Total Pageviews

Thursday, April 26, 2012

ATM - நூதன திருடர்கள் - ATM திருட்டை தடுப்பது எப்படி?



"கிரெடிட், டெபிட்" கார்டுகளை பயன்படுதுவரா நீங்கள் ? 

உங்களுக்குக்கான பகுதி தான் இது.அறிவியல் கண்டு பிடிப்புகள் பாமர மக்களுக்கு உதவியது போய், இப்போது பரம்பரை திருடர்களுக்கும் பயன் படுகிறது என்று நினைக்கும் போது வயிற்றில் புளியை கரைக்கிறது.புகை போட்டு நகை திருடும் காலம் மலையேறிவிட்டது. நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இவர்கள் கொள்ளை யடிப்பதாலும், மேலும் பல புகார் இருப்பதாலும் பொது மக்கள் உஷாராக  இருக்க வேண்டும்.


இப்போதெல்லாம் பணத்தை கொண்டுசென்று பொருட்களை வாங்கி வருவதில்லை மாறாக  கிரெடிட், டெபிட் கார்டுகள் பயன்படுத்தம் பழக்கம் அதிகரித்து வருகிறது.கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை கண் இமைக்கும் நேரத்தில் காணமல் போனால் அதை விட பெரிய வேதனை என்னவாக இருக்கமுடியும். எப்படி திருடுகிறார்கள்?


 “கார்டுகளை'   பயன் படுத்தும் போது,  அதில்  இருக்கும் விவரங்களை திருட நினைப்பவர்கள், கூடவே கையில் சிறியதாக வைத்திருக்கும், "ஸ்கிம்மர்' என்ற கையடக்க மிஷினிலும் தேய்த்து விட்டு திருப்பிக் கொடுத்து விடுவர்.அந்த மிஷினை போலி கிரெடிட் கார்டு தயாரிக்கும் கும்பல், ஊழியருக்கு பணம் கொடுத்து வாங்கிச் செல்லும். இவ்வாறு சேகரித்த தகவல்களை, பழைய கார்டுகளில் புகுத்தி பணம் கொள்ளையடிக்கப் படுகிறது.சில நிறுவன உழியர்களே இச்செயலில் ஈடுபடுவதால் கார்டை பயன்படுத்துவர்கள், உஷாராக இருப்பது நல்லது.


கிரெடிட், டெபிட் கார்டு பயன்படுதுவர்கள்   கவனமாக இருந்தால், நூதன திருடர்கள் மக்கள் பணத்தில் குளிர் காயமாட்டார்கள்.

இதிலிருந்து எப்படி நம் பணத்தைபாதுகாப்பது என்பதை பார்ப்போம்.

ஸ்கிம்மர் கருவி

சென்னை மேடவாக்கம் கூட்ரோடில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி ஏ.டிஎ.ம் மையத்தை சுத்தம் செய்வதற்காக வந்த நபர் ஏ.டி.எம் இயந்திரத்தின் முன்  கதவை திறக்க முயற்சி செய்து முடியாததால் டெக்னீசியனை அழைத்துள்ளார்.  கதவை திறந்த டெக்னீசியன் பணம் வெளிவரும் ஓட்டையின் பின் பகுதி அருகாமையில் சோப்பு பெட்டியுடன் (ஸ்கிம்மர்) ஒரு புளுடூத் வசதி உள்ள மொபைல் இணைக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ந்து போனார். வெடிக்குண்டு ஆக இருக்கும்  என பயந்து வங்கி அதிகாரிகளை அழைத்துள்ளார்.


வங்கி ஊழியர்கள் எங்களை  அழைத்தனர் என்றார் திரு.ஆர்.வேதரத்தினம், அசிஸ்டண்ட் கமிஷ்னர் ஆப்போலிஸ், மடிப்பாக்கம்.


தகவல் திருடுதல்

ஏ.டி.எம் மையத்திற்கு பணம் எடுக்க வருபவர்கள்கார்டை நுழைத்து, பின் (PIN) நம்பரை பதிவு செய்தவுடன்,ஏ.டி.எம்- 

இயந்திரத்தின் உள்ளே இணைக்கப்பட்டுள்ள மொபைல்-க்கு ஸ்கிம்மர் மூலம் தகவல் சென்றடைகிறது. ஏ.டி.எம் அருகில் நின்று  இருக்கும் கொள்ளையன் வேறு  ஒரு  பொபைல்  உதவியுடன், ஏ.டி.எம் இயந்திரத்தின் உள்ளிருக்கும் பொபைலை புளுடூத் வசதி மூலம் இணைத்து தகவலை திருடுகிறான். திருடிய தகவல்களை டம்மி கார்டில் புகுத்தி பணத்தை கொள்ளையடிக்கப்படுகிறது.


தகவல் திருடுவதை எப்படி தடுக்கலாம் ?

காவல்பணியாளர்கள் இல்லாத,ஆட்கள் நடமாட்டம் குறைவாக உள்ள இடங்களில் உள்ள ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுப்பதை தவிர்க்கவும்.

வெளியிடங்களுக்கு செல்லும் போது பணத்திற்குபதிலாக கிரெடிட் அல்லது டெபிட் கார்டைகொடுக்க நேர்ந்தால், நம் முழுக் கவனத்தையும் கார்டின்  மீது  வைத்துக்  கொள்ளவும்.  நம்முடைய விவரங்களை  திருட  நினைப்பவர்கள்,  கூட வேகையில் சிறியதாக வைத்திருக்கும்,

 "ஸ்கிம்மர்'என்ற கையடக்க மிஷினிலும் தேய்த்து விட்டு திருப்பிக் கொடுத்து விடுவர். கார்டைகொடுத்த பின், ஊழியர்கள்  பேச்சு  கொடுத்து  நம் கவனத்தை  திசை  திருப்ப  வாய்ப்பு  இருப்பதால் கவனமாக இருப்பது  நல்லது.

 ATM திருட்டை தடுப்பது எப்படி?

இதுஒருமுக்கியமான டிப்ஸ்: நீங்கள் ஒரு ATM ல் பணம்  எடுக்க  செல்லும் போது  எதிர்பாராத விதமாக உங்களை ஒரு திருடன் மிரட்டி பணத்தை எடுக்க சொன்னால் என்ன செய்ய  வேண்டும்.

 நீங்கள் அவனுடன் எந்த விவாதமும்,கெஞ்சலும் செய்ய வேண்டாம். மிகவும் எளிதாக உங்களுடைய ATM PIN Number -இய் தலைகீழ் மார்க்கமாகEnterசெய்யுங்கள். 
எடுத்துகாட்டாக:உங்களுடைய  PINNumber 1234 என்றால் 4321 என்று Enter  செய்யுங்கள்.

இவ்வாறு உங்கள் PIN Number type செய்தால் ATM மிஷன்-ல் இருந்து பணம் வெளியில் வரும்.ஆனால் பாதியிலேயே பணம் சிக்கி கொள்ளும். அதோடு  மட்டுமில்லாமல்  ஓசைபடாமல் போலீஸ்-க்கும்  தகவல்  அளித்துவிடும் . அனைத்து ATM -ம் இந்த வசதியை கொண்டுள்ளது.ஆனால் இந்த வசதி இருப்பது பெரும்பாலானவருக்கு தெரியாத ஒன்று.


தயது செய்து இதை சோதித்து பார்க்க முயலாதீர்.நீங்கள் ஆபத்தில் இருக்கும் போது மட்டுமே பயன்படுத்துங்கள் .

No comments:

Post a Comment

திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?

 திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?   பெண்கள் 1)   பையன் நல்லா படிச்சிருக்கனும் , 2)   சொந்த வீடு இருக்கனும் , 3)   ந...