Total Pageviews

Thursday, April 25, 2013

மழை நீர் சேமித்தால் மட்டுமே நாட்டில் உள்ள தண்ணீர் பஞ்சத்தை போக்க முடிய்ம்.

ஊரணிகள், குளங்கள், குட்டைகள் போன்றவற்றில் மழை நீர் சேமித்தால் மட்டுமே நாட்டில் உள்ள தண்ணீர் பஞ்சத்தை போக்க முடிய்ம். நாட்டில் உள்ள அனைவரும் சமூக அக்கறையுடனும், ஓற்றுமை உணர்வுடனும் இதற்க்கான முயற்சிகளை மேற்க்கொள்ள வேண்டிய தருணம் இதுவே ஆகும்.

மழை நீர் சேமிப்பின் அவசியம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமையே இந்த நிலைக்கு காரணம். பல்வேறு நகரங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. மழை நீரை சேமிப்பதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயரும். எதிர்கால நீர் தேவை குறித்த சரியான திட்டமிடல் இல்லையெனில் இந்த சமூகம் மிகப்பெரிய ஆபத்தை சந்திக்கும் நிலை ஏற்படும். எனவே மழை நீர் சேமிப்பு திட்டத்தை நிரந்தரமாக செயல்படுத்தவேண்டும்.

போதிய அளவு மழை பெய்ய அதிக அள்வில் மரகன்றுகளை நடவு செய்து  பேணி  பாதுகாதது வளர்ததல் அவசியம்.

1950-1960-ம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இருந்த ஊரணிகள், குளங்கள், குட்டைகளின் நிலை எப்படி இருந்ததோ, அதனைக் கண்டறிந்து, அவற்றை பழைய நிலைக்கு கொண்டு செல்வதன் மூலம் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தூர்ந்து போய் கிடக்கும் இணைப்புக் கால்வாய்கள், வரத்துக் கால்வாய்களை தூர்வாரவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதன்மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி, விவசாய உற்பத்தித்திறனை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

79,394 குக்கிராமங்கள்

செயற்கைக்கோள் உதவியுடன் தயாரிக்கப்பட்ட வரைபடங்களைக் கொண்டு பல்வேறு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. வருவாய் கிராமங்களின் வரைபடங்களைக் கொண்டு 12,524 கிராம பஞ்சாயத்துகளின் வரைபடங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதன்மூலம் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள 79,394 குக்கிராமங்கள், ஊரணி, குளம், குட்டை போன்ற நீர் ஆதாரங்கள், வரத்துக் கால்வாய் ஆகியவற்றின் தற்போதைய நிலையை கண்டறிய முடியும்.

இதனால் ஒரு குறிப்பிட்ட கிராம பஞ்சாயத்தில் என்னென்ன இருக்கிறது? அங்கு என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும்? என்பதைக் கண்டறியவும், கிராமப்புற வளர்ச்சிக்கான தொகுப்பு திட்டங்களை மேற்கொள்ளவும் முடியும்.

மழை நீர்  உயிர் நீர்  என்ற உணர்வு எல்லோருக்கும் ஏற்பட வேண்டும்.  தண்ணீரை சிக்கனமாக ப்யன்படுத்தி  நீர் சேமித்தால் மட்டுமே அடுத்த தலை முறை தண்ணீரை விலை கொடுத்து  வாங்க் வேண்டியிருக்காது.


No comments:

Post a Comment

முதியோர் இல்லத்தில் அன்னதானம் செய்ய போறீங்களா!ஒரு நிமிடம் இதை படியுங்கள்!

 ஒரு முதியோர் இல்லத்துக்கு சென்று, அங்குள்ள நிர்வாகியிடம் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தேன். எனக்கு 10 ஆண்டுகளாக அவரோடு பழக்கம் உண்டு. அந்த சம...