Total Pageviews

Tuesday, December 4, 2012

நாடு வளம் பெற கல்வியும் மருத்துவமும் இலவசமாக்கப்பட வேண்டும்

நாட்டு மக்கள் அனைவருக்கும்  முறையான மருத்துவமும், கல்வியும் முற்றிலும் இவலசமாக்கப்பட வேண்டும்

பல் லட்சம் ரூபாய் கொடுத்து மருத்துவம் படிப்பது வேதனைக்குரியது. பல இலட்சங்கள் செலவு செய்து மருத்துவரான ஓருவரால் இலவசமாகவோ அல்லது குறைந்த கட்டண்த்திலோ சிகிச்சை செய்ய இயலாது எனவே கல்வியும் மருத்துவமும் முற்றிலும் இவலசமாக்கப்பட வேண்டும். அதை வியாபாரமாக்கக் கூடாது

அனைவருக்கும் தரமான இலவசகல்வியின் முலம் திறமையானவர்களை கண்டறிந்து அவரவர்க்கு தேவையான கல்விதனை அளிக்க வேண்டும்.
 
மாணவ, மாணவிகள் பல மொழிகளை கற்றுக் கொள்ள வேண்டும். அதே சமயத்தில் தாய் மொழியை பேசுவதில் பெருமை கொள்ள வேண்டும்.அறிவாற்றலை வளர்த்து கொள்ள நூலகம் பெரிதும் உதவுகின்றது. தாய்மொழியை நேசிப்பவனால்தான் தாய்நாட்டை நேசிக்க முடியும்.

கல்வியும் மருத்துவமும் இலவசமாக்கப்பட வேண்டும்.  இவ்வாறு இவை இரண்டும்  இலவசமாக அரசு வழ்ங்கினால் பல வகையான குற்ற நடவடிக்கைகள் குறைய்ம், நாடும் வளம் பெறும்.

எவ்வளவு சிக்கரம் முடியுமோ அவ்வளவு சிக்கரம் அது நடந்தே ஆக வேண்டும். கல்வியும் மருத்துவமும் வியாபாரம் ஆவது வளரும் நாட்டுக்கு நல்லதல்ல. சிறந்த மாணவ, மாணவியர்தான் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற முடியும்.


By.K.P.Sithayan Sivakumar 

நேற்று என்பது உடைந்த பானை  இன்று என்பது கையிலுள்ள வீணை, நாளை என்பது மதில்மேல் பூனை
 



No comments:

Post a Comment

எதிர்கால வாழ்க்கைக்கான வருமானம் ! மற்றும் வருமான யோசனைகள் !

பெரும்பாலும், "நீங்கள் தூங்கும்போது பணம் சம்பாதிக்கவும்" என்ற சொற்றொடரை நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம்.   பெரும் பாலான மக்களை செய...