Total Pageviews

Sunday, February 7, 2016

உணவே மருந்தாக இருக்க வேண்டும் !



உணவு பழக்கம்" பழமொழி வடிவில்

காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.


* போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே


* பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா


* சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.


* எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல


* தன் காயம் காக்க வெங்காயம் போதும்


* வாழை வாழ வைக்கும்


* அவசர சோறு ஆபத்து


* ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்


* இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு


* ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை


*இருமலை போக்கும் வெந்தயக் கீரை


* உண்ணா நோன்பு ஆயுளைக் கூட்டும்.


* உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி


* கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்


* குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை


* கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை


* சித்தம் தெளிய வில்வம்


* சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி


* சூட்டை தணிக்க கருணை கிழங்கு


* ஜீரண சக்திக்கு சுண்டக்காய்


* தலை வலி நீங்க முள்ளங்கி சாறு


* தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை


* பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி


* மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு


* வாந்திக்கு மருந்து மணத்தக்காளி


* வாத நோய் தடுக்க அரைக் கீரை


* வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்


* பருமன் குறைய முட்டைக்கோஸ்


* பித்தம் தணிக்க நெல்லிக்காய்


உணவு மருந்தாக இருக்க வேண்டும்…. இல்லாவிட்டால் மருந்தே நமக்கு 


உணவாகும் நிலைமை உருவாகும் ”.

நலம் உடன் வாழ்வோம்


Thanks to Neelavathy Neela

No comments:

Post a Comment

எதிர்கால வாழ்க்கைக்கான வருமானம் ! மற்றும் வருமான யோசனைகள் !

பெரும்பாலும், "நீங்கள் தூங்கும்போது பணம் சம்பாதிக்கவும்" என்ற சொற்றொடரை நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம்.   பெரும் பாலான மக்களை செய...