Total Pageviews

Tuesday, June 19, 2012

மது

மது  பற்றி  கவியரசு கண்ணதாசன்

 
மதுப் பழக்கம் உள்ள ஒருவனே மதுவினால் விளையும் தீமைகளைத் தெளிவாக எடுத்துரைக்க முடியும்.


`எனக்கு இருபதாண்டுகளாக அந்தப் பழக்கம் உண்டு' என்பது ஒன்றும் புதிய செய்தியல்ல.


அந்தத் தார்மீக ஒழுக்கக் கேட்டிற்கு நான் வக்காலத்து வாங்க வரவில்லை.


ஆனால், `சட்டத்தினால் மதுவை ஒழிக்க முடியாது' என்று நான் வாதிட்டிருக்கிறேன்.


சட்டம் போட்டு ஒன்றை மறைக்க, மறைக்க அது பற்றிய ஆசைகளே கிளர்ந்து எழும

"குடித்தால் உன் உடம்பு கெடும்.


மலத்துக்கும், சோற்றுக்கும் வித்தியாசம் தெரியாது.


காரணம் இல்லாமல் வீண் பகைகளைக் கொண்டுவந்து சேர்க்கும்.


நீ என்ன சொன்னாலும் உலகம் உன்னை நம்பாது.


நீ நிதானமாகப் பேசினாலும் கூட, `இது குடிகாரன் பேச்சு' என்று தள்ளிவிடும்.


நீ குடிக்கும் மது, உன் குடும்பத்தின் வாழ்வைக் குடித்து விடும்.


உன் வருமானம் பாழாகும்.


செய்ய வேண்டிய காரியத்தைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்ய முடியாது.


மதுவினால் நீ நோயுற்றால், உனக்காக யாரும் வருத்தப்பட மாட்டார்கள்.


குடும்பத்தாலும் சமுதாயத்தாலும் ஒதுக்கப்பட்ட புல்லாக, பூச்சியாக நீ மாறிவிடுவாய்.


நற்குலப் பெண்கள் உன் அருகில் வரவே பயப்படுவார்கள்.


மொத்தத்தில் நீ மனிதனாகவே வாழ முடியாது"


இப்படி அவனுக்கு இடித்துக் காட்டினால், ஒரு கட்டத்தில் இந்த அனுபவம் அவனுக்கு வந்து,


மதுவைக் கைவிட்டு விடுவான்.


ஆகவே தான், இந்தியா தோன்றிய காலத்தில் இருந்து, பின் இந்து மதம் பிறந்த காலத்தில் இருந்து, மதுவுக்கு எதிராக மதம் வாதாடிப் போதித்திருக்கிறதே தவிர, அரசர்களிடம் தன் சக்தியைப் பயன்படுத்தி, அதைத் தடைசெய்யச் சொன்னதில்லை.


"மது உள்ளே போனால், மதி வெளியே போகும்."


"சாராயத்தை உள்ளே போட்டால், பூராயம் எல்லாம் வெளியே வந்துவிடும்"


"குடிகாரன் பேச்சு பொழுது விடிஞ்சாக்கப் போச்சு"


"கள்ளுக் குடிச்சவனுக்குச் சொல்லுப் புத்தி ஏறாது."


இவையெல்லாம் கிராமத்துப் பழமொழிகள்.


மதுவிலக்குப் பிரச்சாரம் இந்தியாவில் பல கோணங்களில், பல விதங்களில், பல கட்டங்களில் நடைபெற்று வந்திருக்கிறது.


அப்பொழுதெல்லாம், நாட்டிலே குடிகாரர்கள் குறைவாகவே இருந்தார்கள்.


என்று மதுவிலக்குச் சட்டம் வந்ததோ, அன்றிலிருந்துதான் குடிப்பவர்கள் அதிகமானார்கள்.


ஆகவே, இந்த வகையிலும் மதம் போதித்து எழுப்பும் தார்மீகச் சக்தியை சட்டம் உருவாக்க முடியாது.


இந்து மதம், மது உண்பவர்களையே `அரக்கர்கள்' என்று அழைத்தது.
  
மதுவினால் மதியிழந்தோர் கதைகள் இந்துமத ஏடுகளில் ஏராளம், ஏராளம
குடிப்பவனுக்குப் பெண் கொடுக்க மாட்டார்கள்.


"நெருப்பை நெய்யால் அணைத்தேன்" என்கிறான்.


கவலைக்காகக் குடிக்க ஆரம்பித்தால், உள்ளே போய் விழுந்த மது, அந்தக் கவலையை அதிகப்படுத்துமே தவிரக் குறைக்காது.


ஒரு குடிகாரன், குடிக்க ஆரம்பிக்கும்போது எதை நினைத்துக் கொண்டு குடிக்கத் துவங்குகிறானோ, அதுதான் அவன் குடித்து முடித்துத் தூங்கும்வரை விசுவரூபம் எடுத்து நிற்கும்.


முதல் ரவுண்டு குடிக்கும் போது, `ஒருவனை உதைக்க வேண்டும்' என்று நீ நினைத்தால் மூன்றாவது ரவுண்டு முடிந்ததும், அவனைத் தேடி உன்னைப் போகச் சொல்லுமே தவிர, அந்தக் கோபத்தை அது குறைக்காது.


அதனால்தான், மேலை நாட்டார் தனியாகக் குடிப்பது இல்லை.
குடிக்க குடிக்க, வயிற்றுக்குள்ளே Fluid உற்பத்தியாகிறது.
`வயிறு மகோதரம்' போல் ஆகிவிடுகிறது.
ஈரலில் Liver Sirosis என்ற நோய் உற்பத்தியாகிறது.
   
ஆரம்ப காலத்தில், குடிகாரர்கள் நிறையச் சாப்பாடு சாப்பிடுவார்கள்.
நாள் ஆகஆக, குடி அதிகமாகி சாப்பாடு குறைந்துவிடும்.


`மரணம் வாசல் வரைக்கும் வந்துவிட்டது' என்பது இதன் பொருள்.
தண்ணீரையும் நாம் குடிக்கிறோம்; பாலையும் குடிக்கிறோம்.


ஆனால், எதையும் `குடி' என்று அழைப்பதில்லை.


இதை மட்டும் ஏன் `குடி' என்கிறோம்? இது ஒன்றுதான், உயிரைக் குடிக்கிறத மதுவினால், உண்மையிலேயே நான் போய்ச் சேர வேண்டிய ஊருக்குப் போய்ச் சேர முடியாமல் ரயிலைத் தவற விட்டிருக்கிறேன். வாழ்க்கை ரயிலையும் தவற விட்டிருக்கிறேன்.


ஒரு இந்து, மது அருந்துவதை மதம் நியாயப்படுத்தவில்லை.


வழக்கம்போலவே அவனைத் தட்டிக் கொடுத்துத் தர்ம போதனை மூலம் திருப்புகிறது.


மதுவிலக்கை சரியாகச் செயல்படுத்த வேண்டும்


மத விரிவுரையாளர்களால் மட்டுமே இயலும்.


உங்களிடம் பணி புரிகிறவர்களை, மரியாதையோடும் கண்ணியத்தோடும் நடத்துங்கள். அவர்கள்தான் உங்களுடைய மிகப் பெரிய சொத்து.

உலகம் வெகுவேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. நீங்கள் ஒரு விஷயத்தை முடியவே முடியாது என்று சொல்லி முடிப்பதற்குள், வேறொருவன் அதைச் செய்து முடித்து, உங்கள் வாக்கைப் பொய்யாக்கி விடுகிறான்.



 

No comments:

Post a Comment

திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?

 திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?   பெண்கள் 1)   பையன் நல்லா படிச்சிருக்கனும் , 2)   சொந்த வீடு இருக்கனும் , 3)   ந...