Total Pageviews

Friday, February 8, 2013

மனநிம்மதி, ஆனந்தம், அன்பு, தியாகம், அடக்கம் என்ற ஐம்பெரும் குணங்கள் பணத்தால் வருவதில்லை. - விவேகானந்தர்.

1,இறைவனின் தரிசனத்திற்காக முயற்சிக்கும் ஒருவனுக்கு தெய்வீக நாமமே புகலிடம் ஆகும். (சுவாமி ராமதாஸ்)

2, நம்பிக்கை உள்ளவர்கள் எந்த சூழலையும் சாதகமாக்கிக் கொண்டு முன்னேறுகிறார்கள்.(ஓர் அறிஞர்)
 

3 மனதைப் பொத்தல் குடிசையாக வைத்திராமல், எந்தப் புயலையும் தாங்கும் இரும்புக்கோட்டையாக வைத்திருக்கக் கற்க வேண்டும்.(மு.வ.)
 

4 நம்பிக்கை இல்லாத இடத்தில் முயற்சியும் இருக்க முடியாது. (ஜான்ஸன்)
 

5 ஒரு நல்ல நூல் ஒரு நல்ல மனிதனுக்கு நல்ல சொத்தாகும். (வில்லியம் ஹாஸ்விட்)
 

6 ஒருவனுக்கு அறிவு இருந்தும் ஆற்றல் இல்லையெனில் அவன் வாழ்வு சிறக்காது.  (ஷாம்பர்ட்)
 

7 நீ பேசும் வார்த்தைகளின் மீது உனக்குள் கட்டுப்பாடு இருக்க வேண்டும்.அரவிந்தர்)
 

8 உலகம் எவ்வளவு பெரியதோ, அவ்வளவு பெரியதாக உங்கள் இதயத்தை விரிவாக்குங்கள்.(சுவாமி விவேகானந்தர்)
 

9 உன்னைத் தவிர வேறு யாரும் உனக்கு அமைதியைத் தர முடியாது(எமர்சன்)
 

10 கட்டாயப்படுத்திப் புகுத்தப்படும் அறிவு மனதில் பதியாது. (பிளேட்டோ)
 

11 காலத்தில் செய்வதைத் தள்ளிப்போட வேண்டாம். தாமதத்தால் தீய முடிவுகள் ஏற்படும். (ஹேக்ஸ்பியர்)
 

12 நேற்று அசாத்தியமாய் இருந்தது, இன்று சாத்தியமாகும் அற்புதத்தை ஒவ்வொரு நாளும் நாம் கண்டு வருகிறோம். (மகாத்மா காந்தி)
 

13 அசுத்தங்களுள் மோசமான அசுத்தம் கோபம்தான். 
 

14 வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் முழுக்க முழுக்க பயன் உள்ளதாக ஆக்கிவிட வேண்டும்.(மாரியோ போஜியோ)
 

15 துயரத்திற்கு ஒரே மாற்றுமருந்து சாதனைதான். (ஹென்றி லீவ்ஸ்)
 

16 கல்வியின் பயன் எதையும் கோபப்படாமலும், தன்னம்பிக்கையை இழக்காமலும் செவிசாய்க்கும் திறன்.(ராபர்ட் பிராஸ்ட்)
 

17 வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தினால் எல்லோரும் சூரியனைப் போல் பிரகாசிக்க முடியும். இல்லையேல் மெழுகுவர்த்திதான். - நெப்போலியன்.
 

18 உன்னுடைய சக்திக்கேற்ற வேலை கிடைத்தால் போதும் என்று ஆசைப்படாதே; உன்னுடைய வேலைக்கேற்ற சக்தி கிடைக்க வேண்டும் என்று விரும்பு. - ஆல்டர்.
 

19 நாட்கள் கற்றுத் தராததை வருடங்கள் கற்றுக் கொடுக்கின்றன. - எமர்சன்
 

20 மனநிம்மதி, ஆனந்தம், அன்பு, தியாகம், அடக்கம் என்ற ஐம்பெரும் குணங்கள் பணத்தால் வருவதில்லை. - விவேகானந்தர்.

துணிச்சல் உள்ளவனே உயர்நிலை அடைகிறான்."




1 துணிச்சல் உள்ளவனே உயர்நிலை அடைகிறான்."

2 மனிதனை மிருக நிலையில் இருந்து மாற்றி மனிதனாக்குவது கல்வி ஒன்றுதான்.

3 மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்.

4 ஆசைகள் வளர வளர அவனுடய தேவைகள் வளர்ந்து கொண்டே போகும்.

5 எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ அவ்வளவு குறைவாகப் பேசு.

6 மரண பயம் வாழ்நாளைக் குறைத்து விடும்.

7 கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள் அர்த்தமற்றவை.

8 நன்றியுள்ள மனிதன் எது சொன்னாலும் நம்பலாம். ஏனெனில் அவன் துரோகம் செய்ய மாட்டான்.-ஸ்பெயின்

9 தகுதி இல்லாதவர்களே பிறரை அவதூறு செய்து பொழுது போக்குகின்றனர்.

10 பொய் சொல்லி ரெம்ப நாள் வாழ்க்கைய ஓட்ட முடியாது உண்மைய சொன்னா வாழுற வரைக்கும் பிரச்சனை இல்லை..

11 உங்களை முதலில் கட்டுப்படுத்துங்கள்; பிறகு, உலகமே உங்கள் வசமாகும்..

12 நம்மை நாம் அறியாததன் காரணமாகவே நமக்கு ஆசையும் பயமும் உண்டாகின்றன. (சுவாமி ராமகிருஷ்ணானந்தர்)

13 அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்(காந்தியடிகள்)

14 அவசரம், ஆளை மட்டுமல்ல, அலுவலையும் கெடுக்கிறது.

15இடர்களைக் கண்டு அஞ்சாமல் இருப்பதே விரைவான முன்னேற்றத்திற்கான வழியாகும். (அரவிந்தர்)

16 கோபம் என்னும் அமிலம் எறியப்படும் இடத்தைவிட அதை வைத்துக் கொண்டிருக்கும் கலதத்தையே பெரிதும் நாசப்படுத்தி விடும்(கிளெண்டல்)

17 என்றாவது நான் ஆசிரியரானால், அது கல்வி போதிக்க மட்டுமல்ல, கல்வி கற்பதற்காகவும் இருக்கும்.(டொரோதி தெலூசி)

18 நாம் எப்போதுமே வாழ்வதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்; ஆனால் வாழ்வதில்லை. (எமர்சன்)

19 மனிதனின் வாழ்க்கை பிறருக்கும் நாட்டுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.வாரியார் சுவாமிகள்)

20 உண்மையிடம் அடைக்கலம் தேடியவன் பலத்தோடும் சுகத்தோடும் இருக்கிறாள்.ஜேம்ஸ் ஆலன்)


மனிதநேயவாழ்வு


நாம் செய்யும் ஒவ்வொரு காரியங்களும் அடுத்தவர்களின் மனதையோ, அல்லது உடமையையோ உடலையோ பாதிக்கா வண்ணம் முடிந்தவரை நாம் நல்லதையே செய்வோம். நல்லதையே நினைப்போம். அப்பொழுது நாமும் மன நிம்மதி அடைவதுடன் அடுத்தவர்களும் மன நிம்மதி அடைகிறார்கள். சில சமயம் நாம் செய்யும் கேலி பேச்சு ,விளையாட்டுகள் கூட அடுத்தவர்கள் உயிர் ப்றி போக காரணமாக அமைந்து விடுகிறது. அல்லது அவமானமாக கருதி மன நோய்க்கு ஆளாகிறார்கள். சிலர் விளையாட்டு கிண்டல் என்னும் போர்வையில் பொழுது போக்கிற்காக பேச்சும் உரையாடல் மூல்மாக வாழ்நாள் எதிரியாக தள்ளப்படுகிறார்கள். இன்னும் சிலர் அடுத்தவர்கள் வளர்ச்சியில் பொறாமை படுவதுண்டு. இது பல தரப்பினரிடத்திலும் இருக்கிறது.

செல்வத்தால் உயர்ந்தாலும், பதவியால் உயர்ந்தாலும், மதிக்கத்தக்க மனிதனாய் உருவாகினாலும், இன்னும் சொல்லப்போனால் அறிவு பூர்வமாக பேசினால் கூட பொறாமை எனும் தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. இதன் அடிப்படை காரணம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒளிந்து கிடக்கும். தாழ்வு மனப்பான்மையே..! இது ஒரு மனிதனின் முன்னேற்றத்திற்கு எப்பொழுதும் தடையாகவே இருக்கும்.

சாதிக்கும் மனிதனும், சாதிக்கப்பிறந்தவனும் போட்டி கொள்வான். பொறாமை ஒரு போதும் கொள்ள மாட்டான். போட்டி இட்டு முன்னேறுங்கள். பொறாமைப்பட்டு பின்நோக்கி போய் விடாதீர்கள்.

இவ்வுலக வாழ்வு நிலையான வாழ்வல்ல. எந்தநேரத்திலும் எந்த நிமிடத்திலும், ஏன் அடுத்தநொடி கூட உத்திரவாதமில்லாமல் அழியக்கூடிய வாழ்வு. அப்படி நாம் ஏற்றுக்கொண்ட இந்த அற்ப வாழ்வில் சொர்ப்பகாலம் கழித்திடவே எத்தனை கொடுஞ்செயல்கள், எத்தனை வன்முறைகள், எத்தனை மனித நேயத்துக்கு புறம்பான காரியங்கள், நினைக்கவே நெஞ்சம் பதைக்கிறது. ஏன் ..?  இத்தனையும்  எதற்காக செய்கிறான் மனிதன்,,?

புரியாத புதிராகவே விடை தெரியாமல் முடிவில்லாமல் காலம் கரை புரண்டோடி போய்க்கொண்டு இருக்கிறது. நாம் சொந்தமென நினைத்து உரிமை கொண்டாடும் அனைத்தும் நம்மை விட்டுச்செல்ல இருப்பவைகளே..! நம்முடன் ஒரு போதும் கூட வருபவைகள் அல்ல. மனிதன் இதை முழுமையாக உணர்ந்தாலே இவ்வுலகில் நடை பெரும் அனைத்துப்பிரச்சனைகளையும்  ஒரு நொடியில் முடிவுக்கு கொண்டு வந்து விட முடியும்...!

இறைவன் படைத்த அனைத்து படைப்புக்களிலும் மிகச்சிறப்பாய் படைக்கப்பட்ட படைப்பு மனித்ன்தான் நம் மனிதப்படைப்பு. ஆறாம் அறிவான பகுத்தறிவை மனிதனுக்கு மட்டுமே இறைவன் கொடுத்துள்ளான். இதன் மூலம் மனிதன் மற்ற படைப்பினங்களிலிருந்து விலகி உயர்ந்து நிற்கிறான். இந்த பகுத்தறிவு நம்மிடம் இருப்பதினால் தான் நன்மை தீமை, நல்லது எது கேட்டது எது, என அனைத்திலும் தீர யோசித்து முடிவெடுக்க முடிகிறது. இப்படி ஒரு உயர் படைப்பான மனிதப்படைப்பை சீர்குலைத்து மற்ற பிற  அறிவுக்குறைவான மிருகக்குணம் கொண்டவனாய் நடந்து கொள்ளும் நிலை தான் இன்று நாடு முழுவதும் வெவ்வேறு கோணத்தில் அரங்கேறி வருகிறது. இது மிகவும் பரிதாபத்திற்க்குரிய விஷயமாக இருக்கிறது...!?!?!

மனிதன் மனிதனாக வாழ கற்றுக்கொள்வோம். அடுத்தவர்களையோ அடுத்த மதத்தினரையோ, அடுத்த இனத்தினரையோ ஒரு போதும் மனதளவிலும் உடலளவிலும், பேச்சளவிலும் துன்புறுத்தாமல் இருப்போம்.  அடுத்தவர்களை நோகடிக்கவோ துன்புறுத்தவோ நமக்கு எந்த அதிகாரமும் இல்லை. அது படைத்த இறைவனை தவிர்த்து ...!

இறையச்சம்  மனதில் வந்து விட்டால் எந்த தவறான பாதையையும் தேர்ந்தேடுக்கத்தோன்றது. அது ஒரு புறம் இருக்க  இறைவன் நமக்காக இவ்வுலகை படைத்தது மட்டுமல்லாது நாம் சுவித்து இன்பமாய் வாழ எத்தனை வகை அதிநவீன சாதனங்கள், எத்தனை வகை கனிமவளங்கள், எத்தனை வகை உணவுகள், எத்தனை வகை ஆபரணங்கள் அலங்கார பொருட்கள் உடைகள் என அத்தனையும் மனிதனுக்காக வழங்கி அழகு பார்க்கும் இறைவனுக்கு நன்றி சொல்லி மனிதன் என்ன கைமாறு செய்துள்ளான்...???? நம்மிடம் இறைவன் எதிர் பார்த்தது என்ன..???

தூய்மையான இறை வணக்கம், துவேசமில்லா மனப்பான்மை, மது.மாது, சூது, வட்டி, வரதட்சணை, பதாகச்செயல்கள், பழிவாங்கும் எண்ணம் மற்றும் இறைவனுக்கு ஒவ்வாத காரியங்களை விட்டும் ஒதுங்கி நற்ச்செயல்கள், நேர்மை,  நியாயம், நன்னடத்தை, வன்செயல்களை தவிர்த்தல், தீயவைகளை விட்டு விலகி இருத்தல், நன்மைகள் செய்தல், புறம்,கோல்,பொறாமை எனும் மனித நேயத்திற்கு அப்பாற்ப்பட்ட செயல்களை விட்டு தூரமாய் இருத்தல், சகோதரத்துவத்தை பேணுதல், இப்படியுமாக நன்மை பயக்கும் விசயங்களை மட்டுமே இறைவன் மனிதனிடத்திலிருந்து எதிர் பார்க்கிறான்.

மாறாக நாம் கொடுஞ்செயல்கள் புரிந்து கொண்டும், கொள்கையை விட்டு விலகியவர்களாகவும், மறுமைச்சிந்தனை இல்லாதவர்களாகவும், அடுத்த மனிதர்களை இழிவு படுத்துபவர்களாகவும், தவிர்க்கப்படவேண்டியவைகளை தன் அருகில் வைத்துக்கொள்பவர்களாகவும், தார்மீகப் பொறுப்பு இல்லாதவர்களாகவும், கேளிக்கை கொண்டாட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாகவும்,பொறாமை புறையோடியவர்களாகவே வாழ்ந்து வருகிறோம்.

நாம் இவ்வுலகிற்கு வரும்போது எதையும் எடுத்து வரவில்லை. ஆனால் திரும்பிச்செல்லும் போது நிச்சயமாக நாம் எடுத்துச்செல்ல வேண்டியது நிறைய இருக்கிறது. அதுவே நாம் இவ்வுலகில் செய்த இலாப நஷ்டக் கணக்குகள்..! செய்த பாவங்களுக்கும் புண்ணியங்களுக்கும் இறைவனிடத்தில் நிச்சயம் கணக்கு ஒப்படைத்தே ஆக வேண்டும். இதை நம்புபவர்கள் அனைத்து செயல் பாடுகளிலும் தீமையை விட்டு விலகி விடுவர். ஆகவே அடுத்தவர்கள் மனம் நோகடிக்கும் காரியங்களை தவிர்த்து இவ்வுலக வாழ்வு முடிவுறும் நாள் வரும் வரை நல்லோர்களாக நன்மைகள் பல செய்து நாடு போற்றவும் நம் சன்னதிகள் போற்றவும் மதிக்கத்தக்க நன் மனிதர்களாக வாழ்ந்து  இவ்வுலகை விட்டு விடை பெறுவோமாக..!

மனிதாபிமானம் , மனித நேயம். பணம் உள்ளவர்கள் நினைத்தால் இவ்வுலகில் வறுமையை நொடியில் ஒழித்து விடலாம் . சிந்திப்பார்களா , பணம் படைத்தவர்கள் !!

Thanks to Athirai Sithik

Wednesday, February 6, 2013

இணையதளம் Internet Browser சரியாக உள்ளதா?


சில நேரங்களில் நமக்கு மிகவும் பிடித்த, பிரியமான இணைய தளத்திற்கான புக்மார்க்கினை கிளிக் செய்து காத்திருப்போம். ஆனால், அந்த தளத்தைக் காட்ட இயலவில்லை என நமக்கு பிழைச் செய்தி கிடைக்கும். இன்டர்நெட் ஸ்பீட் சரியாக இல்லையோ என்ற எண்ணத்திலும், நாம் ஆசை ஆசையாகப் பார்க்க வேண்டிய தளப் பற்று காரணமாகவும், இணைய இணைப்பினைத் துண்டித்து, பின் மீண்டும் இணைத்து, அந்த தளத்தினைப் பார்க்க முயற்சிப்போம். அப்போது அதே பிழைச் செய்தி வரலாம். இப்போது என்ன பிரச்னை? (Browser) பிரவுசரிலா? அப்படி என்றால், மற்ற தளங்களைப் பெற்றுக் காட்டுவதிலும் சிக்கல் இருக்க வேண்டுமே? இல்லையே!

ஒருவேளை அந்த தளத்தில் ஏதேனும் பிரச்னை இருக்குமா? அதனை எப்படி அறிவது? இதற்கெனவே ஓர் இணைய தளம் இயங்குகிறது. இந்த தளத்தில், ஓர் இணைய தளத்தின் முகவரியைக் கொடுத்தால், அந்த குறிப்பிட்ட இணைய தளம் சிக்கலில் இருப்பதால், கிடைக்கப்பெறாமல் உள்ளதா? அல்லது சீராக இயங்கிக் கொண்டிருக்கிறதா? என இந்த தளம் காட்டும். http://www.downforeveryoneorjustme.com/ என்ற முகவரியில் உள்ள இணைய தளம் சென்றால், நமக்கு தள முகவரிக்கான கட்டம் ஒன்று காட்டப்படும். மாறா நிலையில் அதில், google.com காட்டப்படும். அந்தக் கட்டம் சென்று, நீங்கள் சோதனை செய்திட விரும்பும் தளத்தின் முகவரியினை டைப் செய்திட வேண்டும். உடனேயே அந்த தளம் up இல் இருக்கிறதா அல்லது downஇல் இருக்கிறதா என நமக்குத் தகவல் காட்டப்படும். தளம் சரியாக இல்லை எனில் “It’s not just you! (Site’s Name Here) looks down from here!” என செய்தி கிடைக்கும். தளம் சரியாக இருப்பின், It’s just you. (Site’s Name Here) is up.” எனச் செய்தி கிடைக்கும்.


 அஞ்சாமையை விட, நேர்மையாக இருத்தலே அழகானது. - எமர்சன்.
 

Tuesday, February 5, 2013

ஆதார் அட்டை எதற்கெல்லாம் தேவை? எப்படி பெறலாம்?

கேஸ் இணைப்பு பெறுவது, பாஸ்போர்ட் பெறுவது உள்ளிட்டவற்றுக்கு ஆதார் அட்டை அவசியமாக்கப்பட்டுள்ளதால் அதை உடனே பெறுவது நல்லது. 
  How Get An Aadhaar Card
 கேஸ் இணைப்பு பெற, பாஸ்போர்ட் வாங்க, வீடு வாங்க விற்க, பி.எப். கணக்கு துவங்க அல்லது அதில் இருந்து பணத்தை எடுக்க, வங்கி கணக்கு துவங்க என்று பலவற்றுக்கும் ஆதார் அட்டை அவசியம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 

 இதனால் ஆதார் அட்டை வழங்கும் மையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடப்பதை பார்க்க முடிகிறது. ஆதார் அட்டை பெறுவது எப்படி?
 1. ஆதார் அட்டை பெற பதிவு செய்ய கட்டணம் எதுவுமில்லை. ஒருவர் ஒரு முறை மட்டுமே பதிவு செய்ய வேண்டும். 

 2. ஆதார் பதிவு மையங்களுக்கு சென்று உங்களின் அடையாள அட்டை மற்றும் இருப்பிடச் சான்றை காண்பிக்கவும்

 3. ஆதார் அட்டை பெற அடையாள அட்டை மற்றும் இருப்பிடச் சான்றுக்கு 33 வகை ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அடையாள அட்டை மற்றும் வசிப்பிடச் சான்றாக வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிடவை ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

 4. புகைப்படத்துடன் கூடிய பான் கார்டு, அரசு ஐடி கார்டு ஆகியவை அடையாளச் சான்றாக எடுத்துக்கொள்ளப்படும். இருப்பிடச் சான்றாக நீங்கள் ஆதார் அட்டை கேட்டு விண்ணப்பிக்கும் சமயத்திற்கு முன்னதாக உள்ள 3 மாதங்கள் செலுத்திய தண்ணீர், மின்சாரம், தொலைபேசி கட்டண பில்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

 5. ஒரு வேளை உங்களிடம் மேற்கூறிய சான்றுகள் இல்லையென்றால், கெசட்டட் ஆபீசர் அல்லது தாசில்தார் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்.

 6. எம்.பி. அல்லது எம்.எல்.ஏ./ கெசட்டட் ஆபீசர்/ தாசில்தார்/ பஞ்சாயத்து தலைவர் ஆகியோர் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய இருப்பிடச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்.

 7. பதிவு மையத்தில் உங்கள் புகைப்படம், கைரேகை, கண்ணின் கருவிழி ஸ்கேன் ஆகியவை எடுக்கப்படும். 

8. ஒரு முறை மட்டுமே பதிவு செய்ய வேண்டும். ஏனென்றால் ஒருவருக்கு ஒரு ஆதார் எண் தான் வழங்கப்படும். 

 9. நீங்கள் அளித்த தகவல்கள் சரிபார்க்கப்படும். அவை சரியாக இருந்தால் ஆதார் நம்பர் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

 10. ஆதார் எண் கிடைக்க 60 முதல் 90 நாட்கள் வரை ஆகலாம். 
11. ஆதார் கடிதங்களை அச்சடிப்பது வினியோகிப்பது இந்தியா போஸ்ட்டின் வேலை


 12. ஆதார் கடிதங்களை உரியவிரடம் கொடுக்க இந்தியா போஸ்ட் சாதாரணமாக 3-5 வாரங்கள் எடுத்துக்கொள்ளும்.

* அறிவின் ஒளி இருக்கும் வரை, ஞான ஒளி வீசும் வாழ்வில் தவறே நிகழ்வதில்லை. - ஸ்ரீ அரவிந்தர்.
Thanks to One india.com

Saturday, February 2, 2013

பெற்றோர்-ஆசிரியர்கள் வழிகாட்டுதல்படி கடுமையாக உழைத்தால் நினைத்த இடத்தை அடையலாம்: கலெக்டர் அன்சுல்மிஸ்ரா பேச்சு

மதுரை ஒத்தக்கடையிலுள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் பொன் விழா, நூலக கட்டிட திறப்பு விழா இன்று நடந்தது. விழாவில் மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார் அவர் பேசிய தாவது:-

.
இன்றைக்கு இந்த பள்ளியின் பொன் விழா ஆண்டு கொண்டாடப்படுவது நல்ல விஷயம்.                                    50 வருடங்களாக நல்ல முறையில் நிர்வாகத்தை நடத்தி மாணவர்கள் வெற்றி பெற்று பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருவது பாராட்டுக்குரியது. அதே நேரத்தில் இந்த பள்ளியில் பயின்ற 2 பேரும் இந்திய ஆட்சிப்பணியில் பணியாற்றி வருகிறார்கள். இது இந்தப்பள்ளிக்கு பெருமை சேர்ப்பதாகவும் முன் உதாரணமாகவும் திகழ்கிறது.

மாணவர்களாகிய நீங்கள் வாழ்க்கையில் படித்து முடித்த பின்பு என்னவாக ஆக வேண்டும் என்பது பற்றி முடிவு எடுத்து அதற்காக தொடர்ந்து முயற்சி எடுக்க வேண்டும். மாணவர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படி கடுமையாக உழைக்க வேண்டும். அப்பொழுது தான் நாம் நினைக்கும் இடத்தை பிடிக்க முடியும்.

சமுதாயத்தில் நாம் தனி மனிதராக இல்லை என்பதை உணர்ந்து மற்றவர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். நல்ல மனிதர்களாக, நேர்மையானவர்களாக, இருந்தால்தான் சமூகத்தில் அமைதி இருக்கும். என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய போகிறோம், என்பதை உணர்ந்து தைரியத்துடன் செயல்பட வேண்டும். நமக்கு இருக்கும் உரிமை மற்றவர்களுக்கும் இருக்கும் என்பதை உணர்ந்து மற்றவர்களின் உரிமையை மதிக்க வேண்டும். நமக்கு கிடைக்கும் உரிமை மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக மாணவர்கள் ஒழுக்கத்தை கற்றுக்கொள்ள வேண்டும். ஒழுக்கமாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் படிப்பில் கவனம் செலுத்த முடியும். இதை மனதில் உறுதி எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சோம்பேறியானவன் இரண்டு முட்களும் இல்லாத கடிகாரம்; அது நின்றாலும், ஓடினாலும் பயனில்லை. - கவுப்பர்.
Thanks to Malaimalar

Tuesday, January 1, 2013

ஒருவருக்கு ஒரு வீடு



இந்தியாவை போன்றே, சீனாவிலும் நிலம் மற்றும் வீடுகளின் விலை எக்கச்சக்கமாக ஏறிவிட்டது. இந்த விலை ஏற்றத்துக்கான காரணத்தை ஆய்வு செய்தது சீன அரசு. அதிக பணப் புழக்கத்தில் உள்ளவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை வாங்கிக் குவிப்பதுதான் இதற்கு காரணம் என, கண்டு பிடித்தது. விளைவு, ஒருவர், ஒரு வீட்டுக்கு மேல் வாங்கக் கூடாது என தடை போட்டது. வீட்டு விலை, மளமளவென இறங்கியது. விலை குறைய குறைய, சாதாரண நடுத்தர மக்களும், புதிய வீடுகளை வாங்க ஆரம்பித்தனர்.

இந்தியாவிலும், புதிய வீடுகள் அநியாய விலையில் விற்கப் படுகின்றன. இதற்கு காரணம், டாக்டர்கள், வியாபாரிகள், சினிமாத் துறையினர், ஹாவாலா ஆசாமிகள், அரசியல்வாதிகள் ஆகியோர், கணக்கில்லாமல், பல பெயர்களில் வீடுகளை வாங்கி குவிக்கின்றனர். சீனா போலவே, இந்தியாவிலும், ஒருவர், ஒரு வீட்டிற்கு மேல் வாங்க தடை விதித்தால், விலை உயர்வு தானாக இறங்கி விடும். நடுத்தர மக்களுக்கும் சொந்த வீடு வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். அரசு செயல்படுத்துமா?

துணிவு இல்லையேல், வாய்மை இல்லை. வாய்மை இல்லையேல் அறங்கள் இல்லை. - காந்தியடிகள்.



பற்பசையின் சிறப்புக்கள்

நாம் காலையில் விழிப்பதே டூத் பேஸ்ட் பற்பசையின் முன்னால் தான். டூத் பேஸ்ட் பற்களை வெண்மையாக்கும். வாய் துர்நாற்றம் போக்கும். ஈறுகளை பலப்படுத்தும் என்பது போன்ற பயன்கள் நாம் அறிந்ததே.

பற்பசை பற்றி நாம் அறியாதது அல்லது அறிய வேண்டியது:-

* பூச்சிக்கடியினால் ஏற்படும் எரிச்சல், வீக்கம், கொப்புளங்கள், அரிப்பு போன்றவற்றை போக்க சிறிது டூத் பேஸ்ட்டை தடவுங்கள். வீக்கம் குறைவதுடன் சீக்கிரம் குணமாகும்.

* சிறிய தீக்காயங்களுக்கு டூத் பேஸ்ட் தற்காலிகமாக கூலிங் எபெக்ட் கொடுக்கும்.

* முகப்பருக்கள் வேகமாக மறைய தூங்க போகும் முன் பருவின் மேல் ஒரு புள்ளி அளவுக்கு பேஸ்டை வைத்தால் இரண்டு மூன்று நாட்களில் பரு மறையும். காலையில் எழுந்தவுடன் முகம் கழுதவல் அவசியம்.

* பற்களுக்கு எனாமல் கோட்டிங் உண்டு. பற்கள் பளிச்சிட நாம் டூத் பேஸ்ட் உபயோகிக்கிறோம். அதே போல் நகங்களுக்கும் எனாமல் கோட்டிங் உண்டு. நகங்கள் சுத்தமாகவும் பளிச்சிடவும் பற்களை சுத்தம் செய்வது போல் மேல்புறமும் இடுக்குகளிலும் பேஸ்ட் பிரஷ்ஷால் தேய்த்தால் நல்ல பலன் தெரியும். இது நகங்களை வலுப்படுத்தவும் செய்யும்.

*பூண்டு, வெங்காயம், மீன் இவற்றை கையாளும் பொழுது கைகளில் இருந்து ஒரு வித வாடை வரும். சிறிது டூத் பேஸ்ட் எடுத்து தேய்த்து விட்டு கழுவினால் வாடை நீங்கும்.

* துணிகளிலும், கார் பெட்களிலும் படிந்த கனமான கறைகளை டூத் பேஸ்ட் மூலம் நீக்க முடியும். பேஸ்ட்டை கறை படிந்த இடங்களில் தடவி நன்றாக தேய்த்தால் கறைகள் நீங்கும்.

* குழந்தைகள், வீட்டுச் சுவர்களில் கிரேயான் கொண்டு கோடுகள் கிறுக்குவது, சகஜம். ஈரத்துணியில் பேஸ்ட் தடவி, கிரேயான் கோடுகளின் மீது தேய்த்தால் மறைந்து விடும்.

* வெள்ளி பாத்திரங்கள், ஆபரணங்கள் பளிச்சிட ஒரு மெல்லிய காட்டன் துணியில் டூத் பேஸ்ட் தடவி மெதுவாக பாலீஷ் செய்வது போல் தேய்த்தால் புதிதுபோல் இருக்கும். இது வைர நகைகளுக்கும் பொருந்தும்.

* சி.டி./ டி.வி.டி.களில் கோடுகள் விழுந்தால் ஒரு துளி டூத் பேஸ்ட் கோட்டிங் கொடுத்து மெல்லிய துணியால் துடைத்து விடுங்கள்.

* குழந்தைகளில் பால் பாட்டில் ஒரு வித வாடை வீசும். சிறிது டூத் பேஸ்ட் விட்டு நன்றாக அலசினால் வாடை போகும்.

* வீடுகளில் இஸ்திரி பெட்டி உபயோகிக்கும்போது நாளடைவில் துரு பிடித்தது போல் ஒருவித கருமை நிற கோட்டிங் படிந்து இருக்கும். டூத் பேஸ்டில் உள்ள சிலிக்கா இந்த துருவை நீக்கி விடும்.

* நமது மூக்கு கண்ணாடியை துடைப்பதற்கு டூத் பேஸ்டை விட சிறந்தது ஒன்றுமில்லை. சிறிது பேஸ்ட் தடவி நன்றாக கழுவினால் பளிச்சென்று மாறிவிடும்.
மலர்களைச் சுற்றி மணம் வீசுவதைப் போல, செயற்கரிய செயல்களை புகழ் சூழ்ந்து கொள்ளும். - சாக்ரடீஸ்.

நன்றி- மங்கையர் மலர்

Wednesday, December 26, 2012

எப்பொழுதும் நம் கணவன், நம் குழந்தை" என்ற சிந்தனையை மனதில் கொண்டால், வாழ்க்கையானது சந்தோஷத்துடன், சுகமாக இருக்கும்.

சிறிய சிறிய தவறுகளான ஈர்ப்புத்தன்மை என்பது எல்லோருடைய வாழ்கையிலும் நேரிடும். அதை நாம் தவிர்ப்பது என்பது நம் கையில் தான் உள்ளது. அதற்கு நம்முள் ஏற்படும் தேவையற்ற சிந்தனைகளான தூண்டுதல்களை தவிர்ப்பது நல்லது. இல்லையேல் அது நம்மை பெரும் பிரச்சனைகளுக்கு உள்ளாக்கும். ஆனால் கல்யாண வாழ்கைக்குள் நுழைந்தபின், கடந்த காதல் வாழ்கையை மறப்பது மிகவும் நல்லது.

இதனால் எத்தனையோ பிரச்சனைகளில் இருந்து விடை பெறலாம். ஏனெனில் துரதிர்ஷ்டவசமாக நம் காதல் நம்மை சிந்திக்க தூண்டும். அவர்களை தொடர்பு கொள்ள செய்யும். ஆகவே அதை நமக்கு நாம் போட்டு கொள்ளும் வேலிகள் மூலம் தவிர்க்கலாம். மேலும் திருமணமான ஆண், பெண் இருவரும் சில நிபந்தனைகளை அவரவர்களுக்கென கடைபிடித்தால், அது சுகமான மற்றும் சந்தோசமான வாழ்கையை வாழ வழிவகுக்கும். இப்போது எப்படிப்பட்ட நிபந்தனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பார்ப்போமா!!! how protect your marriage from adultery

1. அவரவர்களுக்கென சில விருப்பங்கள் இருக்கும். அதை சிலரிடம் பார்க்கும் போது ஈர்ப்பு ஏற்படும். அதை உங்கள் உணர்வுகள் தூண்ட செய்யும். இது எல்லோருக்கும் உள்ள ஒரு சாதாரண உணர்வு. ஆனால் அதை நாம் திருமணமான பின்னும் தொடர்ந்தால், அதை கள்ளக்காதல் என்று பெயரிடுவர். ஆகவே அந்த வாய்ப்பை நாம் கொடுக்காமல், "எத்தனை விபரிதங்கள் வரும்?" என்பதை நாம் உணர்ந்தால், அதில் இருந்து எளிதில் விடை பெறலாம்

 2.எண்ணங்கள் மட்டுமே நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்பதால், மற்றொரு நபருடன் இருப்பது போன்ற சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது.

3. தன் மீது ஆண்கள் ஆசை கொள்ளும்படி நடந்து கொள்ளும் பெண்ணாகவோ அல்லது அவர்கள் மயங்கும்படி நடந்து கொள்வதையோ தவிர்க்க வேண்டும்.

4. அனைவருக்கும் காதல் ஈர்ப்பு மற்றும் ஆசை இருக்கும். அதனால், ஆபத்தை உருவாக்கும் சூழல்களில் இருந்து விலகி இருப்பது நல்லது. உதாரணமாக, எதிர் பாலின நண்பருடன் தனியாக மதிய உணவு என்று உணவகம் செல்வது, இல்லையேல் வீட்டில் தனியாக இருக்கையில், உங்கள் கணவன் அல்லது மனைவி வேலைக்கு சென்றிருக்கும் சமயம் அவர்களை வீட்டிற்குள் அனுமதிப்பது போன்ற செயல்களை அனுமதிக்க வேண்டாம்.

5.எதிர் பாலின நண்பர்களுடன் சொந்த மற்றும் முக்கியமான பிரச்சினைகளை பற்றி விவாதிக்க வேண்டாம். உதாரணமாக, கணவன் அல்லது மனைவியுடன் உள்ள பாலியல் பிரச்சனைகளை பற்றி பேசுவது பெரும் விபரீதங்களை உண்டாக்கும்.

6.எதிர் பாலின நண்பர்களுடன் நட்புறவு கொள்வது. உதாரணமாக, மனைவி கணவரிடமோ அல்லது கணவன் மனைவியிடமோ, எதிர் பாலின நண்பர்களுடன் நட்பை வைத்திருப்பது பிடிக்கவில்லை என்று சொல்லும் போது, "அவர் என் நண்பர்." என்று சொல்லி அவருடன் நட்பை தொடர்வதால் வீட்டிற்குள் பிரச்சினைகள் தொடரும். இந்த மாதிரி பிரச்சனை வந்தால், அப்போது கணவன் /மனைவி உறவு முக்கியமா? இல்லை அந்த நட்பு முக்கியமா? என்று நன்கு யோசித்து செயல்பட்டால், ஒரு நல்ல தீர்வுக்கு வந்துவிடும்

7.எப்போதும் வாழ்க்கை துணையிடம் பொறுப்புடன் நடந்து கொள்வதினாலும் மற்றும் உங்கள் நட்பை பற்றி மனம் திறந்து பேசுவதாலும், இல்வாழ்கையானது சந்தோசமாக இருக்கும்.

 8.ஆலோசனை கொடுக்கும் மற்றும் நலம் விரும்பியாக இருப்பவரிடம், குடும்ப வாழ்க்கையைப் பற்றி விவரிப்பதால், இல்வாழ்க்கை பலமடையும். மேலும் அவர்களின் ஆதரவு உங்களை ஊக்குவிக்கும். அதிலும், எதிர் பாலின நண்பர்களாக இருந்தால், அவர்களுடன் பழகும் போது, அவர்களுடைய நடவடிக்கையானது மனதிற்கு பிடிக்க வரும் போது, அது காதலாக மாறும். அதனால் நட்பை கலங்க விடாமல் பார்த்துக் கொள்வது மிக முக்கியம்.

எனவே திருமண வாழ்க்கைக்கு எந்த வகையான ஆபத்தும் ஏற்படாமல் இருக்க, "எப்பொழுதும் நம் கணவன், நம் குழந்தை" என்ற சிந்தனையை மனதில் கொண்டால், வாழ்க்கையானது சந்தோஷத்துடன், சுகமாக இருக்கும். என்ன நண்பர்களே சரிதானே?
 உழைப்பால் உடல்நலமும், உடல்நலத்தால் அகநிறைவும் உண்டாகும். - பியாட்டி.
Thanks to One India.com

Tuesday, December 18, 2012

தாய் மொழி


எல்லா மனிதருக்கும் மொழி இன்றி அமையாதது. உலகில் பல மொழிகள் உள்ளன என்ற போதும், எது உயர்ந்தது என்பதும், எதை பயன்படுத்துவது என்பதும் ஒரு குழப்பமனதுதான்.

சிறந்த மொழி எது?

எது உன்னை கருவில் இருந்து வளர்த்ததோ,
எது உன் தேவைகளை பூர்த்தி செய்ததோ,
எது உன் தாயை மகிழ்வித்ததோ
எது உன்னை சமுதாயத்திற்கு அறிவித்ததோ
எது உன்னை உலகம் அறிய செய்ததோ- அதுவே சிறந்தது (தாய் மொழி).
உன் தாய்மொழி சிறப்பை நீ சொல்லவில்லை என்றால், பின்பு அதை யார் தான் சொல்வார்.

தாய்மொழியை வளர்க்க சில யோசனைகளை :

அ) உன் தாய்மொழி தெரிந்தவரிடம் , உன் தாய்மொழிலே பேசு (அந்நிய மொழி மோகம் கொள்ளாதே).

ஆ) முடிந்தால் தாய்மொழில் கவிதை, கதைகள் எழுத்து, இல்லையேல் கவிதை, கதைகளை படி.

இ) தாய்மொழியை பழிக்காதே.(மற்ற மொழியோடு ஒப்பிடாதே)

ஈ) மற்ற மொழிகளை படி, அவற்றில் நல்லதை உன் மொழியில் மக்களுக்கு சொல்லு.

உ) உன் செயலை வைத்தே உன் தாய்மொழி மதிக்க படுகிறதை நீ உணரவேண்டும்.

பகைமையை அன்பினால்தான் வெல்ல முடியும்.  இதுவே  பழமையான விதி. - புத்தபிரான்.
 

Sunday, December 16, 2012

வெறிநாய்க்கடி பற்றிய விழிப்புணர்வு - நாய் கடிக்கு உடனடியாக என்ன செயவேண்டும்?



நாய்க் கடி என்றால், முதலில் நமக்குத் தெரிய வேண்டிய தகவல், அது நல்ல நாயா, வெறிபிடித்ததா என்பதுதான். வெறிபிடித்த நாய் என்றால் பயந்தடித்துக் கொண்டு சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும். சமயத்தில் அந்த நாய்க்கு வெறிநோய் இருப்பது கூட நமக்குத் தெரியாமல் இருக்கலாம். அந்த நாய்க்கு வெறிநோய் ஊசி போட்டிருந்தால் நாம் தப்பித்தோம், இல்லை எனில் பிரச்சினைதான். ஆனால் எப்படியானாலும் நாய்க் கடித்த உடனே அந்த இடத்தை நன்கு கழுவி உடனே மருத்துவ சிகிச்சை செய்ய வேண்டும். உடனடி சரியான சிகிச்சை கட்டாயம் உயிரைக் காப்பாற்றும். நாயில் குட்டி நாய், பெரிய நாய் என்றில்லை; எந்த நாய் கடித்தாலும் பாதிப்பு ஒன்றுதான். ஆனால் எந்த இடத்தில் கடித்தது என்பதைப் பொறுத்து அதன் பாதிப்பும், நோய் வரும் காலமும் வேறுபடலாம். உங்களுக்கு ஒரு புண் இருந்து, அதில் வெறிநோய் உள்ள நாய் நக்கினால் கூட, நமக்கும் வெறிநோய் வரும் என்பதே உண்மை. அதுதான் அறிவியல்.. அது வேண்டாம் வெறிநோய் பாதிப்புள்ள நாய் லேசாக கீறினால் கூட, லபக்கென்று வெறிநோயின் வைரஸ் அப்படியே நம்மிடம் ஒட்டிக்கொள்ளும். வெறிநோயின் அறிகுறிகள் நம்மிடம் உண்டாகிவிட்டால் நம்மை யாராலும் காப்பாற்ற முடியாது. அது என்னப்பா அப்படி ஒரு ராட்சச வெறிநோய். என்கிறீர்களா?

வெறிநோயின்  பாதிப்பு தகவல்கள்..!

வெறி பிடித்த நாயின் கடி/எச்சில் மூலம் வருவதுதான் வெறிநோய் (Rabies).  ரேபிஸ் வெறிநோய் வைரசின் பெயர் லைஸா வைரஸ் (Lyssavirus) என்பதாகும். குட்டியூண்டு சைஸ் உள்ள இந்த வைரஸ்தான் வெறிநோயை உண்டுபண்ணுகிறது. ரேபிஸ் (Rabies) என்பது ஒரு லத்தீன் வார்த்தை. இதன் பொருள், பைத்தியம் பிடித்த/சித்த சுவாதீனமற்ற(Rabies=Madness) என்பதாகும். வெறி நோயினால், அள்வுக்கதிகமான மூளை வீக்கம் (encephalitis) ஏற்படும். பின்னர் மூளையின் செயல்பாடுகளை மாற்றியமைத்து கண்டமேனிக்கு வைரஸின் போக்கில் செயல்பட வைக்கும். நமது இயல்பு நிலை பறி போய்விடும். நம்மை இவ்வளவு பாடுபடுத்தும் இந்த வைரஸ் அப்படி என்ன யானை பெரிதா என்றால் இல்லவே இல்லை. ஒரு எறும்பு அளவு என்ன, ஒரு மண் துகள் அளவு கூட இல்லை. மிக மிகச் சிறியது. அதன் நீளம் 180 நானோ மீட்டர். அகலம் 75 நானோமீட்டர். ஒரு நானோ மீட்டர் என்பது ஒரு மீட்டரில், 100 கோடியில் ஒரு பகுதி.(One nanometre is one billionth of metre (1/1000000000 of a metre, or 0.000000001 m). இந்த லைஸா வைரஸ் ஒற்றை RNA வில், குழந்தையைத் துணியில் சுற்றுவதுபோல் சுற்றி கட்டி வைக்கப் பட்டுள்ளது.

மனிதர்/பாலூட்டியை குறி வைக்கும் வெறிநோய்..!

வெறிநோய் வெப்ப ரத்த விலங்குகளிடம் மட்டுமே-அதாவது பாலூட்டிகளிடம் மட்டுமே - வருகிறது. அதுவும் விலங்குண்ணிகளிடம் மட்டுமே! நகங்கள் உடைய விலங்குகளிடம் மட்டுமே வரும். ஆனால் அது அங்கிருந்து வாய்ப்பு கிடைக்கும்போது, மனிதனிடம் ஒரே பாய்ச்சலாக பாய்ந்து வந்துவிடுகிறது. அது மட்டுமல்ல, இந்த வியாதி ஒரு விலங்கிடமிருந்து இன்னொரு விலங்குக்கும் பரவுகிறது. பொதுவாக இந்த வெறிநோய், வெறிநோய் பாதிப்புள்ள ஒரு விலங்கிலிருந்து (அது நாயாக இருக்கலாம், பூனையாக இருக்கலாம், ஆடாக இருக்கலாம், மாடாகவும் இருக்கலாம்) இன்னொரு விலங்கை/மனிதரைக் கடிப்பதன் மூலமே வருகிறது. ஆனால் அமெரிக்காவில் வௌவால் & பூனைகள் மூலம் வருகிறது. பொதுவாக் இந்நோய் நரி, ராகூன்(raccoons) ஷங்க்(skunks) ஓநாய் மற்றும் கீரிகளிடம் காணப்படுகிறது.

நாய்க்கடிக்கு சிகிச்சை எப்படி?

பொதுவாக மனிதனுக்கு ஏற்படும் வெறிநோய் என்பது அதன் தீவிரமான அறிகுறிகள் ஏற்படும் முன், கடித்த உடனேயே அதற்கான நோய்த்தடுப்பு முறைகளை 48 மணி நேரத்துக்குள் தரவேண்டும். அப்படி நோய்த்தடுப்பு மருந்து தக்க தருணத்தில், வெறிநாய் கடித்தவுடன்/ நாய் கடித்தவுடன் கொடுத்துவிட்டால் கட்டாயம் வெறிநோயிலிருந்து தப்பித்துவிடலாம். ஆனால் உடனடி சிகிச்சை தராவிட்டால் அது உயிர் குடிக்கும் எமனாகவே மாறிவிடுகிறது. வெறி நோய்க்கான வைரஸ் மைய நரம்பு மண்டலத்தையும், முடிவில் மூளையையும் தாக்கி, இறப்பு ஏற்பட பாதை போட்டுத் தருகிறது.

முற்றிய வெறிநோய்!

வாயில் நுரை தள்ளிக்கொண்டிருக்கும் வெறிநோய் முற்றிய வெறிநாயாக இருந்தாலும் கூட, கடித்த 48 மணி நேரத்திற்குள் அதற்கான தடுப்பு மருந்தைப் போட்டு விட்டால் வெறிநோயிலிருந்து நாய் கடித்த நபரைக் காப்பாற்றிவிட முடியும். ஆனால் வெறிநோயின் வைரஸ்கள் நமது நரம்பைத் தொட்டுவிட்டாலோ/வெறிநோயின் வெளிப்பாட்டு அறிகுறிகள் உண்டாகிவிட்டாலோ, காப்பாற்ற முடியாது. நிலைமை ரொம்ப மோசமாகி, கெட்டுப் போய், இறுதியில் சாவு ஒன்றுதான் ஒரே முடிவாக இருக்கும்.

நம்மிடையே நிலவும் மோசமான மூடநம்பிக்கைகள்..!

நம் மக்களுக்கு வெறிநோய் பற்றிய தகவல் எதுவும் தெரியாமலேயே அவர்கள் மனம் போனபடி நாய்க்கடிக்கு மருத்துவம்/மாந்திரீகம்/ நாட்டு மருந்து சிகிச்சை என செய்து கடி பட்டவர்களின் உயிரைப் பணயம் வைத்து பலி கொடுக்கின்றனர். கிராமங்களில் மட்டுமல்ல, நகரங்களிலும்கூட வெறிநாய்க்கடி பற்றிய விழிப்புணர்வு இல்லாததுதான் வேதனை. படித்தவர்கள் கூட மூடநம்பிக்கையான பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்கின்றனர். நாய்க் கடித்தவுடன் அதனை சிலர் கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர். சிலர் உடனேயே நல்லெண்ணெய் முட்டை கொடுத்துவிட்டு மந்திரிப்பவரிடம் அழைத்துச் சென்று மந்திரிப்பார்கள். அவர் என்ன சொல்கிறாரே அதனை மட்டும் வேத வாக்காகக் கேட்பார்கள். அவர் நல்லெண்ணெயில் ஏதோ ஒரு பச்சிலையை பிழிந்து கொடுப்பார். பின்னர் 6 மாதத்துக்கு கோழிக்கறி, பூசணிக்காய் மற்றும் அகத்திக்கீரை சாப்பிடாமல் பத்தியமாக இருந்தால் வெறிநாய்க்கடி சரியாகி விடுமாம். கடித்த உடன் நல்லெண்ணெய், முட்டை கொடுப்பது விஷம் ஏறாமல் தடுப்பதிற்காம். சிலர் நாய்க்கடித்ததும், ஏதோ ஒரு மரத்தைக் கடிக்கச் செய்து, அப்படிச் செய்ததும் நாய்க்கடித்த இடத்திலிருந்து பச்சையாக ஏதோ வழியுமாம். நாய்க்கடியின் விஷம் இறங்கிவிடுமாம். இப்படி ஊருக்கு ஊர் வித்தியாசமான சிகிச்சைகள் உண்டு. ஆனால், கடித்த நாய் வெறிநாயாக இல்லாமல் சாதா நாயாக இருந்தால் பிழைத்துக் கொள்வார்கள். வெறிநாய் என்றால்.. அவ்வளவுதான்...

வெறிநோயின் பயணப்பாதை..!

வெறிநோய் பற்றிய தகவலே நம் வயிற்றில் புளியைக் கரைத்துவிடும். ஆனால் அது பயம் தரும் விஷயம் என்பதற்காக நாம் தெரிந்து கொள்ளாமல் இருக்க முடியுமா? நமது உயிரைக் காப்பாற்ற வேண்டுமே? வெறிபிடித்த நாய்க்கடி மூலம் நமக்குள் நுழைந்த வைரஸ், அது எந்த இடத்தில் நுழைந்ததோ அதைப் பொறுத்து, அது உடலுக்குள் வேகமாக நரம்பு மண்டலம் வழியே ஜாலியாகப் பயணம் செய்கிறது. பின்னர் இறுதியாக மூளைக்குள் போய் ஜம் என்று உட்கார்ந்துவிடுகிறது. பின்னர் அது ஆடும் ஆட்டம் இருக்கிறதே.. அது சொல்லி மாளாது.

வைரஸின் அதிவேக செயல்பாடு!

 மனித உடம்பில் எந்த இடத்தில் நாய்க் கடித்தது என்பதைப் பொறுத்தே, அந்த வைரஸ் எத்தனை நாளில் மத்திய நரம்பு மண்டலத்தைப் போய் அடைந்து, நம் மூளையைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, வைரஸ் நம் உடலை ஆட்சி செய்யத் துவங்கும் என்பது தெரியும். அதனை ஒட்டி இதன் அடைகாப்புக் காலம்(Incubation period) சில மாதங்களிலிருந்து ஓராண்டு வரை இருக்கலாம். ஒரு முறை இந்த வெறிநோய் வைரஸ் மைய நரம்பு மண்டலத்திற்குள் காலடி எடுத்து வைத்துவிட்டால், அவ்வளவுதான்.. ! வெறிநோயின் அறிகுறிகள் உருவாகத் துவங்கும். அதன்பின் ஓரிரு நாட்களுக்குள் அதன் பிரச்சினைகளும் சிக்கல்களும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி, மிகக் குறைந்த நாட்களிலேயே, அதாவது ஓரிரு நாட்களிலேயே இறப்பு நிகழ்ந்து விடும்.

நோயின் அறிகுறிகள்..!

துவக்க காலத்தில் முதலில் உடல்வலி, பின் தலைவலி அதன்பின் காய்ச்சல் என்று கொஞ்சம் கொஞ்சமாக நோய் முற்றும். பின் பொறுக்க முடியாத வலி உண்டாகும். கட்டுகடங்காத உடல் பிரச்சினை, மன அழுத்தம், நீரைக் கண்டால் பயமும் வெறியும் ஏற்படும். உணவை விழுங்க முடியாது. ஆனால் நீர் வேண்டும் வேண்டும் என்று கத்துவார்கள். அவர்களுக்கு மனப்பிரமை ஏற்படும். ஏராளமாய் பிதற்றுவார்கள். வாயில் எச்சில் அதிகமாக ஊற்றெடுக்கும்; ஒழுகும். மற்றவரைக் கண்டால் நாய் போலவே குரைப்பார்கள், ஓடிவந்து கடிக்க வருவார்கள். உடல் செயல்பாடுகள் வித்தியாசமாக இருக்கும். உடல் உறுப்புகள் சில செயலற்றுப் போய்விடும். பின் உடல் அசையாமை, சித்தம் மாறிய நிலை போன்றவை ஏற்படும். முடிவில் கோமா நிலையாகும். சுவாசிக்க முடியாமையால் உயிர்ப் பிரிதல் நேரிடும்.


வெறிநோய்த் தடுப்பு மருந்தும் உயிர் காத்தலும்!

 பொதுவாக மனித வெறிநோய் இறப்பு என்பது 1885ல் இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை தொடர்ந்து கொண்டே இருந்தது. இதன் தடுப்பு மருந்தை/ செயற்கை எதிர் உயிரியை 1885ல் லூயிஸ் பாஸ்டர் (Louis Pasteur) & எமைலி ரௌக்ஸ் (Emile Roux) என்ற இரு விஞ்ஞானிகளும் இணைந்து வெறிநோய்க்கான தடுப்பூசியைக் கண்டுபிடித்தனர். இவர்கள் ஏற்கனவே வெறிநோய் வந்து இறந்த ஒரு முயலின் மூளையிலிருந்து செல்களை எடுத்து, அதிலிருந்தே இந்த தடுப்பு மருந்தை தயாரித்தனர். இந்த வகையில் செத்துப்போன வைரஸிலிருந்து தயாரிக்கும் மருந்துதான், புதிய வகையில் நவீனமாய் வளர்த்து தயாரிக்கும் மருந்தைவிட மலிவாக இருக்கிறது.

முன்பெல்லாம் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் வெறிநாய் கடித்தால் 23 ஊசிகள் போடப்படும். அதன் பின், 25 ஆண்டுகளுக்கு முன் நாய் கடிக்கு தொப்புளைச் சுற்றி 14 ஊசிகள் போடுவார்கள். அந்த ஊசியின் வலி பிராணன் போய்விடும். பின்னர் 10 ஆண்டுகளுக்கு முன் 7 ஊசிகள் போட்டனர். இப்போது 3 ஊசிகள் மட்டும்தான். வலியும் அவ்வளவாக இருப்பதில்லை. முதல் 2 ஊசி ஒரு வார இடைவெளியிலும், கடைசி ஊசி 3 வாரத்துக்குப் பின்னும் போடுவார்கள்.வெறிநோய்த்தடுப்பு ஊசி சுமார் 3 வருடங்களுக்கு வெறிநோயிலிருந்து பாதுகாப்புத் தரும்.

வெறிநோய்க்கான சிகிச்சை எப்படி?

முதலில் காயம் பட்ட/ கடிபட்ட இடத்தை சுமார் 15 நிமிட நேரம் தொடர்ந்து சோப்புத் தண்ணீர்/சோப்புத்தூள்/ டிங்க்சர் அயொடின் (povidone iodine)/வெறிநோய் வைரஸைக் கொல்லும் பொருட்களால் அந்த இடத்தை தொடர்ந்து கழுவி, வெறிநோய் வைரஸைக் கொல்ல வேண்டும். நிறைய தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும். பின் தடுப்பூசிகளை போடவேண்டும். ஊசியை தோள்பட்டையின் டெல்டாய்டு சதையில்(deltoid muscle) தான் போடுவார்கள். பின் ஒரு சில மணித் துளிகளுக்குள் தற்காப்புத் திறனுள்ள வெறிநோய் எதிர்ப்பானாகிய இம்முயூனோ குளோபுலின் (immune globulin) போடவேண்டும். பின் அதற்கு 4-5 தடுப்பூசியும் கடிபட்ட இடத்திற்கருகிலேயே போடவேண்டும். நமக்கு முன்பே வெறிநோய் தடுப்பூசி போட்டிருந்தால், நாய் கடித்த பின் இம்முயூனோ குளோபுலின் போட வேண்டாம். 4 தடுப்பூசி மட்டும் போதும். வெறிநோய் வராமல் இருக்க அதற்கான தடுப்பூசியும் முன்னமேயே போடலாம். வெறிநாயின் வெறிநோய்க்கடியை உடனடியாக கவனித்து அதற்கான சிகிச்சை செய்தால் காப்பாற்றிவிடமுடியும்.

வெறிநோய் இருந்திருக்குமோ என சந்தேகப்படும் நாய் நக்கினால்/உணவு தரும்போது அந்த நாய் நம் உடலை தொட்டால், காயம் இன்றி இருந்தால், எந்த மருந்தும் தரவேண்டியதில்லை.

கடித்த நாய் வெறிநோயுள்ளதோ என சந்தேகித்து, அதன் கடி லேசான பிறாண்டலுடன் இருந்தால், நம் உடலின் மேல் தோல் மட்டும் சுரண்டப்பட்டிருந்தால், இரத்தம் வரவில்லை என்றால், நீங்கள் கவலைப்படவேண்டாம். அதற்கு உடனடியாக தடுப்பூசியும், காயத்தைச் சுத்தம் செய்து, அதற்கான சிகிச்சையும் உடனடியாக செய்ய வேண்டும்.

நாய்க்கடியினால் அதன் ஒற்றைப் பல்/ பல பற்களின் பதிவு உடலில் உண்டானால், தோலுக்குக் கீழே காயம் இருந்தால், உடனடியாக தடுப்பூசியும் போட வேண்டும். பின்னர் வெறிநோயின் இம்முயூனோகுளோபுலினும் போடவேண்டும்; காயத்தை நன்கு துடைத்துவிட்டு அதற்கான சிகிச்சையும் தரவேண்டும்.

வளர்முக நாடுகளில், கடித்த நாய்க்கு தடுப்பூசி போடப்பட்டதா இல்லையா என்ற சந்தேகம் வந்தாலும், வராவிட்டாலும், கட்டாயமாய் சிகிச்சையைத் துவங்க வேண்டும்.

உலக நல நிறுவனத்தின் கூற்றின்படி, வெறிநோய் வந்துவிட்டால் எப்படி 100% இறப்பு என்பது எப்படி நிச்சமோ அதே போல, வெறிநாய் கடித்தபின் சரியான சிகிச்சையினைத் தந்தால் 100% தடுப்பு நடவடிக்கையும், உயிர் காப்பாற்றப்படுதலும் நிச்சயம்.

வெறிநோய் உற்பத்திக்கூடம்..!

 இம்முயூனோகுளோபுலின் (Immunoglobulin) எனற தடுப்பு மருந்து உடல் செல்களுக்குள் வெறிநோய் வைரஸ் நுழையவிடாமல் தடுக்கிறது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் வரை, நீலகிரி மாவட்டத்தின் குன்னோரில் உள்ள பாஸ்டர் நிறுவனம், இந்தியா முழுமைக்கும் வெறிநோய் மருந்து தயாரித்துக் கொடுத்துக்கொண்டிருந்தது. ஆனால் புண்ணியவான் சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ், பெரிய மனது பண்ணி, இந்த நிறுவனத்துக்கு பால் ஊற்றி மூடுவிழா பணியினை மிகுந்த மக்கள் நல நிகழ்வாக நடத்திவிட்டார். அதன் பின் வெறிநோய் தடுப்பூசி பாவப்பட்ட மக்களால் வாங்கமுடியாத அளவுக்கு விலை வானத்தில் பறந்து உயர்ந்துவிட்டது. மக்கள் அரசு மருத்துவமனையையே நம்ப வேண்டி இருக்கிறது. தனியார் மருந்துக்கடைகளில் இதன் விலை ரூ.2,500/= க்கு மேல். இதனை எப்படி ஓர் உழைப்பாளி/ஏழைத் தொழிலாளி வாங்க முடியும்.? .இப்போது தடுப்பூசியின் எண்ணிக்கையும், அதன் வலியும் கூட குறைந்துள்ளது.

உலக வெறிநோய் தினம்..!

 செப்டம்பர் 28 என்பது உலக வெறிநோய் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று நாய்களுக்கும், மனிதர்களுக்கும் தடுப்பூசி போடப் படுகிறது. வெறிநோய் பாதுகாப்பு நடவடிக்களை கடைப்பிடிக்க மக்களிடம் ஒரு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படுகிறது. இதுவரை உலகில் நிகழ்ந்துள்ள பதிவுகளில், 2005 ம் ஆண்டு விஸ்கான்சன் (Wisconsin) நகரில் ஜென்னா கீஸ் (Jeanna Giese)ஒரு இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த வெறிநோய்தான் குறிப்பிடத்தகுந்தது. வெறிநோய் வந்த துவக்கத்தில் அவரை மருந்த்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது எதிர் உயிரின் தற்காப்பு முறை நன்கு செயல்பட்டு வைரசுடன் போராடி வெற்றி கண்டார். இன்றும் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதன் பின் இரண்டு நோயாளிகள், கொலம்பியாவில் 2008 ல் 11 வயதுப் பையனும், கலிபோர்னியாவில் 2011, ஜூலையில் 8 வயது சிறுமியும் மட்டும் அதிசயமாக வெறிநோய் வந்த பின்னரும் பிழைத்திருக்கின்றனர். வேறு நபர்கள் வெறிநோய் வந்து பிழைத்ததாக சரித்திரமே இல்லை.

வெறிநோய் பற்றிய ஆய்வு..!

 சமீபத்திய வெறிநோய் பற்றிய கண்டுபிடிப்பு நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது. உடலில் வெறிநோய் அடையாளங்கள் உருவான பின், நம் பெரும்பாலான உடல் செல்களில் உள்ள உட்கருவின் டி.என்.ஏ., ஆர்.என்.ஏ.வாக மாற்றப்படுகிறது. ஆனால் இவ்வளவு உருமாற்றம் நடந்தாலும், வெறிநோய் வைரஸ் பெருக்கம் செய்ய இந்த ஆர்.என்.ஏ வின் சிறு பகுதியே பயன்படுத்தப்படுகிறது. என்ன அநியாயம் பாருங்கள். வைரஸ் பல்கிப் பெருக, ஏராளமான புரதம் உருவாக்க, அளப்பறிய ஆர்.என்.ஏ உருவாகி, அதில் கொஞ்ஞூண்டு ஆர்.என்.ஏ மட்டுமே.. பயன்பாட்டுக்காம்.

வெறிநோய் வருவதற்கான சில காரணிகள்..!

 ஆசிய நாடுகளில் சில இடங்களில் நாய்க்கறி உண்ணும் பழக்கமும் உள்ளது. இதுவும் கூட வெறிநோய் உருவாக ஒரு காரணம் என்று அறியப்படுகிறது. நம்மிடையே இதுவரை, ஒருவருக்கு வெறிநோய் உள்ள நாய் கடித்ததா என்பதை அறிவதற்கான சோதனை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. வெறிநோய் அறிகுறிகள் வந்த பின்தான் தெரிகிறது. பொதுவாக வெறிநோய் எச்சில் மூலமே பரவுகிறது. மிக அரிதாக வெறிநோய், பாதிக்கப்பட்ட வெறிநோய் உறுப்புகளிலிருந்து வெளியேறி காற்றில் கலந்து அப்படியே நாம் காற்றைச் சுவாசிக்கும்போது உள்ளே நுழைந்து வெறிநோயை உருவாக்குவதும் உண்டு. அதே போல அரிதாக சரியாக வேகவைக்கப்படாத வெறிநோய் வந்த விலங்குகளின் மாமிசத்திலிருந்தும் வர வாய்ப்பு உண்டு.

நீங்கள் செய்யவேண்டியவை..:

நீங்களோ/குழந்தைகளோ இறந்த விலங்குகளை கையால் எடுக்காதீர்கள். அதன் மூலமும் வெறிநோய் வரலாம்.

வீட்டில் வளர்க்கப்படும் அனைத்து விலங்குகளுக்கும் வெறிநோய்த் தடுப்பூசி கட்டாயமாய் போடவேண்டும்.

விலங்குகளால் ஏற்படும் எந்த காயத்தையும் உடனடியாகத் துடைத்து, அதற்கு தகுந்த மருத்துவ சிகிச்சை செய்ய வேண்டும்.

நாம் எந்த விலங்குகளுடனும் தொட்டு விளையாடி பழகக் கூடாது.

குழந்தைகளிடம் விலங்குகளைத் தொடக்கூடாது என்று சொல்லித் தரவேண்டும்.

நாய்களிடம் மிக ஜாக்கிரதையாகவே பழகுங்கள்.

உலகம் முழுவதுமே வெறிநோய்க்கான தடுப்பு மருந்து தயாரிப்பு போதுமானதாக இல்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தியாகும்.
உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம். ஆனால் எதற்காகவும் உண்மையை தியாகம் செய்யாதீர். - விவேகானந்தர்.
- பேரா.சோ.மோகனா ( mohanatnsf@gmail.com)

Tuesday, December 4, 2012

நாடு வளம் பெற கல்வியும் மருத்துவமும் இலவசமாக்கப்பட வேண்டும்

நாட்டு மக்கள் அனைவருக்கும்  முறையான மருத்துவமும், கல்வியும் முற்றிலும் இவலசமாக்கப்பட வேண்டும்

பல் லட்சம் ரூபாய் கொடுத்து மருத்துவம் படிப்பது வேதனைக்குரியது. பல இலட்சங்கள் செலவு செய்து மருத்துவரான ஓருவரால் இலவசமாகவோ அல்லது குறைந்த கட்டண்த்திலோ சிகிச்சை செய்ய இயலாது எனவே கல்வியும் மருத்துவமும் முற்றிலும் இவலசமாக்கப்பட வேண்டும். அதை வியாபாரமாக்கக் கூடாது

அனைவருக்கும் தரமான இலவசகல்வியின் முலம் திறமையானவர்களை கண்டறிந்து அவரவர்க்கு தேவையான கல்விதனை அளிக்க வேண்டும்.
 
மாணவ, மாணவிகள் பல மொழிகளை கற்றுக் கொள்ள வேண்டும். அதே சமயத்தில் தாய் மொழியை பேசுவதில் பெருமை கொள்ள வேண்டும்.அறிவாற்றலை வளர்த்து கொள்ள நூலகம் பெரிதும் உதவுகின்றது. தாய்மொழியை நேசிப்பவனால்தான் தாய்நாட்டை நேசிக்க முடியும்.

கல்வியும் மருத்துவமும் இலவசமாக்கப்பட வேண்டும்.  இவ்வாறு இவை இரண்டும்  இலவசமாக அரசு வழ்ங்கினால் பல வகையான குற்ற நடவடிக்கைகள் குறைய்ம், நாடும் வளம் பெறும்.

எவ்வளவு சிக்கரம் முடியுமோ அவ்வளவு சிக்கரம் அது நடந்தே ஆக வேண்டும். கல்வியும் மருத்துவமும் வியாபாரம் ஆவது வளரும் நாட்டுக்கு நல்லதல்ல. சிறந்த மாணவ, மாணவியர்தான் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற முடியும்.


By.K.P.Sithayan Sivakumar 

நேற்று என்பது உடைந்த பானை  இன்று என்பது கையிலுள்ள வீணை, நாளை என்பது மதில்மேல் பூனை
 



Sunday, December 2, 2012

வீட்டில் கொசுக்களை விரட்ட எளிய வழிகள்!!!

ஆண் கொசுவின் ஆயுட்காலம் 9 நாட்கள். 

பெண் கொசுவின் ஆயுட்காலம் 30 நாள்கள்

பொதுவாக் கொசுவின் சராசரி ஆயுட்காலம் 21 நாட்கள்.
 வெள்ளை, மஞ்சள் நிறங்கள் கொசுக்களுக்குப் பிடிக்காது
.
நிறைய வீடுகளில் கொசுக்களை விரட்ட கெமிக்கல்கள் கலந்த கொசு விரட்டிகளை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு அத்தகைய கொசு விரட்டிகளை பயன்படுத்துவதால், சருமம் மற்றும் கண்களுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, நுரையீரலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அத்தகைய கேடுகள் விளைவிக்கும் கெமிக்கல் கலந்த கொசு விரட்டிகளை பயன்படுத்துவதை விட, வீட்டில் இருக்கும்

ஒரு சில பொருட்களை வைத்து கொசுக்களை விரட்டலாம். இதனால் கொசுக்கள் அழிவதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். அத்தகைய வீட்டு கொசு விரட்டிகள் என்னவென்று பார்ப்போம்!

இயற்கை முறையில் கொசுக்களை விரட்ட...

தேங்காய் நார் : தேங்காய் உடலுக்கு மட்டும் நன்மை தராமல், வீட்டில் பல செயல்களுக்கும் பயன்பட்டு நன்மை தருகிறது. எப்படியென்றால் தேங்காய் நார்கள், வீட்டில் பாத்திரங்களை கழுவுவதற்கு பயன்படுவதோடு, வீட்டில் இருக்கும் கொசுக்களை விரட்டவும் பயன்படுகிறது. எவ்வாறென்றால், இந்த காய்ந்த தேங்காய் நார்களை எரித்தால், அதில் இருந்து வரும் புகை கொசுக்களை எளிதில் விரட்டிவிடும். தற்போது தேங்காய் நார்கள் கூட கடைகளில் விற்கப்படுகிறது.

ஆகவே அந்த நார்களை வாங்கி வந்து, மாலை நேரத்தில் நார்களை நெருப்பில் காட்டி, அனைத்து ரூம்களுக்கும் அந்த புகையை காண்பித்து, சிறிது நேரம் கழித்து பாருங்கள், ஒரு கொசு கூட வீட்டில் இருக்காது. இந்த புகையால் உடலுக்கு பாதிப்பு வராதா? என்று கேட்கலாம். இயற்கை நார்களில் இருந்து ஏற்படுத்தும் புகையால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

கற்பூரம் : கொசுக்கள் அழிவதற்கு முக்கியமான பொருள், சல்பர். இந்த சல்பர் எங்கு இருந்தாலும், கொசுக்கள் வெளியில் தான் இருக்கும். கற்பூரம் இந்த சல்பரினால் ஆனது. ஆனால், ஒரு பிரச்சனை என்னவென்றால், கற்பூரத்தை காற்றில் வைத்தால், அது உடனே கரைந்துவிடும்.

ஆகவே இந்த கற்பூரத்தை ஒரு தட்டில் வைத்து, எரித்து வீட்டைச் சுற்றி காண்பித்தால், கொசுக்கள் அந்த வாசனைக்கு வராது. இல்லையென்றால், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, அதில் கற்பூரத்தைப் போட்டு வைத்தால், அதில் இருந்து வரும் வாசனைக்கு கொசுக்கள் வீட்டை எட்டிக் கூட பார்க்காது.

கெரோசின் மற்றும் கற்பூரம் : இந்த இரண்டுமே மிகவும் சிறந்த, கொசுக்களை அழிக்க வல்ல பொருட்கள் ஆகும். அதற்கு கொசுக்களை அழிக்க கடைகளில் விற்கும் மிசின்களில் உள்ள காலி டப்பாவில், கெரோசினை விட்டு, அதில் சிறிது கற்பூரத்தை விட்டு, மின்சார பிளக்கில் மாட்டி விட வேண்டும். இதனால் கொசுக்கள் வீட்டில் வராமல் இருப்பதோடு, உடல் ஆரோக்கியத்திற்கு எந்த கெடுதலும் ஏற்படாமல் இருக்கும்.


பூச்சிகள் பற்றிய தகவல்

1. தேனிக்கு ஐந்து கண்கள்.
2. கரப்பான் பூச்சி எப்போதுமே 16 முட்டைகள் இடும்.
3. ஈயின் ஆயுள் 10 நாட்கள் மட்டுமே.
4. ஆண் கொசுவின் ஆயுட்காலம் 9 நாள்.
5. பெண் கொசுவின் ஆயுட்காலம் 30 நாள்.
6. மரவட்டைக்கு 7 கண்கள் உள்ளன.
7. வெள்ளை, மஞ்சள் நிறங்கள் கொசுக்களுக்குப் பிடிக்காது.

வலைகளின் எண்ணிக்கை அதிகமாவதால் மீன்களின் எண்ணிக்கைக் குறைந்துபோவதில்லை 

Friday, November 30, 2012

வாழ்க்கை சிறப்படைய அனைவரும் கடைபிடிக்க வேண்டிய பத்து கட்டளைகள்!



1 சிந்தனை :

1 அன்பு இருக்கும் இடத்தில் வாழ்வு இருக்கும்.

பகை அழிவில் கொண்டு விடும். யார் மீது வேண்டுமானாலும் அன்பைக் கொண்டு ஆதிக்கம் செலுத்தலாம்.  இதைத் தவிர உயர்ந்த ஆயுதம் எதுவும் என்னிடம் இல்லை.- காந்திஜி

2 புத்திமதி:

2. பிறரது குற்றங்களை ஒருக்காலும் பேசாதே. அவை எவ்வளவு கெட்டவை யாயினும் சரி. அதனால் எந்த பயனும் விளையப் போவதில்லை.

பிறர் குற்றத்தைப் பேசுவதால், அவனுக்கு மட்டுமின்றி, உனக்கும் நீயே கேடிழைத்துக் கொள்கிறாய். - விவேகானந்தர்

3 கடமைகள்:
1)  பகைவனை நண்பனாக்கிக் கொள்ளுதல்
2). துஷ்டனை நல்லவனாக்குதல்
3). படிக்காதவனை கல்விமான் ஆக்குதல்

4 குறைகள்:.
1)மந்திரத்தின் குறை பாராயணம் செய்யாமை
2). வீட்டின் குறை பழுது பாராமை
3). அழகின் குறை சிரத்தை இன்மை
4). காவலாளியின் குறை கவனக்குறைவு

5 போதுமே:  

1. எவர் ஒருவர் நண்பரைத் தேடி அலைகின்றாரோ அவருக்கு      அல்லாஹ் போதுமானவன்.

    2 எவர் ஒருவர் வழிகாட்டியைத் தேடி அலைகின்றாரோ அவருக்கு அல்குர்ஆன் போதுமானது.

 3. எவர் ஒரு உபதேசியைத் தேடி அலைகின்றாரோ, அவருக்கு மரணம் போதுமானதாகும்.

 4 எவர் பணத்தைத்தேடி அலைகின்றாரோ, அவருக்கு போதுமென்ற மனமே போதுமானது.

5.எவர் இந்த நான்கிலும் படிப்பினை பெறவில்லையோ, அவருக்கு நரகம் போதுமானது. -நபிகள் நாயகம்


6 மனமே ஆறு:
1. எதிர்காலத்தைப் பற்றிய பயம் வேண்டாம்.
2. பயப்படாதே, நான் உனக்கு துணை நிற்கிறேன், .
3. நீர் (ஆண்டவர்) எனக்கு துணையாக என் அருகில் இருக்கிறீர், என்கிறார் தாவீது ராஜா.
4. கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார். நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்ன செய்வான்.
5. தேவபயம் இன்றியமையாதது. மனுஷபயம் தவிர்க்கப்பட வேண்டியது.
6. கர்த்தருக்கு பயப்படுகிறவனுக்கு திடநம்பிக்கை உண்டு. அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும். 

இந்த 6 மொழிகளும், வாழ்க்கைப் பயத்தை நீக்கி ஆறுதல் தரும்.

7 நன்முத்து:

 1. சோம்பலை உடனே ஒதுக்கித்தள்ளு.
 2. குழந்தை உள்ளத்துடன் வாழ கற்றுக்கொள்
 3. கோழைத்தனத்தை பள்ளத்தாக்கிற்குள் எறி.
 4. சிந்தனை ஆற்றல் உள்ள மூளை மட்டும் போதும்.
 5. பலவீனம் என்ற சொல்லை அகராதியில் எடுத்து விடு
 6. ஆறறிவையும் பயன்படுத்தி ஆற்றலுடன் திகழ்.
 7.வேலை செய்யும் கைகளை மட்டும் வைத்துக் கொள்.

8ம் உன் சொத்து:

1. வீண் பேச்சு பேசாதே
2. ஒழுக்கத்தைப் பேணு
3. நல்லவனாக வாழ்
4. கெட்டவனுடன் சேராதே
5. பேச்சில் இனிமை சேர்
6. ஆராய்ந்து செயலில் இறங்கு
7. பெரியவர்களுடன் சேர்ந்திரு
8. பொய்யை மெய்யாக்காதே! 

9 கட்டுப்பாடுகள்: 

 
1. உணவைக் குறை; நாக்கைக்கட்டுப்படுத்து.
2. சவாரியைக் குறை; அதிகமாக நட.
3. கவலையைக் குறை; சிரித்துப் பழகு.
4. சோம்பலைக் குறை; நன்றாக வேலை செய்.
5. பேச்சைக் குறை; அதிகமாய் சிந்தி.
6. செலவைக் குறை; அதிகமாய் தானம் செய்.
 7. திட்டுவதைக் குறை; அதிகமாய் அன்பு காட்டு.
 8. உபதேசத்தைக் குறை; செயலை அதிகரி.
 9. கெட்ட பழக்கத்தை விடு; நல்லதை கடைபிடி

10 அறிவுரை: 

 
1. எவர் மீதும் கோபம் கொள்ளாதே
2. எந்தக் கவலைக்கும் இடமளிக்காதே
3. சுக போகங்களில் மூழ்கி விடாதே
4. பிறரிடம் பொறாமை கொள்ளாதே
5. சோம்பலை நுழைய விடாதே
6. சுறுசுறுப்போடு உழைத்துக் கொண்டிரு
7. பிறர் பொருளைப் பறிக்க நினைக்காதே
8. எவரையும் ஏளனமாகப் பேசாதே
9. பேராசை, பெருவிருப்பம் கொள்ளாதே.
10. யாரையும் வெறுத்து ஒதுக்காதே.


வளமான காலத்தில் நண்பர்கள் நம்மைத் தெரிந்து கொள்கிறார்கள். வறுமைக் காலத்தில் நாம் நண்பர்களைத் தெரிந்து கொள்கிறோம். - சட்டன் காலின்ஸ்

Thanks to
Sri Kallikambal.com

Wednesday, November 28, 2012

யார் அரசியலுக்கு வந்தால் பொதுமக்களுக்கு நாட்டுக்கு நல்லது ?




1) நன்றாக படித்தவர், 

 2) தர்ம சிந்தனை உடையவர்
 
 3) மனித பண்பு , மனித நேயம் உள்ளவர்
 
 4) சேவை மனப்பான்மை கொண்டவர்,
 
 5) தன்னடக்கம் உள்ளவர்
 
 6) தனி மனித ஒழக்கம் உடையவர்
 
 7) பிறர் நலத்தில் அக்கறை உடையவர்
 
 8) குற்ற பிண்ணனி அற்றவர்
 
 9) ஊழலலுக்கு எதிரனவர்
 
10) சாதீய கொள்கைகளுக்கு எதிரானவர்
 
11) சமுதாய முற்போக்கு சிந்தனை உடையவரும்,
 
12) பொது நலத்திற்க்கு மட்டுமே உழைக்க வேண்டும் என                          எண்ணுவோரும்,
 
13) அரசியல் கோட்பாடுகள், மற்றும் சட்ட திட்டத்திற்க்கு உட்பட்டு நடப்பவரும்,
 
14) ஆடம்பர வாழ்க்கையை விரும்பாதவரும்,
 
15) தனக்காகவும், தன் குடும்பத்திற்க்காகவும் சொத்து சேர்க்க வேண்டும் என எண்ணம் இல்லாதவர்.
 
16) எதிர் கட்சி என்னதான் கூறுகின்றது என்பதனை கேட்பவரும்,
 
17) சர்வாதிக போக்கு இல்லாதவரும்.  பிறரை கலந்து ஆலோசிப்பவரும்,
 
18)  நீதீ,  மற்றும் மனசாட்சிக்கு கட்டுப்பட்டவரும்
 
19) சம நிலையை கடைபிடிப்பவரும்
 
20) தீர்க்கமான முடிவுகளை எடுப்பவரும்.

      அரசியலுக்கு வந்தால் பொதுமக்களுக்கும்  நாட்டுக்கும் நல்லது. 


K.P.Sithayan Sivakumar, Madurai. 

நல்ல செயல்களுக்கு உரிய பலன்கள் காத்திருக்கின்றன. சிறிது தாமதமாக வந்தாலும், அவை நிச்சயம் வந்தே தீரும் - காங்கிரீவ்
 
உன்னுடன் சிரித்து மகிழ்பவர்கள் எல்லோரும் உன் நண்பர்கள் அல்லர். - தாமஸ் ஏ. பெக்கட்.
 





Friday, November 23, 2012

ஜலதோசம் சளி ஏற்ப்படாமல் இருக்க



உடலில் சளி பிடிக்காமல் இருப்பதன் மூலம் வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம். ஆடா தொடா, அரசை, அதி மதுரம், கண்டங்கத்திரி, திப்பிலி போன்றவை மார்பு சளியை வெளியேற்றும் தன்மை கொண்டவை.

இஞ்சியால் தடுக்க முடியும்...

என்றாலும் சளி பிடிக்க விடாமல் தடுக்கும் சிறப்பு மருத்துவ குணம் இஞ்சிக்கு மட்டுமே உண்டு. உணவில் அதிக அளவில் இஞ்சி, சுக்கு, வறுத்த வேர்க்கடலை, முந்திரி, அக்ரூட், பாதாம், பூமி சர்க்கரை கிழங்கு, பூனைக்காலி அமுக்ராங் கிழங்கு போன்றவற்றை சேர்ப்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இதன் மூலம் சிக்குன் குனியா, பன்றிக்காய்ச்சல் போன்ற நோய்களின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம். பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை சித்த மருத்துவத்தில் அதிகாரப்பூர்வ மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. முன் எச்சரிக்கை நடவடிக்கை மூலம் நோய் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம் என்றார்.

வெங்காயம் - பூண்டும் கை கொடுக்கும்...

அதேபோல, வேம்பு, துளசி, வெங்காயம், பூண்டு ஆகியவையும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குமாம்.

ஆங்கில மருந்துகளை சாப்பிட்டபோதும் இயற்கை மூலிகைகளை சாப்பிட்டு வரலாமாம்.

வேம்பு நீரிழிவு நோயை தடுப்பதுடன் வைரஸ் கிருமிகள் மனிதனை தாக்காமல் எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது. காய்ச்சலையும் குறைக்கும். ப்ளு காய்ச்சல், தொண்டை வறட்சி, சளி, அலர்ஜி, தோல் வியாதிகள், மலேரியா போன்றவற்றுக்கு வேம்பு ஒரு தீர்வாகும்.

மற்றொரு இயற்கை மூலிகையான துளசி பாக்டீரியாக்களை கொல்கிறது. ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.

வெங்காயத்தில் பல்வேறு வைரஸ் எதிர்ப்பு ரசாயன பொருட்கள் உள்ளன. தேவைப்படும் போதெல்லாம் அவற்றை சாப்பிடுவதன் மூலம் நோய் வராமல் தடுக்கலாம்.

இதேபோல் பூண்டும் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் சக்தி கொண்டது. பாக்டீரியா வைரஸ்களை எதிர்க்கும் எதிர்ப்பு சக்தி உள்ளது. ரத்தத்தை சுத்திகரித்து இலகுத்தன்மையாக்குகிறது.


இன்னொன்று பன்றிக் காய்ச்சலைத் தடுக்க அனைத்து வகையான மாமிச உணவுகளை தவிர்க்க வேண்டும். காய்கறி உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

மாமிச உணவு தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் வைரஸ் எளிதில் தாக்கும் ஆபத்து உள்ளது என்கிறார்கள் நிபுணர்கள்.

தவறு செய்வதில் பிழையில்லை. ஆனால், தவறு என்று தெரிந்தபின் அதை திருத்திக்கொள்ளாமல் இருப்பது தான் மிகப்பெரிய பிழை - மகாத்மா காந்தி

எதிர்கால வாழ்க்கைக்கான வருமானம் ! மற்றும் வருமான யோசனைகள் !

பெரும்பாலும், "நீங்கள் தூங்கும்போது பணம் சம்பாதிக்கவும்" என்ற சொற்றொடரை நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம்.   பெரும் பாலான மக்களை செய...