒரு கிளை திறக்கலாம்ன்னு முடிவு செய்து, யாரை போடலாம்ன்னு யோசிச்சிக்கிட்டிருந்தேன்.

நீதான் என், 'மேனேஜிங் பார்ட்னர்' ஓ.கே. வா?'' என்று கேட்க, திக்கு முக்காடி போனார் நம்மவர்.

இந்தளவிற்கு எல்லாராலும் நிர்வாக பங்குதாரராக முடியாவிட்டாலும், நெருங்கி பழகவாவது இடம் கொடுக்க, இந்த வாய்ப்பை கொண்டே, இவரது வெற்றி சூத்திரங்களை தெரிந்து கொண்டு விடலாம்.

பின் என்ன... புழுவாகக் கிடந்தவர்களின் உடலில், புலியின் ரத்தம் ஏறிய கதைதான்.

'நம்மை பார்த்து பொறாமைப் படும் கூட்டத்தில், இதோ என்னை கதாநாயகன் போல எண்ணி வியக்க ஒருவன் இருக்கிறான்; இவனுக்கு, நம் இதயத்தில் இனி நல்லிடம் தான்...' என்று வளர்ந்தவர்கள் இடம் கொடுக்க, வியந்து பேசியவர் வாழ்க்கையில், புது அத்தியாயம் ஆரம்பிப்பது உறுதிதான்.

'அதெல்லாம் முடியாது... இவன் கிட்டப்போய் எவன் நிப்பான்; நான் மானஸ்தன், தன்மானம் கொண்டவன்...' என்கிற வீராப்பு மனநிலை இருக்குமானால், எட்டி நின்று இவரது வளர்ச்சிகளை வியந்து நோக்கலாம்.

மேல்தட்டு மக்களிடம், நான் பார்த்து வியந்த விஷயங்களை உங்களிடம் கூறுகிறேன்...

இவை உங்களுக்கு பயன்படுமானால் மகிழ்ச்சி.

நன்கு வளர்ந்தவர்கள் அனைவருமே..

வெகு சீக்கிரம் எழுகின்றனர்..

நீண்ட நேரம் உழைக்கின்றனர்..

எப்போதும் வளர்ச்சி வளர்ச்சி என்று அடங்காமல் வலம் வருகின்றனர்..

எந்நேரமும், தொழில் சார்ந்த சிந்தனையாகவே இருக்கின்றனர்...

குறைந்த உழைப்பால், நிறைந்த பலன் கிடைப்பதில் மட்டும் அதிக கவனம் செலுத்துகின்றனர்...

மிகக் குறைவாகவே பேசுகின்றனர்...

வார்த்தைகளை மிக நளினமாக கையாள்கின்றனர்...

பிடிக்காவிடில், பகைத்து கொள்ளாமல், ஒதுங்கி கொள்கின்றனர்...

எது ஒன்றையும், மனம் புண்படாதபடி மறுக்கின்றனர்.

மேல்தட்டு மக்களை வியப்பதை பொறுத்தவரை,
ஒரே ஒரு நிபந்தனை உண்டு.

சிலர், நியாயத்திற்கு புறம்பான வளர்ச்சிகளை அடைந்திருக்கின்றனர் அல்லவா? இவர்களை மட்டும், கரும்புள்ளி வைத்து ஓரங்கட்டி விடுங்கள் போதும்!

வீழ்வதற்கல்ல வாழ்க்கை!

Wednesday, November 16, 2016

உடல்மொழியும் ! அதன் பாதிப்புகளும் !




**உங்கள் முகத்தில் அரிப்போ நமைச்சலோ எடுத்தால் --- உங்கள் கூந்தலில் சுத்தமில்லை என அர்த்தம்.

**உங்களுக்கு வயிற்றுவலியோ வயிற்றாலையோ இருந்தால் --- உங்கள் கைவிரல் நகங்கள் சுத்தமில்லை என அர்த்தம்.

**உங்கள் கண்களோ மூக்கோ தொடர்ந்து அரிக்குமானால் --- உங்களுக்கு ஜலதோசம் பிடிக்கப்போகிறது என அர்த்தம்.

**உங்களது காதில் அதீத குடைச்சலோ வலியோ வந்தால் --- உங்களுக்கு காய்ச்சல் வர நேரம் வந்துவிட்டது என அர்த்தம்.

**உங்கள் கைமடிப்பு,கழுத்து மடிப்பு,கால் இடுக்கில் கருப்பான பட்டை விழுந்தால் --- உங்கள் கணையத்தில் இன்சுலினின் சுரப்பு அதிகமாகிறது என அர்த்தம்.

**உடலில் இன்சுலின் அதிகம் சுரந்து அதிக பசி எடுக்கிறதென்றால் --- அது நீரிழிவின் ஆரம்பம் என அர்த்தம்.

**உங்கள் கால் பாதங்களில் வெடிப்பு உண்டானால்-- - உடலில் அதிக அழுத்தமும் சூடும் இருக்கிறது என அர்த்தம்.

**உங்கள் முழுங்கால் மூட்டு அல்லது கால்களின் மணிக்கட்டு வலியெடுத்தால் --- உடலில் அதிக எடை கூடிவிட்டது அதனை குறைக்கவேண்டும் என அர்த்தம்.

**தொடர்ந்து உங்களது முதுகுத்தண்டு அல்லது இடுப்புப் பகுதி வலிக்குமானால் --- அந்த இரு எலும்புகளும் மிருதுவாகி தேய்மானம் தொடங்குகிறது என அர்த்தம்.

**உங்கள் உதட்டில் அல்லது மேல்தோலில் வெடிப்பு,பிளவு, தோல் உரிதல் உண்டாகுமானால் --- உடலில் நீர்ச்சத்தும் எண்ணெய்பசையும் குறைந்துவிட்டது என அர்த்தம்.

**உங்கள் தோள்பட்டை, முதுகுத்தாரை,குதிங்கால் இவற்றில் இருக்கமோ வலியோ வந்தால் --- உடலில் காற்றின் அழுத்தம் கூடி வாயு தேங்கியுள்ளது என அர்த்தம்.

**உங்கள் கைவிரல் கண்களுக்கு மேல் மெல்லிய கருப்புக்கோடு விழுமானால் --- இருதயத்தில் பிரச்சினை தொடங்குகிறது என அர்த்தம்.

**என்னிடம் இருந்து உங்களுக்கு மெசேஜ் வந்தால் - நல்லதை அறிந்து கொள்ளுங்கள் என அர்த்தம்.

Tuesday, November 15, 2016

3 வழிமுறைகளில் கற்பூரத்தைப் பயன்படுத்திக் கொசுக்கள் நம்மை அண்டவிடாமல் செய்யலாம்.....

கற்பூரம் இயற்கையாகக் கொசுக்களை விரட்டக்கூடிய தன்மை உள்ளதாகும்.

பக்க விளைவுகள் ஏதுமில்லாமல், குறைவான செலவில் கற்பூரத்தைக் கொண்டு கொசுக்களை எளிதாக விரட்டி விடலாம்.

கற்பூரத்தைக் கொளுத்த வேண்டிய தேவையும் கிடையாது.

கீழ்க்கண்ட 3 வழிமுறைகளில் கற்பூரத்தைப் பயன்படுத்திக் கொசுக்கள் நம்மை அண்டவிடாமல் செய்யலாம்.....

1. கடைகளில் விற்கப்படுகின்ற கற்பூரத்தில் இரண்டு வில்லை களை வெற்றுத் தரையில் வைத்திருக்க வேண்டும்.

அப்படி வைக்கப்படுகின்ற ஒரு மணி நேரத்தில் கொசுக்கள் இல்லாமல் போவதைக் கண்கூடாகப் பார்க்கலாம்.

இதுபோன்று காலையிலும் மாலையிலும் இரண்டு முறை செய்யும்போது அந்தப் பகுதிகளில் கொசுக்கள் இல்லாமல் போகும்.

2. அறையின் இரு வேறு மூலைகளில் கொசுக்கள் எங்கெல்லாம் தஞ்சம் அடைகின்றன என்று தெரிகிறதோ அப்பகுதிகளில்இரண்டு கற்பூர வில்லைகளை வைக்கும்போது,அவை சிறிது சிறிதாக ஆவியாகிக் கொசுக்களை விரட்டுவதுடன் காற்றையும் தூய்மைப்படுத்திவிடுகின்றன.

3. அகலமான சிறிய பாத்திரம் அல்லது தட்டில் தண்ணீரை நிரப்பி அதில் இரண்டு கற்பூர வில்லைகளைப் போட்டுவைக்க வேண்டும்.

படுக்கை அறையில் அப்பாத்திரத்தைத் தண்ணீருடன் கற்பூரத்தையும் சேர்த்து வைக்கும்போது,

தண்ணீரில் சிறிது சிறிதாகக் கற்பூரம் கரையும்.

சராசரியான தட்ப வெப்பத்தில் தண்ணீர் ஆவியாகும்போது,அப்பகுதி முழுவதும் கற்பூரத்தின் மணம் பரவும்.

சிறிது வெதுவெதுப்புடன் உள்ள தண்ணீர் என்றால் இச்செயல் இன்னும் வேகமாக இருக்கும்.

அறையின் அளவுக்கு ஏற்றவாறு தண்ணீர் மற்றும் கற்பூரத்தின் அளவு மாறுபடும்.

ஆக, கற்பூரத்தின் தன்மையால் கொசுக்கள் எளிதில் விரட்டப்படுவதை  நேரடியாக உணரலாம்.

செய்து பாருங்கள்....

Monday, November 14, 2016

வீட்டிலும், கோவிலிலும் ஏன் விளகேற்றுகிறோம்!

விளக்கேற்றுவது ஏன் ?



நாம் வீட்டிலும், கோவிலிலும் ஏன் விளகேற்றுகிறோம்!

விளக்கு எரிந்த வீடு வீணாகிப் போகாது’ என்று ஒரு பழமொழி உள்ளது.


எதற்கு என்று தெரியுமா?? 


சுடருக்கு தன்னை சுற்றி உள்ள தேவையற்ற கதிர்களை (நெகட்டிவ் எனர்ஜியை) ஈர்க்கும் ஷக்தி குண்டு! அவ்வாறு ஈர்க்கும் போது! நம்மை சுற்றி பொசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும் நம் சுற்று புறம் தெளிவாகவும் பலத்தோடும் காணப்படும்! 

இரண்டு நாள் வீட்டில் விளக்கேற்றாமல் இருந்தாலே அது புரியும் ஏதோ வீடே மாயணம் போல் தோன்றும் எல்லாருமே சோர்வாய் இருப்பார்கள்! இதுவே விளகேற்றுவதன் தத்துவம்!

நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களில் மூலாதாரமும் ஸ்வாதிஷ்டானமும் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுவதால் தூய்மையடைகிறது. 

அதே போல் மணிபூரகம், அனாஹதம் இரண்டும் நெய்விளக்கு ஏற்ற, தூய்மையடைந்து நற்பலனை அடைகின்றன. நம் உடலில் இருக்கும் நாடிகளில் சூரிய நாடி, சந்திர நாடி, சுஷம்னா நாடி ஆகியவை மிக முக்கியமாகக் கருதப்படுகின்றன. சூரிய நாடி, நல்ல சக்தியையும் வெப்பத்தையும் தருகிறது. சந்திர நாடி, குளுமையைத் தருகிறது. 

சுஷம்னா நாடி, அந்தப் பரம்பொருளுடன் சம்பந்தப்பட்டு, ஆன்மீகப் பாதையை வகுக்கிறது. 

நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற சூரிய நாடி, சுறுசுறுப்பு அடைகிறது. நெய்விளக்கு, சுஷம்னா நாடியைத் தூண்டிவிட உதவுகிறது. பொதுவாகவே நெய் தீபம், சகலவித சுகங்களையும் வீட்டிற்கு நலனையும் தருகிறது.

திருவிளக்கை எப்போது வேண்டுமானாலும் ஏற்றலாம். இதற்கு தடையேதும் இல்லை. ஆனால், பொதுவாக மாலை 6.30க்கு ஏற்றுவதே நமது மரபு. இதை கருக்கல் நேரம் என்பர். 

சூரியன் மறைந்ததும் சில விஷ சக்திகள் சுற்றுச்சூழலில் பரவி வீட்டிற்குள்ளும் வர வாய்ப்பிருக்கிறது. ஒளியின் முன் அந்த விஷ சக்திகள் அடிபட்டு போகும். எனவே அந்நேரத்தில் விளக்கேற்றுகிறோம் என்பது அறிவியல் உண்மை.

ஒரு நாளிதழில் வெளிவந்த நிகழ்வு என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது….

அமெரிக்காவில் இருக்கும் தன் மகனின் வீட்டுக்கு சென்றிருக்கும் ஒரு தாய் சாயந்திரங்களில் தன் மகனும், மகளும் தாமதமாக வீடு சேர்வதை பார்க்கிறார். இருவரும் வேலைக்குச் செல்பவர்கள். ஒரு நாள் மகன் முன்னதாகவும், ஒரு நாள் மருமகள் முன்னதாகவும் வருவார்கள். அவர்களுக்கு இன்னும் குழந்தை இல்லை.

இருவரையும் ஒரு சேர பார்க்க முடிவதில்லை அந்த தாய்க்கு. 

ஒரு்வர் வருவதற்குள் மற்றொருவர் தூங்கியே போயிருப்பார். ஒரு நாள் மகனை அழைத்து தாமதமாக வரும் காரணம் கேட்க

“உனக்கு இதெல்லாம் புரியாதம்மா. எங்கள் இருவருக்கும் பயங்கர ஸ்ட்ரெஸ்!!! இருவரும் கவுன்சிலிங் போய் வருகிறோம். ஒரு மணி நேரத்துக்கு அந்த டாக்டருக்கு கொடுக்கும் தொகை அதிகம். மிகச் சிறந்த மருத்துவர் அவர். எல்லாம் சரியாகி விடும்” என்று சொல்ல நாளை அந்த மருத்துவரை பார்க்க போக வேண்டாமென்றும் சீ்க்கிரம் வீட்டுக்கு வர வேண்டுமென்றும் தாயார் சொல்கிறார்.

அடுத்த நாள் மாலை வீட்டுக்குள் நுழைந்த மகன், மருமகள் இருவரின் மூக்கையும் சுகந்த மணம் துளைக்கிறது.

கைகால் கழுவி, உடை மாற்றி பூஜை அறைக்கு வருமாறு சொல்ல அங்கே செல்கின்றனர் இருவரும்.

மணம் வீசும் மலர்களின் வாசம்…

அழகான தீப ஒளி நிறைந்த அந்த அறையில் சற்று நேரம் அமரச் சொல்கிறார். தாமாகவே கண் மூடி அந்தச் சூழலின்
இன்பத்தை அனுபவிக்கின்றனர் இருவரும்.

கண் திறந்த போது கவுன்சிலிங்கில் கிடைக்காத அமைதி கிடைத்ததாகச் சொல்ல… தாயார் மகிழ்ந்தார்……

குறிப்பு:
********
மெழுகுவர்த்தி ஏற்றக் கூடாது. இதன் புகை உடல் நலத்தை கெடுக்கும் ! ஆஸ்துமா, மார்புபுத்துநோய் இவைகளுக்கு மெழுகு வத்திதான் தாய் ! மண்ணெண்ணை விளக்கும் வேண்டாம்…. 

வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களை தினசரி விளக்கேற்றும்படி கேட்டுக்கொள்ள வேண்டும். 

இப்படி செய்தால் அவர்களின் முகப் பொலிவு பன்மடங்கு கூடும்’ பலருக்கும் பயனுள்ள உபயோகமான தகவல் என்பதால், அதை இங்கு தனி பதிவாக தந்திருக்கிறேன். மேலும் விளக்கேற்றுவதற்கு எந்தெந்த எண்ணைகளை பயன்படுத்தலாம்,  எதை பயன்படுத்தக்கூடாது, என்ன திரிகளுக்கு என்ன பலன், எந்த நேரத்தில் எந்த திசையில் ஏற்றவேண்டும்,போன்ற தகவல்களையும் மேலும் விளக்கேற்றுவது குறித்த வேறு பல தகவல்களையும் திரட்டி
எனக்கு தெரிந்த தகவல்களையும் சேர்த்து தந்திருக்கிறேன். நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

பெண் குழந்தைகள் விளக்கேற்றுவதால் அவர்களின் முகப்பொலிவு கூடும் நம் வீட்டிலுள்ள பெண் குழந்தைகளை அவர்களது தாய்மார்கள் தினமும் விளக்கு ஏற்றும்படி பணிக்க வேண்டும். 

இதில் அவர்களின் இறை பணி மட்டுமில்லாமல் அவர்களின் தேஜசும் (அதாவது முகபொலிவும்) கூடுகிறது.



விளக்கேற்றவேண்டிய நேரம்
*********************************

விடியற்காலையில் சூரியன் உதயமாவதற்குச் சற்று முன்னதாக `பிரம்ம முகூர்த்தம்’ என்கின்ற இரவின் விடியலாகத் திகழும் அருணம், என்கின்ற அருணோதய காலத்தில் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் எல்லாவித யோகத்தையும் பெறலாம்.  

அதேபோல் மாலையில் சூரியன் மறைவதற்குச் சற்று முன்னதாக, பிரதோஷ காலம் என்கிற உன்னதமான காலத்தில் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால், குடும்பத்தில் செல்வம் பெருகும்.

சந்தோஷம் நிலவும், வேலை தேடுவோருக்கு நல்ல வேலை கிடைக்கும். புத்திர பாக்கியம் உண்டாகும். மனதுக்கு ஏற்ற வரன் அமையும். மற்றும் எல்லாவிதமான யோக பாக்கியங்களும் பெறலாம்.

பொதுவான விதிமுறைகள்
*******************************
1. விளக்கில் எண்ணெய் விட்டு எத்தனை திரிகளைப் போட்டிருந்தாலும் அத்தனையும் ஏற்றிட வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு திரிகளாவது ஏற்ற வேண்டும்.

2. பூஜை தொடங்கும் முன் வீட்டில் சுமங்கலி குத்துவிளக்கை ஏற்றி விட்டு வணங்கிய பிறகு பூஜை செய்தால் நிச்சயம் பலன் உண்டு.

3. விளக்கு தீபம் ஏற்றும்போது முதலில் விளக்கில் நெய் அல்லது எண்ணெய் ஆகியவற்றை ஊற்றிய பிறகே பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். அப்படி முறையாக   ஏற்றிய தீபம் வீட்டில் உள்ள இருளை அகற்றுவதோடு, வீட்டில் உள்ளோர்  அனைவரின் மன இருளையும் அகற்றி, தெளிவான சிந்தனையைத் தூண்டி, சிறந்த முறையில் செயாலாற்ற வைத்து, நிலையான அமைதியைத் தரும்.

4. இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம்.

5. ஒரு திரி ஏற்றும் போது கிழக்கு திசை நோக்கி ஏற்றவும் நாம் ஏற்றும் திரியை பொறுத்து அதற்கு உண்டான பலன்களை அடையலாம்.

6. தீபத்தை பூவின் காம்பினால் அணைக்கவும். வாயினால் ஊதக்கூடாது. கல்கண்டை கொண்டு தீபத்தை அமர்த்தவேண்டும்.

7. தீபம் வெறும் விளக்கு அல்ல, நம் வாழ்வின் கலங்கரை விளக்கு. மங்களம் தங்கவும் இன்பம் பெருகவும் தீபம் ஏற்றுவோம். தீபமேற்றி என்றும் இறைவெளிச்சத்தில் இன்பம்
காண்போம் 

எந்தெந்த எண்ணைகளில் விளக்கேற்றினால் என்னென்ன பலன்கள் ?
***************************
1) நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் சகலவித சந்தோஷமும் இல்லத்தில் நிறைந்திருக்கும். 

2) நல்லெண்ணை எனப்படும் எள் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றிட, குடும்பத்தை ஆட்டிப் படைக்கும் எல்லாப் பீடைகளும் தொலைந்து போகும்.

3) விளக்கெண்ணை ஊற்றி தீபம் ஏற்றுபவர்களுக்கு புகழ் அபிவிருத்தியாகும் வேப்ப எண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் மூன்றும் கலந்து தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும். நெய், விளக்கெண்ணை, வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் கலந்து தீபம் ஏற்றி அம்மனை வணங்கினால் தேவியின் அருள் கிட்டும். கிரக தோஷங்கள் விலகி சுகம் பெற சுத்தமான பசு நெய்யினால் தீபம் ஏற்ற வேண்டும்.

4) கணவன்-மனைவி உறவு நலம் பெறவும் வேப்ப எண்ணெய் தீபம் உகந்தது. அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெறவழி செய்வது ஆமணக்கு எண்ணெய் தீபம்.

5) எள் எண்ணெய் (நல்லெண்ணை) தீபம் என்றுமே ஆண்டவனுக்கு உகந்தது. நவக்கிரகங்களை திருப்தி செய்யவும் ஏற்றது. மனதில் தெளிவும், உறுதியும் ஏற்பட வேண்டுவோர் வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய்மூன்றையும் கலந்து தீபம் ஏற்ற வேண்டும். மந்திரசித்தி பெற வேண்டுவோர் விளக்கெண்ணை, இலுப்பை எண்ணெய், நெய், நல்லெண்ணை, தேங்காய் எண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய்களையும் கலந்து விளக்கேற்ற வேண்டும்.

கணபதிக்கு தேங்காய் எண்ணெய் உகந்ததாகும்.

முருகனுக்கு நெய் தீபம் உபயோகப்படுத்துவது நல்லது.

நாராயணனுக்கு நல்லெண்ணெய் ஏற்றதாகும்.

மகாலட்சுமிக்கு நெய் உபயோகப்படுத்தலாம்.

சர்வ தேவதைகளுக்கு நல்லெண்ணெய் உகந்தது.

குலதெய்வத்திற்கு இலுப்பை எண்ணெய், நெய் மற்றும்
நல்லெண்ணெய் இவை மூன்றும் உபயோகிக்கலாம்.

கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒரு போதும் விளக்கேற்றவே
கூடாது. 

திசைகள் !

கிழக்கு-இந்தத் திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் துன்பம் ஒழியும்.

வீட்டில் உள்ள பீடைகள் அகலும். மேற்கு-இந்தத் திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லை, சனிபீடை, கிரகதோஷம் பங்களிப்பதை இவை நீங்கும்.

வடக்கு -இந்தத் திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வமும், மங்கலமும் பெருகும்.

தெற்கு-இந்தத் திசையில் தீபம் ஏற்றக்கூடாது.

என்னென்ன திரிகள் பயன்படுத்தலாம்?
தாமரைப்பூத்தண்டின் திரி: தாமரைப் பூத்தண்டின் உள்பகுதியில் காணப்படும் வெண்மை கலந்த பகுதியும், தண்டுப் பகுதியின் உட்கூடும் நன்கு வெயிலில் காய வைத்து அதிலிருந்து உருவாக்கப்பட்ட திரியை விளக்கு வழிபாட்டிற்காக பயன்படுத்தினால் முன்வினைக் கர்ம பாபங்கள் நீங்கும். பிறவித் தளை நீங்கி மறுபிறப்பற்ற வாழ்வு நிலைத்து நின்று வழிபடுவோர் வாழ்வை வளப்படுத்தும்.

பஞ்சுத்திரி : பொதுவாக பருத்தியினால் திரித்து எடுக்கப்படுகின்ற திரி விளக்குகளுக்கு தீபத்திரியாக பயன்படுத்தப்படுகிறது. பெரும்பான்மையானோர்  பருத்திப் பஞ்சினைத்தான் திரியாக பயன்படுத்துகின்றனர். இது தெய்வ குற்றம்,  பிதுர்களால் ஏற்பட்ட சாபம், வம்சாவழிப் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்திக் கொடுக்கக்கூடியது. எனவே இந்த திரியால் விளக்கேற்றுவது மிகுந்த பயன்தரும். நல்ல பலன்களை பஞ்சுத்திரி ஏற்படுத்தும்.

வெள்ளைத்துணி திரி : வெள்ளைத் துணியாக  எடுத்து, அதைத் திரியாகத் திரித்து பயன்படுத்துவதால் பலவித உத்தமமான
பலன்களை பெற முடியும். அதிலும் வெள்ளைத் துணியை பன்னீரில் நனைய வைத்து, பின் அதைக் காய வைத்து திரியாக
திரித்து வைத்துக் கொண்டு பயன்படுத்துவது மேலும் பலன் தரக்கூடியதாகும்.

சிவப்பு வர்ணத் துணி திரி : சிவப்பு துணியிலிருந்து திரிக்கப்பட்ட திரியானது விளக்கெரிக்க தீப தரிசன வழிபாடு செய்ய பயன்படுத்தப்பட்டால் திருமண தடை நீங்கும் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பிறக்கும்
பேறு உண்டாகும். 

மஞ்சள் துணியாலான திரி : இத்துணியாலான திரிக்கு தனி மகத்துவம் உண்டு. எதிலும் வெற்றி பெற விரும்பும் அன்பர்கள் பயன்படுத்த வேண்டிய திரி இது.

தேவியின் பூரண அருள் நமக்கு கிடைக்க இந்த திரி பயன்படுத்தப்படுகின்றது. மனிதனுக்கு ஏற்படும் வியாதிகள் தீரவும், செய்வினைகள் நீங்கவும், காற்று சேட்டைகள் நீங்கி நலம் பெறவும், எதிரி பயம் நீங்கவும். தம்பதிகள் ஒற்றுமை ஓங்கவும் இது மிகவும் பயன்படும் திரி எனலாம்.

வாழைத்தண்டின் நாரினால் ஆன திரி : வாழைத்தண்டினை நன்கு காயவைத்து அடித்து பஞ்சு போலக்கி பின்பு அதனை திரியாக எடுத்து விளக்கெரிக்க பயன்படுத்தலாம். இது முன்னோர்களால் ஏற்பட்ட சாபம், தெய்வ காரியங்களில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு மற்றும் மனசாந்தி, குடும்ப அமைதி, குழந்தைப்பேறு ஆகியவற்றை ஏற்படுத்தி தரக்கூடியது. 

வெள்ளெருக்கந்திரி : வெள்ளெருக்கம் பட்டையை ஊறவைத்து பிறகு காயவைத்து அடித்து நாராக மாற்றித் திரியாகத் திரித்து விளக்கிற்கு பயன்படுத்தினால் செல்வச்செழிப்பு உண்டாகும். துர் ஆவிகளால் பாதிக்கப்பட்டவர்களை அத்துன்பத்திலிருந்து காப்பாற்றும் பிள்ளைகளின் நல்வாழ்வு நீடிக்கும்.

எதிர்கால வாழ்க்கைக்கான வருமானம் ! மற்றும் வருமான யோசனைகள் !

பெரும்பாலும், "நீங்கள் தூங்கும்போது பணம் சம்பாதிக்கவும்" என்ற சொற்றொடரை நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம்.   பெரும் பாலான மக்களை செய...