Total Pageviews

Saturday, April 6, 2024

திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?

 திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?


 

பெண்கள்

1)  பையன் நல்லா படிச்சிருக்கனும்,

2)  சொந்த வீடு இருக்கனும்,

3)  நல்ல கம்பெனியில வேலை பார்க்கனும்,

4)  ஒரு லட்ச ரூபாய்க்கு மேல சம்பளம் வாங்கனும்,

5)  வழுக்கை தொப்பை இல்லாம பார்க்க நல்லா இருக்கனும்,

6)  பெரிய குடும்பமா இருக்கக்கூடாது,

7)  வெளிநாட்டுல வேலை செஞ்சா கல்யாணம் முடிஞ்ச உடனே மனைவியை கூட்டிகிட்டு போயிடனும்,

8)  வயசும் முப்பதுக்கு மேல இருக்கக்கூடாது.

இப்படிப்பட்ட கண்டிஷன்கள் பெண் அல்லது அந்த பெண்ணை பெற்ற பெற்றோர்களால் வைக்கப்படும்போது எப்படி திருமணம் ஆகும் ? முதிர் கண்ணன்களையும் முதிர் கன்னிகளையும் தான் உருவாக்கும், திருமணத்தை கடின நிகழ்வாக்கும்.

நம்ம பொண்ணுக்கு ரெண்டு வருஷம் சீனியர் அந்த பையன், அப்படி இருக்கும் போது அவன் எப்படி அதுக்குள்ள சொந்த வீடு கட்டியிருப்பான், எப்படி ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குவான் என்ற அடிப்படை அறிவோ, சிந்தனையோகூட கிடையாது...

பேராசையும், கிறுக்குத்தனமான சிந்தனையும் சமகால ஆண், பெண் பிள்ளைகளின் திருமணத்தை கடினமாக்கி அவர்களின் வாழ்வை நாசமாக்குகின்றன...!!!

தற்கால கல்வியினால் சம்பாதிப்பதை தவிர, வாழ்க்கையை பற்றிய அறிவோ,சிந்தனையோ, புரிதலோ வளரவில்லை. பேராசையும், கிறுக்குத்தனமான சிந்தனைகளும், செயல்களும் தான் வளர்ந்துள்ளன...!!!

முன்பெல்லாம், பெண்கள் அதிகம் படிக்கவும் இல்லை, படித்தாலும் வேலைக்கும் அதிகம் சென்றது இல்லை.

அதனால் யாரோ ஒருத்தனுக்கு நம்ம பிள்ளையை கட்டிக்கொடுதா போதும்னு பெண்ணின் பெற்றோர் நினைச்சாங்க. ஆனால், இன்று பலரும் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு வரை படிக்கிறார்கள். வேலைக்கும் செல்கிறார்கள்.

கண்டிப்பாக இது மகிழ்ச்சியான விஷயம் தான்.. பெண்கள் படிப்பதும், வேலைக்குச் செல்வதும் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளக் கூடிய ஆரோக்கியமான விஷயம் தான். ஆனால்

பிள்ளையைப் பெற்ற பெற்றோர் இருக்காங்க பாருங்க. நான் எல்லாரையும் சொல்லல..ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள், அவங்க மகள் வேலைக்குச் செல்வதை ஒப்பிட்டு அப்பெண்னை விட பல மடங்கு உயர்ந்த சம்பளத்தில் இருக்கும் பையனை தான் பாக்குறாங்க!

இப்போ வரைக்கும் ! பார்த்த வரன் எல்லாமே..பொண்ணுக்கும் , பையணுக்கும் பிடித்து இருந்தாலும் கூட அவங்க  அப்பாக்களுக்கு பிடிக்காமல் போனதே காரணம்!

வாழ்க்கை ஒரு பாடத்தை நடத்துகிறது. நிறைய மனிதர்களுக்கு அது புரிவது இல்லை. அது என்னவென்றால்:

"எதை நீ அவமதிக்கிறாயோ, எதை நீ வீணடிக்கிறாயோ அது உன்னிடம் இருந்து இயற்கை எடுத்து விடும்."

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் திருமண வாய்ப்புகளை சொந்தக் காரணங்களுக்காக தள்ளி வைக்காமல், திருமணத்தை சரியான காலத்தில் செய்து கொள்வதே நல்லது. ஆண்கள் அதிகபட்சம் 30 வயதிற்குள் திருமணம் செய்து கொள்ள வேண்டும். பெண்கள் அதிகபட்சம் 25 வயதிற்குள் திருமணம் செய்ய வேண்டும். இது அனைத்தும் தவறும்பட்சத்தில் புத்திர பாக்கியம் உண்டாவதிலிருந்து, மன ஒற்றுமை ஏற்படுவது வரை நிறைய பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வருகிறது.

ஒரு சிலர் திருமணம் கூடி வரும்போது அந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ளாமல் நல்ல வேலை கிடைத்த பிறகு திருமணம் செய்துகொள்கிறேன் என்று கூறுவதும் அல்லது சொந்த வீடு வாங்கிய பின்பே திருமணம் செய்வேன் என்று சொல்வதும் தேவையான பணம் சேமிப்பாக மாறிய பிறகே திருமணம் செய்து கொள்வேன்  என்று சொல்வதும்  திருமணம் அமைவதற்கு  தடையாக   உள்ளது.


 

ஆண்கள் கேட்க வேண்டியவை

     உங்களுக்கு பிடித்து தானே திருமணத்திற்கு சம்மதம் சொன்னீர்கள். நிறைய பேர் வீட்டில் பெண்களை கேட்பதே இல்லை..

    என்னோட தோழிய இருக்க விருப்பமா..?

    சேலை கட்ட தெரியுமா.. இன்று பல பெண்களுக்கு சேலை கட்ட தெரியவில்லை..

   சமைக்க தெரியுமா..!

   மேற்கொண்டு படிக்க விருப்பமா!

   நல்ல பேசத் தெரியுமா..?

     

ஆண்கள் கேட்க கூடாதாவைகள்    :   வரதட்சணை

 

பெண்கள் கேட்க கூடாதாவைகள்

   உங்களோட சம்பளம் எவ்வளவு?

  திருமணத்திற்கு பிறகு தனிக்குடித்தனம் வருவீங்களா?

  பேங்க அக்கவுண்ட் எவ்வளவு இருப்பு உள்ளது?

  சொத்து எவ்வளவு வரும்?

  வீடு சொந்தமா? வீடு யாரு பெயர்ல இருக்கு!

இதை எல்லாம் பெண் வீட்டார்கள் கேட்பார்கள், கேட்டால் நீங்கள் மாப்பிள்ளையை விரும்பவில்லை. அவர் பெயரில் இருக்கும் சொத்து மற்றும் பணத்தை தான் விரும்புகிறீர்கள்.

உங்கள் மகளின் எதிர்கால வாழ்க்கை பற்றி நீங்கள் சந்தேகிக்கலாம். ஆனால் ஒரு ஆணுடன் நீங்கள் பேசும்பொழுதே தெரிந்துவிடும் இவன் நம்ம பொண்ணுக்கு சரியானவனா இல்லையா என்று.

பெண்கள் கேட்வேண்டியவைகள் 

 நெடுந்தொலைவு பயணம் போகப் புடிக்குமா?

(சில பெண்களுக்கு மட்டும் ஊர் சுற்றும் விருப்பம் உண்டு)

   மது, புகை பழக்கம் உண்டா?

   நீங்க வெஜ் இல்ல  நான்வெஜ் .?

 என்னோட தோழனா இருக்க விருப்பமா 

 சமைக்க தெரியுமா… (நிகழ்காலத்தின் டிரெண்டு)

இதைப்போல நிறைய கேள்விகள் கேட்கலாம்….

 

ஜாதகப் பொருத்தம் மிக அவசியமானதுதான், ஆனால் அதற்காக ஜாதகத்தை மட்டுமே நம்பி இருப்பதும் வீண். இன்றைய காலகட்டத்தில் வயது குறைந்த பெண்ணிற்க்கும் அதிக வயது வித்தியாசத்துடன் கூடிய ஆணைத் திருமணம் செய்வதில் தொடங்குகிறது சிக்கல். இது முன்னோர்கள் செய்த முட்டாள்தனம். ஆமாம் பெண்ணை ஆண்கள் எளிதாக அடிமை செய்திட உருவாக்கப்பட்டதே இத்தகைய விடயம்.

ஆணுக்குப் பெண், இளைப்பில்லை காணென்று கும்மியடி என்று பாரதி பாடியது இதனைத்தான்.

ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் வித்தியாசம் இருந்தால் கூட பரவாயில்லை. 5 க்கு மேற்படும் பொழுது கிட்டத்தட்ட அந்த ஆண் அந்த பெண்ணிற்க்கு, அண்ணனைப் போன்றோ, நிலைமை இன்னும் மோசமாகும் பொழுது தந்தையைப் போன்றோ அமைந்து விடுகிறது.

அந்ததந்த ஆத்மா எவ்விதமான காதலை, அன்பை, இன்னும் சொல்லப்போனால் உருவத்தை விரும்புகிறதோ, அத்தகைய திருமணத்தை அடைவதே மேலானது.

 நிறைவு

அதைவிட்டு விட்டு ஒன்னத்துக்கும் உதவாத சொத்து,பணத்தை இரு வீட்டார்களும் கேட்பது முறைஅல்ல

இக்காலத்துக்கு பணம் தேவை தான் ஆனால் பணமே வாழ்க்கை அன்றுஒரு நகரத்தில் மாதம் ஒரு லட்சம் சம்பாதிப்பவன் தினறுகிறான்.. ஆனால் அதே ஊரில் மாதம் 10 ஆயிரம் வாங்குபவன் சந்தோஷமாய் இருகிறான்.

இந்த பிரபஞ்சத்தில் யார் ஒருவரோக்கு அம்மா அப்பா, நல்ல மனைவி / கணவன் மற்றும் நோயில்லாத வாழ்வு பெறுகின்றானோஅவனே இவ்வுலக்த்தின் ஆஸ்தியும் அந்தஸ்வும் உள்ளவன்

இதைப்பற்றி சொன்னால் நீ பைத்தியக்காரன் என்று சொல்கிறார்கள்

திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?

 திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?   பெண்கள் 1)   பையன் நல்லா படிச்சிருக்கனும் , 2)   சொந்த வீடு இருக்கனும் , 3)   ந...