Total Pageviews

Thursday, July 14, 2016

கவலைகள் ஒருபோதும் வெற்றியைத் தருவதில்லை,முயற்சிகளே!

☕ கவலைகள் ஒருபோதும் வெற்றியைத் தருவதில்லை,முயற்சிகளே!

☕ விடாமுயற்சி மட்டுமே நம் வாழ்க்கையை மாற்றி அமைக்கும்.
 
☕ நம் கனவுகள் நிஜமாவதும், நிழற்படமாவதும் நம் முயற்சியில் அடங்கியுள்ளது.
 
☕ முயற்சிகள் தவறலாம், முயற்சிக்க தவறலாமா?
 
☕ உழைத்துச் சிந்திடும் வியர்வை, நிச்சயம் தந்திடும் உயர்வை.
 
☕ உங்கள் உழைப்பை உறுதியுடன் செய்யுங்கள், வெற்றிஅருகில்தான் உள்ளது.
 
☕ மண்ணில் விழுவது தப்பில்லை, ஆனால் விதையாக விழுந்துமரமாக எழு.
 
☕ உயர்ந்து நிற்கும் மரமெல்லாம் என்றோ ஓர் நாள் விதைகளாக மண்ணில் விழுந்தவையே.
 
☕ வெற்றி எனும் மரம் வளர வியர்வை எனும் நீர் ஊற்றிதான் ஆகவேண்டும்.


குடிநீர் பாட்டலில் இரகசிய எண்கள் - எச்சரிக்கை!


குடிநீர் பாட்டலில் இரகசிய எண்கள் - எச்சரிக்கை!

நம்மில் பெரும்பாலோனோர் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்ளும்போதுகுடிப்பதற்கு பாட்டில் குடி நீரை உபயோகிப்போம் .

Aquafina, Kinley, Bislery மேலும் இதுபோல பல்வேறு கம்பெனிகளின் குடிநீர் பாட்டில்களை நாம் வாங்கிபயன்படுத்துகிறோம் .

இதில் எந்த கம்பெனி நல்ல கம்பெனி என்பதை நாம் ஆராய்வதுண்டு

ஆனால் இந்தபாட்டில்களின் அடியில் பொறிக்கப்பட்டுள்ள இரகசிய எண்களை நம்மில்பெரும்பாலோனோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை .

எண்களும் அதற்கான வேதிப்பொருளின் பெயரும்

number name

1. PET - polyethylene terephthalate
2. HDPE - high density polyethylene
3. PVT - polyvinyl chloride
4. LDPE - low density polyethylene
5. pp - polypropylene
6. ps - polystyrene

அனைத்து குடி நீர் பாட்டில்களின் அடி பாகத்திலும் 1 முதல் 7 வரையிலானஎண்களில் ஏதாவது ஒரு எண் பொறிக்கப்பட்டிருக்கும்.

இந்த எண்கள் அந்த பாட்டில்எந்த வேதிப்பொருளை கொண்டு தயாரிக்கப்பட்டது என்பதை உணர்த்தும்.

குறிப்பிடும்படியாக கிராமங்களில் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குஇதுபோன்ற பாட்டில்களில் குடி நீரை நிரப்பி பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள்

இதைமுற்றிலும் தவிர்க்கவேண்டும் .

மேலும் புதிதாக வாங்கிய குடிநீர் பாட்டில்களையும் வெயில்படும் இடங்களில்வைக்கக்கூடாது

அப்படி வைத்தால் நீரில் வேதிப்பொருட்கள் எளிதில் கலந்துவிடும்.

இவற்றில் 1,3,6 ஆகிய எண்கள் பொறிக்கப்பட்டுள்ள பாட்டில்கள் மிகவும் தீங்குவிளைவிக்க கூடியவை .

ஆகவே இனிமேல் தண்ணீர் பாட்டில் வாங்கும்போது கம்பெனி பெயரை பார்த்துஅடியிலுள்ள எண்களையும் கவனித்து வாங்குங்கள் .

தண்ணீர் காலியானதும்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் அதை அப்புறப்படுத்துங்கள்.

image not displayed
Thanks to Kokila Mahadevan

Tuesday, July 12, 2016

மின் தாக்குதல் !




சமையல் அறையில் ஆரம்பித்து குளியல் அறை வரையிலும் மின்சாரத்தில் இயங்கும் வீட்டு உபயோகப் பொருட்கள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. 

பொதுவாக விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் போது சமயோசிதப் புத்தியோடு மின்னல் வேகத்தில் செயல்பட வேண்டும். மின்சாரத்தின் தாக்கம் எத்தனை அளவு (வோல்ட்) என்பதைப் பொருத்தும் உடலில் மின்சாரம் பாயும் பாதையின் மின் தடைத் திறனைப் பொறுத்தும் ஆபத்தின் அளவுகள் இருக்கும். குளியல் அறை, சமையல் அறை போன்ற ஈரமான சூழலில் உடல் மீது மின்சாரம்பாய நேர்ந்தால், தொடர்ந்து தடைபடாமல் மின்சாரம் பாய்வதால் உயிருக்கே ஆபத்தாகிவிடும். உயர் அழுத்த மின் கம்பிகளைத் தவறுதலாகத் தொடும்போது நம் உடலுக்குள் பாய்கின்ற மின்சாரமானது, சட்டென உடல் முழுவதும் பரவி பூமிக்குள் இறங்கிவிடும். இந்த வகையில், நம் உடலையும் ஒரு மின் கடத்தியாகவே மாற்றிவிடுகிறது மின்சாரம். உடலில் மின்சாரம் பாயும் இடத்திலும் வெளியேறும் இடத்திலும் தோலின் வெளிப்புறம் தீக்காயங்கள் ஏற்படும். ஆனால், உடலைக் கடந்து செல்லும் மின்சாரம் உள் உறுப்புகளையும் பாதிக்கும். இதனால்தான், மின் அதிர்வுக்கு ஆளானவர்களின் இதயத் துடிப்பு தடைபட்டு உயிர் இழக்க நேரிடுகிறது.

மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளானவர் மின் கம்பியைத் தொட்டுக்கொண்டு இருந்தால், முதலில் ‘மெயின் சுவிட்ச்’சை ஆஃப் செய்து மின் ஓட்டத்தை நிறுத்த வேண்டும். சுவிட்ச் எது என்று கண்டறிய முடியாத சூழ்நிலைகளில் ப்ளக் கட்டையை உருவி எடுக்கலாம் அல்லது மின் கம்பியைத் துண்டித்தும் மின் ஓட்டத்தைத் தடை செய்யலாம். இப்படித் துண்டிக்கும் சமயங்களில், மின்சாரத்தைக் கடத்தாத ரப்பர் செருப்பு அல்லது ரப்பர் கை உறைகளை அணிய வேண்டும்; அல்லது உலர்ந்த மரக்கட்டை, துணி, அடுக்குப் புத்தகங்கள் மீது நின்றுகொண்டு மின் இணைப்பைத் துண்டிக்கலாம். உலோகப் பொருட்களைக் கொண்டு துண்டிக்கக் கூடாது.

உயர் மின் அழுத்தக் கம்பிகள் அறுந்து விழுந்து பாதிக்கப்பட்டவர் கம்பியைத் தொடாத நிலையில் கிடந்தாலும் அவரை நெருங்குவதோ, நேரடியாகத் தொட்டுத் தூக்குவதோ கூடாது. குறிப்பிட்ட இடைவெளி வரையிலும் மின் பரவல் தொடர்ந்துகொண்டே இருக்கும். எனவே, முதலில் மின் ஓட்டத்தை நிறுத்திவிட்டு நீண்ட உலர்ந்த மரக் கம்பு அல்லது கயிறு மூலம் பாதிக்கப்பட்டவரை அப்புறப்படுத்தி நாடித் துடிப்பைப் பரிசோதிக்க வேண்டும்.

இதயத் துடிப்பு தடைபட்டு இருந்தால், மார்புக்கு மத்தியில் நமது உள்ளங்கையால் நன்றாக அழுத்தி இதயத்தைச் செயல்படத் தூண்டலாம். சுவாசம் தடைபட்டு இருந்தால், பாதிக்கப்பட்டிருப்பவரின் வாய் அல்லது மூக்குப் பகுதியில் நம் வாயைப் பொருத்தி பலமாக ஊதி செயற்கை சுவாசம் கொடுக்கலாம்.

மின்சாரத்தால் கருகிப்போன உடல் பாகத்தை சுமார் 10 நிமிடங்கள் சுத்தமான ஈரத் துணியால் மூடிவைக்க வேண்டும். பின்னர் சுத்தமான நீர் உறிஞ்சும் துணியால் மூடிக் கட்ட வேண்டும். மின் தாக்குதலால் தூக்கி எறியப்பட்டதால் உண்டான காயங்களுக்குச் சிகிச்சை கொடுக்கலாம். அடுத்ததாகக் கழுத்துப் பகுதியைத் தொங்கவிடாமல் சீரான முறையில் ஆதாரம் கொடுத்துப் பாதுகாப்பாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

மின் தாக்குதலுக்கு உள்ளானவருக்கு வெளிப்படையாகப் பாதிப்பு ஏதும் தெரியாமல் இருந்தாலும் கட்டாயம் மருத்துவரிடம் சிகிச்சைக்குச் செல்ல வேண்டும். ஏனெனில், மின்சாரம் தாக்கியதில் உடல் உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டு இருக்கும் வாய்ப்பு இருப்பதால், அது பின்னர் பாதிப்பை ஏற்படுத்தலாம்!” என்று அக்கறையும் எச்சரிக்கையுமாகச் சொல்கிறார் டாக்டர் ராமச்சந்திரன்.

குழந்தைகள் பத்திரம்!

கையில் கிடைப்பதை எல்லாம் தொட்டுப் பார்க்கும் ஆர்வம் சிறு குழந்தைகளுக்கு அதிகம். ப்ளக் சாக்கெட்டுகளில் விரலை நுழைத்துப் பார்ப்பது, மின் பொருட்களை வாயில் வைத்துச் சுவைப்பது என விபரீதம் தெரியாமல் விளையாடும் குழந்தைகளை எச்சரிக்கையோடு கவனிக்க வேண்டும். குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத உயரத்தில் சுவிட்ச் போர்டுகளை அமைப்பது நல்லது. முடியாதபட்சத்தில், ப்ளக் துவாரங்களை மறைப்பதற்கான ‘சேஃப்டி கார்டு’களை வாங்கி மூடுவது அவசியம். 

குழந்தைகள் தொடும் தூரத்தில், வாட்டர் ஹீட்டர்களைப் (காயில்) பயன்படுத்த வேண்டாம். பெரியவர்களும் வாட்டர் ஹீட்டர் செயல்பட்டுக்கொண்டு இருக்கும்போதே ‘தண்ணீர் சூடாகிவிட்டதா?’ என்று கையால் தொட்டுப் பார்ப்பது பேராபத்தை விளைவிக்கும்!

Monday, July 11, 2016

வாழ்க்கையில் எப்போதும் வெற்றிபெற 25 டிப்ஸ்..!

வாழ்க்கையில் எப்போதும் வெற்றிபெற  25 டிப்ஸ்..!

1. மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள்.

2. ஆரோக்கியம் தராத உணவு வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள்.

3. உங்களுக்கு என்ன வயதானாலும் பரவாயில்லை. விருப்பமான துறைகளில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள்.

4. வருமானத்திற்கான வழி மிகவும் முக்கியம். அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள்.

5. முடிந்தவரை கடன்களைக் கட்டி விடுங்கள். வேண்டாத செலவுகளை நிறுத்தி விடுங்கள்.

6. விடியும் முன்னால் எழுந்து விடுங்கள். ஒருநாளின் அலுவல்களை முன் கூட்டியே திட்டமிடுங்கள்.

7.முப்பதுகளைக் கடக்கும் முன், மற்றவர்கள் சொல்லாமலே சர்க்கரை, உப்பு ஆகியவற்றை கணிசமாகக் குறைத்து விடுங்கள். முடிந்தால் தவிர்த்து விடுங்கள்.

8. எக்காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க்காதீர்கள்.

9. நிற்கையில் நேராக நில்லுங்கள். பேசுகையில் கண்களைப் பார்த்துப் பேசுங்கள்.

10. புன்னகை முகமும் இதமான பேச்சும் உங்கள் இயல்புகளாகவே இருக்கட்டும்.

11. வாரம் மூன்று முறை யாவது உடற்பயிற்சி செய்யுங்கள். முடிந்த வரை நடந்து செல்லுங்கள்.

12.சிறு குறிப்போ, கடிதமோ, கட்டுரையோ, பிழையில்லாமல் எழுதுவதில் கவனம் செலுத்துங்கள்.

13.ஒருவர் இல்லாதபோது அவருடைய சிறப்பம்சங்களையே பேசுங்கள்.

14. அரட்டைப் பேச்சுக்களையும் அபவாதங்களையும் ஊக்குவிக்காதீர்கள்.

15. மற்றவர்களின் தவறுகளை மன்னியுங்கள். ஒரு போதும் மறக்காதீர்கள்.

16. உங்கள் வாழ்வின் ரகசிய அம்சங்கள் முடிந்தவரை குறைவாகவே இருக்கட்டும்.

17. குடும்பம் என்கிற எல்லையைக் கடந்து, பொது அமைப்பு எதிலாவது ஈடுபடுங்கள்.

18. மாதம் ஒரு முறையாவது உங்கள் தகுதிகளையும் தவறுகளையும் பட்டியல் இடுங்கள்.

19. மற்றவர்களைப் பேச விடுங்கள். அவர்கள் மேல் உங்களுக்கு இருக்கும் அக்கறையை உணர்த்துங்கள்.

20.உங்கள் நேரத் திற்கும், மற்றவர்கள் நேரத்திற்கும் உரிய மரியாதை கொடுங்கள்.

21. உங்களிடம் இல்லாத தகுதிகள் இருப்பதாக நம்பவோ நம்ப வைக்கவோ முயலாதீர்கள்.

22. உங்கள் திறமைகளை நீங்களே விவரித்துக் கொண்டிரா தீர்கள். உரிய நேரத்தில் நிரூபியுங்கள்.

23. மேடைக் கூச்சம், கேமரா கூச்சம் இல்லாமல் இருங்கள்.

24. தண்ணீரையும் மின்சாரத்தையும் சிக்கனமாகப் பயன்படுத்துவது தான் எதிர்காலத்திற்காக சேர்க்கும் சொத்துக்கள்.

25. உங்கள் தனிப்பட்ட நம்பிக்கைகளையும் பழக்கங் களையும் மற்றவர்கள் மேல் திணிக்காதீர்கள்

பின்பற்றுங்கள்…வெற்றிபெறுங்கள்…

Thanks to C.Malathi

உடலை முறையாக நீ மறைத்துக்கொள்ள வேண்டும்"..




மறைந்த அமெரிக்க குத்துச் சண்டை வீரர், முஹம்மது அலி, மகள், தன் தந்தையை பார்ப்பதற்கு வீட்டிற்கு சென்றபோது, மகளின் ஆடை சிறிது கவர்ச்சியாக இருந்துள்ளது. அதற்காக தன் மகளுக்கு எப்படி அறிவுரை கூறியுள்ளார் என்பதை அவரின் மகள் வெளியிட்டுள்ளார்.

நானும், எனது தங்கை லைலாவும் தந்தையின் அறைக்குச் சென்றோம். வழக்கம்போல், தந்தை கதவிற்குப் பின்னால் ஒளிந்துகொண்டு எங்களை பயமுறுத்துவது போல் நின்றார்.

நாங்கள் உள்ளே சென்றவுடன்,  அவர் எங்களை உற்றுப் பார்த்தார்.

எங்களை அருகில் அமர்த்திக்கொண்டு, என் கண்களை நோக்கி நேராகப் பார்த்து, 

" ஹானா, இந்த உலகில் மி்க மதிப்பு மிக்கதாக இறைவன் படைத்த அனைத்தும் மறைக்கப்பட்டவையாகவும், இன்னும் பெறுவதற்கு மிகக் கடினமாகவும் தான் உள்ளது.
 
வைரங்களை எங்கு எடுப்பாய்? பூமியின் ஆழமான பகுதியில் மறைக்கப்பட்டதாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும் தான் வைரங்கள் உள்ளன.
முத்துக்களை எங்கு எடுப்பாய்? கடலின் ஆழமான பகுதியில் அழகான சிப்பிக்குள் மறைக்கப்பட்டதாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும் தான் முத்துக்கள் உள்ளன.
 
தங்கத்தை எங்கு எடுப்பாய்? சுரங்கத்தினுள்ளே, அடுக்கடுக்கான பாறைகளுக்குள்ளே மறைக்கப்பட்ட நிலையில், அதை எடுப்பத்தர்க்கு நீ மிகக் கடினமாக உழைக்க வேண்டும். "
 
என்னை உற்று நோக்கியவராக,
 
"உன்னுடைய உடல் புனிதமானது. வைரங்கள், முத்துக்களை விட நீ புனிதமானவள். உன் உடலை முறையாக நீ மறைத்துக்கொள்ள வேண்டும்"..

Thursday, July 7, 2016

ஓசோன் மண்டலத்தை பாதுகாக்கும் துளசி :

நீங்கள் மரத்தை நட்டு வளர்ப்பதை போல , இந்த துளசி செடியையும் நடுங்கள் !!!
 
சுற்றுச்சூழல் மாசுபாடுகளால் ஓசோன் படலத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை எதிர்கொண்டு அதனை பாதுகாக்க வீடுகள் தோறும் துளசிச் செடிகளை வளர்க்க வேண்டும்.

ஓசோன் படலத்தைப் பாதுகாக்க மரம் வளர்க்க வேண்டும் என்ற கருத்து பரவலாக்கப்பட்டு, பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.

இருப்பினும் ஓசோன் படலத்தைப் பாதுகாக்க எளிமையாக வீடுகள்தோறும் துளசிச் செடியை வளர்க்கலாம்.

அரசமரம், மூங்கில், துளசி இவை மூன்றும்
காற்று மண்டலத்தில் உள்ள கரியமில வாயுவை உள்வாங்கிக் கொண்டு 24 மணி நேரமும் ஆக்சிஜனை வெளியிடுபவை அரச மரம், மூங்கில் மற்றும் துளசிச் செடி.

இதில் அரச மரம், மூங்கில் ஆகியவற்றை வளர்க்க பெரிய அளவிலான இடமும், அதிக ஆண்டுகள் காத்திருக்கவும் வேண்டும்.

ஆனால், துளசியை வளர்க்க சிறிய தொட்டியும், வீட்டின் ஜன்னல் பகுதியுமே போதுமானது. விதை போட்டாலும், கன்றாக வைத்தாலும் 2 முதல் 4 மாதங்களில் முழுமையான ஆக்சிஜனை தரவல்லது துளசிச் செடி.

துளசிச் செடி 20 மணி நேரம் ஆக்சிஜனையும் 4 மணி நேரம் ஓசோனையும் வெளியிடுகிறது. ஒரு துளசிச் செடி அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை ஓசோனை வெளியிடுகிறது.

துளசிச் செடியை வீடுகளில் வைத்தால் சுத்தமாக இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பிற்போக்குத்தனமான பேச்சுகளை புறந்தள்ளிவிட்டு, துளசியை வீடுகள் தோறும் வளர்க்க வேண்டும்.

பூமியில் கரியமில வாயுவை தற்போதுள்ள 400 பிபிஎம் என்ற உயரிய நிலையில் இருந்து 350 பிபிஎம் என்ற சாதாரண நிலைக்கு குறைக்க
72 கோடி அரச மரங்கள் (அல்லது)

720 கோடி மூங்கில் மரங்கள் (அல்லது)

7,200 கோடி துளசிச் செடிகள் தேவை.

இதில் நம் ஒவ்வொருவரது பங்களிப்பாக ஒவ்வொரு வீட்டிலும் 16 துளசிச் செடிகளை வளர்க்க வேண்டும்.


Tuesday, July 5, 2016

பெண்களின் பாதுகாப்பிற்கு சில ஆலோசனைகள்...!



1) இரவானாலும், பகலானாலும் இரயிலில் பயணம் செய்யும் போது ஆட்களே இல்லாத அல்லது ஒரு சிலர் மட்டுமே இருக்கும் கம்பார்ட்மெண்டில் ஏறாதீர்கள். ஆட்கள் இருக்கும் பக்கமே ஏறுங்கள்......!

2. ஆட்டோவில் தனியே பயணம் செய்ய வேண்டியத் தருணம் வந்தால், ஆட்டோவில் ஏறும் போதே தொலைபேசியில் உங்கள் வீட்டாருக்கோ இல்லை நண்பருக்கோ அழைத்துப் பேசத் தொடங்குங்கள். எங்கு இருந்து எங்கு செல்கிறீர்கள் என்பதை சொல்லி விட்டு தொடர்ந்து இறங்கும் இடம் வரும் வரை அழைப்பைத் துண்டிக்காமல் பேசிக்கொண்டே செல்லுங்கள்......!

( அதற்காக ஆட்டோக்காரர் சரியான ரூட்டில் தான் செல்கிறாரா என்பதை கவனிக்காமல் விட்டு விடாதீர்கள்)

3.பேருந்து நிலையம், இரயில் நிலையம், பேருந்து நிறுத்தம் என எங்கு நின்றாலும் ஏதேனும் ஒரு குடும்பம் நிற்கும் பக்கமோ இல்லை பெண்கள் கூட்டமாக நிற்கும் பக்கமோ நில்லுங்கள். தனியே நிற்காதீர்கள்......!

4.இரவில் வீதியில் தனியாக நடக்க வேண்டி வந்தால்,  அச்சத்தோடு தலையை குனிந்தபடி நடக்காதீர்கள். நிமிர்ந்து எல்லா பக்கமும் நோட்டம் விட்ட படி நடங்கள்.அதற்காகதிரு திருவென முழிக்க கூடாது...பயம் வந்தால் மீண்டும் தொலைபேசியில் துணைத் தேடிக் கொள்ளுங்கள். தொலைபேசியை பையில் வைத்து விட்டு ஹெட் போனில் பேசுங்கள்......!

5.கேலி கிண்டல் செய்யும் ஆண்களை எப்போதும் கண்டு கொள்ளாதீர்கள். தயவு செய்து சந்தேகப்படும் நபரை, முறைக்காதீர்கள்.நீங்கள் ஆகாயத்தில் நடப்பது போலவும் உங்கள் காதில் எதுவுமே விழாதது போலவும் நினைத்துக் கொண்டு நடையைக்கட்டுங்கள்......!

6.கண்ட இடத்தில் எல்லாம் மொபைல் ரீ சார்ஜ்
செய்யாதீர்கள். எவரையும் எளிதில் நம்பி மொபைல் நம்பர் கொடுக்காதீர்கள்.காதலனே அழைத்தாலும்
தேவையற்ற நேரங்களில் தேவையற்ற இடங்களுக்கு செல்லாதீர்கள் ......!

7.மற்ற பெண்கள் அப்படி இருக்கிறார்களே.. என்று, நீங்களும் அது போல இருக்க ஆசைபட வேண்டாம்.

8.உங்களுக்கென்று ஒரு எல்லையை வகுத்துக்கொள்ளுங்கள். அதன்படி நடந்தால், ஒருபோதும் பிரச்சனை வராது.

9.தனியே இருக்கும் நேரத்தில் என்னை பாதுகாக்க என்னைவிட, சிறந்தவர் யாரும் கிடையாது என்ற, தைரிய நோக்கம் கொள்ளவேண்டும்.

10. உங்களை தாக்குபவரை, திரும்ப தாக்கும் அளவு இல்லாவிட்டாலும், தடுக்கும் அளவிற்க்காவது, தைரியம் வேண்டும். ஒருபோதும், கண்ணில் பயத்தையும், உடம்பில் பதட்டத்தையும்காட்டிவிடக் கூடாது...!

👆🏽👆🏽👆🏽👆🏽👆🏽👆🏽👆🏽👆🏽👆🏽👆🏽

Monday, July 4, 2016

மாரடைப்பு 5 காரணங்கள்

மாரடைப்பு 5 காரணங்கள்

நன்றி-விகடன்.

‘நல்லாத்தான் இருந்தார்... 40 வயசுதான்... நேத்து ராத்திரி படுத்தவர், காலையில எந்திரிக்கலை; ஹார்ட் அட்டாக்காம்’ இப்படியான துயரக் கதைகளை சமீபகாலங்களில் அடிக்கடி கேட்கிறோம். மாரடைப்பு வருவதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மோசமான வாழ்வியல்முறை காரணமாக ஏற்படும் மாரடைப்பு குறித்து, ‘உலக சுகாதார நிறுவனம்’ பட்டியலிட்டுள்ள மிக முக்கியமான, பொதுவான ஐந்து காரணங்கள் இங்கே...


உயர் ரத்த அழுத்தம்

உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு ‘அத்ரோஸ்க்லிரோசிஸ்’ எனும் இதயநோய் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதாவது, இதயத்துக்குச் செல்லும் கரோனரி ரத்தக் குழாய்கள் தடித்து வீங்கிவிடும். ரத்தக் குழாய்கள் வீங்குவதால், இதயத்துக்கு ரத்தம் செல்வது கொஞ்சம் கொஞ்சமாகத் தடைப்படும். இதனால், ஒரு கட்டத்தில் மாரடைப்பு ஏற்படும்.

உடல் பருமன்

உடல் பருமன், மாரடைப்புக்கு மிக முக்கியமான மறைமுகக் காரணி. உடல் பருமன் அதிகமாக இருப்பவர்களுக்கு சர்க்கரை நோய் எளிதில் வந்துவிடும். சர்க்கரை நோய், உடல் பருமன் இரண்டும் ஒன்று சேரும்போது, கரோனரி ரத்தக் குழாய்கள் வீங்கி, மாரடைப்பு வரலாம். உடல் பருமனாக இருக்கும் குழந்தைகளுக்கு, இளைஞர்களுக்குக்கூட சமீபகாலமாக மாரடைப்பு வருவது கவனிக்கத்தக்கது. எனவே, உடல் பருமன் உடையவர்கள் உடனடியாக உடற்பயிற்சி் செய்து, மருத்துவர்களின் அறிவுரைப்படி டயட் கடைப்பிடித்து உடல் எடையைக் குறைக்க வேண்டும்.

கொலஸ்ட்ரால்

கொலஸ்ட்ரால் உடலில் அதிகமாக இருக்கும்பட்சத்தில், அவை இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் மெள்ளமெள்ள படிந்து, ரத்த ஓட்டத்தைத் தடைசெய்யும். இதன் காரணமாக மாரடைப்பு ஏற்படும். கொலஸ்ட்ராலைக் கட்டுக்குள்வைத்திருப்பது அவசியம்.

சர்க்கரை நோய்

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்காமல் இருப்பவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். சர்க்கரை நோய் கட்டுக்குள் இல்லாத சமயத்தில், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும். இதனால், ரத்தக் குழாய்கள் கடுமையாகப் பாதிக்கப்படும். சர்க்கரை நோய் காரணமாக ரத்தக் குழாய்கள் வீங்கி, ரத்தம் செல்வது தடைப்பட்டு, மாரடைப்பு வரலாம். சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் இரண்டு பிரச்னைகளும் இருப்பவர்களுக்கு, மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு மிக அதிகம் என்பதால், விழிப்புஉணர்வு அவசியம்.

புகைபிடித்தல்

தொடர்ந்து புகைபிடிப்பவர்களுக்கும், புகை பிடிப்பவர்களின் அருகில் இருப்பவர்களுக்கும், புகையிலையில் உள்ள நிக்கோடின் மற்றும் சில வேதிப் பொருட்கள் மெள்ள மெள்ள நுரையீரலில் படிந்து, நுரையீரலின் செயல்திறனைக் குறைக்கும். மேலும், இவை ரத்தக் குழாய்களிலும் படியும். கொலஸ்ட்ரால் படிவது போலவே சிகரெட் பிடிப்பதால் பல்வேறு வேதிப்பொருட்கள் ரத்தக் குழாயில் படியும்போது, இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்கள் சுருங்கி, ரத்த ஓட்டம் தடைப்படுவதால், மாரடைப்பு வரும். தொடர்ந்து சிகரெட் பிடிப்பவராக இருந்தால், என்றாவது ஒரு நாள் நீங்கள் பிடிக்கும் சிகரெட் உங்களின் உயி்ரைப் பறிக்கும் கடைசி சிகரெட் ஆகும் அபாயம் உள்ளதால், சிகரெட் பழக்கத்தை உடனே கைவிடுங்கள்.


- பு.விவேக் ஆனந்த்

Sunday, July 3, 2016

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்!

முருங்கையை நட்டவன் வெறுங் கையோடு போவான்!

இவ்வாறு வாய்வழி வந்த வார்த்தையை கேட்டு அதற்கு தவறுதலான அர்த்தம்கொண்டு பலர் வீடுகளில் முருங்கை மரத்தை நடுவதை தவிர்த்துவிடுகிறார்கள்.

ஒருவர் முருங்கை மரத்தை வீட்டில் வளர்த்தால் அவருக்கு பூ, காய், இலை, பிசின்,ஆகியவை கிடைக்கிறது.


இவைகள்  அனைத்தும் உடலை இளமையோடும் ஆரோக்கியத்தோடும் வைத்துக் கொள்ள கூடிய மூலிகைப் பொருள்கள் இவைகளை தினமும் யார் உணவில் பயன் படுத்துகிறாரோ அவர் வயதானாலும் குச்சி ஊன்றாமல் வெறுங்கையோடு நடந்து செல்வார் என்பதையே முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் என்று சொல்லி வைத்தார்கள்

ஆகவே நாமும் முருங்கையை நட்டு வெறுங்கையோடு நடப்போமா?.....

எதிர்கால வாழ்க்கைக்கான வருமானம் ! மற்றும் வருமான யோசனைகள் !

பெரும்பாலும், "நீங்கள் தூங்கும்போது பணம் சம்பாதிக்கவும்" என்ற சொற்றொடரை நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம்.   பெரும் பாலான மக்களை செய...