Total Pageviews

Thursday, May 3, 2012

அக்னி நட்சத்திர வெப்பத்திலிருந்து நம்மை காத்துக் கொள்ள


அக்னி நட்சத்திரம்  ஒவ்வொரு ஆண்டும் சித்திரை 21ஆ‌ம் தேதி முதல் வைகாசி 14ஆ‌ம் தேதி வரை இருக்கும். நடப்பாண்டு சித்திரை 22 அதாவது இன்று காலை 7.53 மணிக்கு தொடங்கி வைகாசி 15ஆ‌ம் தேதி அதாவது 28ஆ‌ம் தேதி பகல் 12.45 மணி வரை அக்னி நட்சத்திர காலமாகும். இந்த காலகட்டத்தில் சூரியன் உச்சப்பலம் பெறுகிறார். இதனால் வெப்பம் அதிகரித்து காணப்படும்.

சூரிய வெப்பத்தால் முதியவர்களுக்கு மயக்கம் போன்று ஏற்படுவதும் இயற்கை. இதிலிருந்து தப்பிப்பதற்கு எளிய முறைக‌ள்:

1. கோடை காலம் தொடங்கிவிட்டதால் தண்ணீர் தாகமும் அதிகரிக்கும்.

2. சாதாரண நீரை குடிப்பதற்கு பதிலாக உடம்புக்கு குளிர்ச்சி தரும் காய்ச்சி வடிகட்டிய குளிர்ந்த நீர்
, மோர், உப்பு போட்ட எலுமிச்சை பழ சாறு குடிக்கலாம்.

3. வெள்ளரி பிஞ்சு
, தர்பூசனி மற்றும் பிற வகை பழங்கள் சாப்பிடலாம்.

4. மீன்கள் சாப்பிடுவதால் சிலருக்கு அலர்ஜியும்
, சைனஸ் போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகிறது. இதனால் அக்னி நட்சத்திரம் காலகட்டத்திலாவது மீன்கள் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

5. கடும் வெயிலில் சென்றுவிட்டு வீட்டிற்கு சென்ற உடன் சிறிது நேரம் மின்விசிறியின் கீழ் அமர்ந்து
, தலையில் உள்ள வியர்வை காய்ந்த பின்னர் பானங்கள் அருந்துவது நல்லது.

6. கோடை காலமாக இருப்பதால் கிராமங்களில் ஆறு
, குளம், கிணறுகளில் மூழ்கி குளிப்பதை தவிர்க்கலாம். காரணம் சிலருக்கு காது வலி ஏற்பட்டு சீழ் வடிய துவங்கிவிடும். குளிர்பானங்களை முற்றிலுமாக தவிர்த்துவிட வேண்டும்.

7. காய்ச்சி வடிகட்டிய நீர் 10 அல்லது 15 டம்ளர் தினசரி குடிக்க வேண்டும்.

8. காரமான உணவு வகைகள் மற்றும் பான்பராக்
, பாக்கு போடுவதை கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது.

கோடை காலங்களில் இவற்றை கடைப்பிடிப்பதன் மூலம் அக்னி நட்சத்திர வெப்பத்திலிருந்து ஓரளவு நம்மை காத்துக் கொள்ள முடியும் 

  
 பணியாளர் எப்போது தனது பணியை கடமையுணர்ந்து பொறுப்புடன் இறைவனைப் பயந்து தொழுகின்றாரோ அவருடைய ஒவ்வொரு செயலுக்கும் இறைவன் இரண்டு கூலி கொடுக்கின்றான். ஒன்று இவ்வுலகத்திலும் மற்றொன்று மறுமையிலும் கிடைக்கும். 


No comments:

Post a Comment

திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?

 திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?   பெண்கள் 1)   பையன் நல்லா படிச்சிருக்கனும் , 2)   சொந்த வீடு இருக்கனும் , 3)   ந...