Total Pageviews

Thursday, May 3, 2012

விபத்துக்களை தவிர்க்க சில வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம்



1000சிசி திறன் கொண்ட சூப்பர் பைக்கில் அதிவேகமாக சென்றதால்தான் அசாரூதீன் மகன் அயாஸுதீன்  சாலை விபத்தில் சிக்க நேரிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வேகமாக பைக் ஓட்டாதே என்று அயாஸுதீன் உடற்கல்வி ஆசிரியர்கள் பல முறை எச்சரித்தும் அவர் காதில் வாங்கி கொள்ளாததால் இதுபோன்ற கோர விபத்தில் சிக்கி மரண மடைந்துவிட்டார்.
 

ஆனால், இளைஞர்கள் நினைத்தால் இதுபோன்ற சாலை விபத்துக்களை நிச்சயம் தவிர்க்க முடியும் என்பதே நமது எண்ணம். சமீபகாலமாக இந்தியாவில் 1,000 சிசி திறன் கொண்ட பைக்குகளை விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது.

இதற்கேற்ப, சூப்பர் பைக்குகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. சூப்பர் பைக்குகளை ஓட்டுவதற்கு ஏற்ற சாலை வசதிகளோ, பயிற்சி மையங்களோ நம் நாட்டில் இல்லை என்பது முக்கிய காரணம்.

மேலும், சாதாரண ரக பைக்குகளை ஓட்டுவதற்கும், சூப்பர் பைக்குகளை ஓட்டுவதற்கும் ஏராளமான வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால், அதை சூப்பர் பைக் வாங்குபவர்கள் புரிந்துகொள்ளததால்தான் இதுபோன்று விபத்துக்களில் சிக்கி உயிரை விலையாக கொடுத்து விடுகின்றனர்.

இருப்பினும், இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க சில வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம்.

சூப்பர் பைக்குகள் மணிக்கு 300 கிமீ வேகத்தில் செல்லும் ஆற்றல்வாய்ந்த எஞ்சின்களுடன் வருகின்றன. இந்த பைக்குகளின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்கே முறையான பயிற்சி கண்டிப்பாக தேவை.எனவே, சூப்பர் பைக் வாங்குவதற்கு முன் உரிய பயிற்சி மையத்தில் சூப்பர் பைக் டிரைவிங் செய்வது குறித்த ஆலோசனைகளையும், நேரடி பயிற்சியையும் பெற்ற பின் சூப்பர் பைக் வாங்குவது குறித்து முடிவு செய்ய வேண்டும்.

பிரத்யேகமாக உருவாக்கப்படும் ரேஸ் டிராக்கில் ஓட்டுவதற்கு ஏற்ற வகையிலேயே சூப்பர் பைக்குகள் வடிவமைக்கப்படுகின்றன. அவற்றை குண்டும குழியும் நிறைந்த நம்மூர் சாலைகளில் ஓட்டும்போது மிக மிக கவனமாக இருக்கவேண்டும்.

முக்கியமாக சூப்பர் பைக்கில் ஒருவர் மட்டுமே செல்லும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன. சூப்பர் பைக்குகளின் பின் இருக்கைகள் அளவில் சிறியதாகவும், கூடுதல் உயரத்துடன் இருப்பதால் பைக் ஓட்டும்போது முழு பேலன்ஸ் கிடைக்காது.

சூப்பர் பைக் ஓட்டும்போது தரமான ஹெல்மெட்டுகளை அணிந்து செல்வது கூடுதல் பாதுகாப்பு. சாலை ஓரத்தில் விற்கப்படும் ஹெல் மெட்டுகளை வாங்கி அணிந்து செல்ல வேண்டாம்.

பல லட்சம் கொடுத்து வாங்கிய சூப்பர் பைக்கை கட்டை வண்டி மாதிரி ஓட்டுவதற்கா வாங்குகிறோம் என்பது காதில் விழுகிறது. கண்டிப்பாக வேகமாக ஓட்டலாம். அந்த பைக்கின் முழு கட்டுப்பாட்டை தெரிந்து கொண்ட பின்னர் சாலை நிலைமை அனுசரித்து ஓட்டினால் இதுபோன்ற விபத்துக்களை நிச்சயம் தவிர்க்கலாம்.

குறிப்பாக, சூப்பர் பைக்கை வேகமாக ஓட்டுவது எளிது, அதை உடனடியாகவும், சரியான இடத்திலும் நிறுத்துவது கடினம் என்பதை பிரபல பைக் ரேஸர் கவுரவ் கில் கூறியிருந்தார் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

மேலும், சாதாரண பைக்குகள் மற்றும் வாகனங்களுக்கு லைசென்ஸ் வழங்குவது போல் அல்லாமல் சிறப்பு பயிற்சி பெறுவர்களுக்கு மட்டுமே சூப்பர் வாங்குவதற்கும், ஓட்டுவதற்கும் லைசென்ஸ் வழங்கவேண்டும். இந்த விஷயத்தில் உடனடியாக கட்டுப்பாடுகளை கொண்டு வரும் மத்திய, மாநில அரசுகளுக்கு இருக்கிறது.

இவை எல்லாவற்றையும் விட சூப்பர் பைக் ஓட்டும்போது மிகுந்த கவனத்தோடும், மனக்கட்டுப்பாட்டோடும பாதுகாப்பாக ஓட்ட பழகிக்கொள்வது மிக அவசியம். இதனால், பைக் ஓட்டுபவருக்கு மட்டுமல்ல எதிரில் வரும வாகன ஓட்டிகளுக்கும் பாதிப்பு ஏற்படாது. இவற்றை கடைபிடித்தால் விலை மதிப்பற்ற உயிர்கள் பறிக்கப்படாது .
பிறர் இன்னல் அடைவதைக் கண்டு நீ சிரிக்காதே. அதில் மகிழ்ச்சியும்
அடையாதே. ஏனென்றால் அவனுக்கு நல்ல நிலையை ஏற்படுத்தி இறைவன் உன்னை சோதனைகளில் மூழ்க வைப்பான். 


- நீ மற்றவர்களைத் திட்டினால் இறைவனின் சாபம் உன் மீது உண்டாகும்.

கதிர்வீச்சால் ஏற்பட இருக்கும் மிகப்பெரிய பாதிப்புகள்

விழிப்புணர்வு நேரமிது!


பொருளாதாரச் சீர்திருத்தம், தாராளமயம் என்கிற பெயரில் யாரும் எதை வேண்டுமானாலும் செய்து மக்கள் நலனையும், நாட்டு நலனையும் காற்றில் பறக்கவிட்டுக் கொள்ளையடித்துக் கொள்ளலாம் என்கிற நிலைமை ஏற்பட்டுவிட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. அரசியல்வாதிகளுக்கும், அதிகார வர்க்கத்தினருக்கும் விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பதுடன், விலைபோகாதவர்கள் யாருமே இருக்க முடியாது என்கிற மனோநிலையும் தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதுதான் அதைவிடப் பெரிய ஆபத்தாகத் தெரிகிறது.
எந்த ஒரு புதிய தொழில்நுட்பத்துக்கும், தொழிலுக்கும் அனுமதி வழங்கும்போது, அதனால் தேசத்துக்கு ஏற்பட இருக்கும் நன்மை தீமைகளையும், மக்களுக்கு ஏற்பட இருக்கும் சாதக பாதகங்களையும் சீர்தூக்கி முடிவெடுப்பதற்காகத்தான் ஓர் அரசும், அரசு இயந்திரமும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், நடைமுறையில் தேசத்தையோ, மக்களையோ பற்றிய கவலையே இல்லாமல் தொழில் நிறுவனங்களின் நன்மையை மட்டுமே கருத்தில்கொண்டு செயல்படும் மக்கள் பிரதிநிதிகளையும், மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அதிகார வர்க்கத்தையும் இந்தியாவில் மட்டும்தான் காண முடியும் போலிருக்கிறது. 
செல்போன் என்கிற கைப்பேசி ஒரு விஞ்ஞானப் புரட்சி என்றும், பொருளாதார வளர்ச்சியின் அடையாளம் என்றும் மக்களை நம்ப வைத்தாகிவிட்டது. உலகிலேயே மிக அதிகமான கைப்பேசிகள் இந்தியாவில்தான் இருக்கப் போகின்றன. யாரைப் பார்த்தாலும் கைப்பேசியும் காதுமாகத்தான் இருக்கிறார்கள். ஒவ்வொரு தடவை கைப்பேசியில் பேசும்போதும் ஏதோ ஒரு நிறுவனத்துக்கு வருமானம் சேர்ந்துகொண்டே இருக்கிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிய கவலை யாருக்குமே இல்லை. 
அரசு கைப்பேசியை அனுமதிக்கும் முன்னால், அதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை அந்த நிறுவனம் செய்தாக வேண்டும், போதிய பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடித்திருக்க வேண்டும் என்று வரைமுறைகளை விதித்து மக்கள் நலனைப் பாதுகாத்திருக்க வேண்டாமா? அடுத்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய சுகாதாரப் பிரச்னையாக, பல லட்சம் பயனாளிகளின் உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் ஒன்றாகக் கைப்பேசிகள் மாறிவிடும் ஆபத்தைப் பற்றிச் சிந்தித்திருக்க வேண்டாமா? 
புதிது புதிதாகக் கைப்பேசி உரிமம் பல நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. “ஸ்பெக்ட்ரம்’ ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடும், அதனால் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பும்தான் சந்தி சிரிக்கிறதே. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டின் மூலம் உரிமம் பெற்ற பல நிறுவனங்கள் களமிறங்கிவிட்ட நிலையில், ஆங்காங்கே காளான்கள்போல உருவாகி வருகின்றன கைப்பேசி கோபுரங்கள். இந்த செல்போன் டவர்கள் எனப்படும் நுண்ணலை கோபுரங்கள் மூலம்தான் தடங்கல் இல்லாத சேவையைக் கைப்பேசி நிறுவனங்கள் அளிக்க முடியும். 
மூன்று மாதத்துக்கு முந்தைய புள்ளிவிவரப்படி, ஏறத்தாழ 5 லட்சத்து 62 ஆயிரம் நுண்ணலை கோபுரங்கள் இந்தியா முழுவதும் எழுப்பப்பட்டிருந்தன. இப்போது இன்னும் சில ஆயிரம் கோபுரங்கள் எழுப்பப்பட்டிருக்கலாம். இந்தக் கோபுரங்களிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சால் ஏற்படும் பிரச்னைகள் பற்றிச் சொல்லி மாளாது. இதெல்லாம் நமது தொலைத்தொடர்புத் துறைக்குத் தெரியாதா என்ன? 
நுண்ணலை கோபுரங்கள் அமைப்பதற்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு அவை மீறப்படாமல் பார்த்துக் கொள்வதுதானே ஓர் அரசின் கடமை. நமது தொலைத்தொடர்புத் துறை என்ன செய்திருக்கிறது தெரியுமா? நுண்ணலை கோபுரங்களை அமைக்கும் கைப்பேசி நிறுவனங்கள், தாங்களே பரிசோதனை செய்து, கதிர்வீச்சின் அளவு குறிப்பிட்ட அளவுதான் இருக்கிறது என்று ஒரு நற்சான்றிதழ் தங்களுக்குத் தாங்களே வழங்கிக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது. இதற்குப் பெயர் உத்தரவா இல்லை வேண்டுகோளா என்பது தெரியவில்லை. 
இதைக்கூட நமது கைப்பேசி நிறுவனங்கள் செய்யத் தயாராக இல்லை. மாதந்தோறும் தங்களது வாடிக்கையாளர் எண்ணிக்கையையும், நுண்ணலை கோபுரங்களின் எண்ணிக்கையையும் அதிகரிப்பதில் அக்கறை காட்டும் இந்த நிறுவனங்கள், தங்களது வியாபாரத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு வருவதைப் பற்றி ஏன் கவலைப்படப் போகிறார்கள்? ஆனால், அதை மேற்பார்வை பார்க்க வேண்டிய அரசும் அல்லவா தூங்கிக் கொண்டிருக்கிறது. 
நுண்ணலை கோபுரங்கள் குடியிருப்புப் பகுதிகளில் அமைக்கப்படக் கூடாது என்றும் அதனால் உடல்நிலையில் பல பாதிப்புகள் ஏற்படும் என்றும் நீதிமன்றத் தீர்ப்புகளும், சுகாதார ஆய்வுகளும் வந்த பின்னும் இதைத் தடுக்க யாரும் தயாராக இல்லை. முறையான அனுமதி பெற்றுத்தான் ஒரு நுண்ணலை கோபுரம் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதற்கான மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி அமைப்பின் அறிவிப்பு ஒவ்வொரு நுண்ணலை கோபுரத்திலும் கண்ணில் படும்படியாக இருத்தல் வேண்டும் என்று இதுவரை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. 
நுண்ணலை கோபுரங்கள் இருக்கட்டும். கைப்பேசிகள் எந்த அளவுக்குப் பாதுகாப்பானவை என்பதைப் பற்றி யாராவது கவலைப்படுகிறார்களா? புதிய புதிய மாடல்களை வாங்குவதில் அக்கறை செலுத்தும் வாடிக்கையாளர்கள், அனுமதிக்கப்பட்ட அளவுக்குக் கதிர்வீச்சு உள்ள கைப்பேசிதானா என்று பரிசோதிக்கவா செய்கிறார்கள்? பன்னாட்டு கைப்பேசித் தயாரிப்பாளர்கள் அவர்களது நாட்டு விதிமுறைக்கு ஏற்ப குறைந்த கதிர்வீச்சுள்ள கைப்பேசிகளை இந்தியாவில் தயாரிப்பதில்லை என்பது நம்மில் எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம்? 
பாவம், இந்தியக் குடிமக்கள். தங்களது பொன்னான நேரத்தைப் பேசிக் கழித்து, பணத்தையும் விரயமாக்கி, தங்களது உடல்நலத்தையும் பாதிப்புக்கு உள்படுத்திக் கொள்கிறார்கள். இவர்களும் கவலைப்படவில்லை, இவர்களைப் பற்றி அரசும் கவலைப்படவில்லை என்பதற்காக, நம்மால் வேடிக்கை பார்க்க முடியவில்லை. கைப்பேசிக் கதிர்வீச்சால் ஏற்பட இருக்கும் மிகப்பெரிய பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டாக வேண்டும்!
தினமணி

 பணியாளர் எப்போது தனது பணியை கடமையுணர்ந்து பொறுப்புடன் இறைவனைப் பயந்து தொழுகின்றாரோ அவருடைய ஒவ்வொரு செயலுக்கும் இறைவன் இரண்டு கூலி கொடுக்கின்றான். ஒன்று இவ்வுலகத்திலும் மற்றொன்று மறுமையிலும் கிடைக்கும்.

அக்னி நட்சத்திர வெப்பத்திலிருந்து நம்மை காத்துக் கொள்ள


அக்னி நட்சத்திரம்  ஒவ்வொரு ஆண்டும் சித்திரை 21ஆ‌ம் தேதி முதல் வைகாசி 14ஆ‌ம் தேதி வரை இருக்கும். நடப்பாண்டு சித்திரை 22 அதாவது இன்று காலை 7.53 மணிக்கு தொடங்கி வைகாசி 15ஆ‌ம் தேதி அதாவது 28ஆ‌ம் தேதி பகல் 12.45 மணி வரை அக்னி நட்சத்திர காலமாகும். இந்த காலகட்டத்தில் சூரியன் உச்சப்பலம் பெறுகிறார். இதனால் வெப்பம் அதிகரித்து காணப்படும்.

சூரிய வெப்பத்தால் முதியவர்களுக்கு மயக்கம் போன்று ஏற்படுவதும் இயற்கை. இதிலிருந்து தப்பிப்பதற்கு எளிய முறைக‌ள்:

1. கோடை காலம் தொடங்கிவிட்டதால் தண்ணீர் தாகமும் அதிகரிக்கும்.

2. சாதாரண நீரை குடிப்பதற்கு பதிலாக உடம்புக்கு குளிர்ச்சி தரும் காய்ச்சி வடிகட்டிய குளிர்ந்த நீர்
, மோர், உப்பு போட்ட எலுமிச்சை பழ சாறு குடிக்கலாம்.

3. வெள்ளரி பிஞ்சு
, தர்பூசனி மற்றும் பிற வகை பழங்கள் சாப்பிடலாம்.

4. மீன்கள் சாப்பிடுவதால் சிலருக்கு அலர்ஜியும்
, சைனஸ் போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகிறது. இதனால் அக்னி நட்சத்திரம் காலகட்டத்திலாவது மீன்கள் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

5. கடும் வெயிலில் சென்றுவிட்டு வீட்டிற்கு சென்ற உடன் சிறிது நேரம் மின்விசிறியின் கீழ் அமர்ந்து
, தலையில் உள்ள வியர்வை காய்ந்த பின்னர் பானங்கள் அருந்துவது நல்லது.

6. கோடை காலமாக இருப்பதால் கிராமங்களில் ஆறு
, குளம், கிணறுகளில் மூழ்கி குளிப்பதை தவிர்க்கலாம். காரணம் சிலருக்கு காது வலி ஏற்பட்டு சீழ் வடிய துவங்கிவிடும். குளிர்பானங்களை முற்றிலுமாக தவிர்த்துவிட வேண்டும்.

7. காய்ச்சி வடிகட்டிய நீர் 10 அல்லது 15 டம்ளர் தினசரி குடிக்க வேண்டும்.

8. காரமான உணவு வகைகள் மற்றும் பான்பராக்
, பாக்கு போடுவதை கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது.

கோடை காலங்களில் இவற்றை கடைப்பிடிப்பதன் மூலம் அக்னி நட்சத்திர வெப்பத்திலிருந்து ஓரளவு நம்மை காத்துக் கொள்ள முடியும் 

  
 பணியாளர் எப்போது தனது பணியை கடமையுணர்ந்து பொறுப்புடன் இறைவனைப் பயந்து தொழுகின்றாரோ அவருடைய ஒவ்வொரு செயலுக்கும் இறைவன் இரண்டு கூலி கொடுக்கின்றான். ஒன்று இவ்வுலகத்திலும் மற்றொன்று மறுமையிலும் கிடைக்கும். 


Friday, April 27, 2012

வாழ்வை இனிதாக்க புத்தர் கூறிய எட்டு வழிகள்




1.நற்காட்சி,
2
.நல்லூற்றம்,
3
.நல்வாய்மை,
4
.நற்செய்கை
5
.நல்வாழ்க்கை,
6
.நல்லூக்கம்,
7
.நற்கடைப்பிடி,
8
.நல்லமைதி.....

1.நற்காட்சி.
மனிதனுடைய தனிப் பெருமை பகுத்தறிவு ..தன்னுடைய பகுத்தறிவை கண்ணாக கொண்டு பார்பதே காட்சி..காட்சியில் இருவகை..

1
.நற்காட்சி  ௨.தீய காட்சி (அ) பொய் காட்சி.

எதையுமே பகுத்தறிவு கண் கொண்டு ஆராய்ந்து தெளிவது நற்காட்சி..

எதையும் வெறும் நம்பிக்கைகளை மட்டுமே அடிப்படையாக கொண்டு பார்ப்பது பொய்காட்சி..இதனால் தீமைகள் விளையும் சாத்தியங்கள் அதிகம்..

ஒவ்வொரு செயலுக்கும் காரணம் நோக்கம் அல்லது லட்சியம். நோக்கத்திற்கு தூண்டு கோளாக விளங்குபவை நம்பிக்கையும் கொள்கையும். ஆதலால் தன காட்சி நற்காட்சியாக இருக்க வேண்டு மென்று கூறப்பட்டது ...

மனிதன் ஏதயும் தன புத்தியை கொண்டு அறிந்து இருந்தால் மட்டும் போதாது...அதனை வாழ்க்கைலயே அனுபவித்தும் உணர்ந்திருக்க வேண்டும்.

 
2.நல்லூற்றம்:

 1)
புலன் இன்பங்களை துறத்தல்
 2)
மனக்காழ்ப்பு கொல்லாமை
 3)
அஹிம்சை ஆகியவற்றில் உறுதியாக நிற்றலே ஆகும்..

நல்லூற்றம் என்பது சத்யத்தை அடிப்படையாக கொண்ட நல்ல ஆசைகளை வளர்த்தல் எனவே உண்மையை நாடி செல்பவன் மகான்கள் என்றும் மகரிஷிகள் என்றும் எவரெவர்களோ எக்காலதிலோ சொல்லிவைதவை எல்லாம் உண்மை என்று நம்பிக்கொண்டு இராமல் தானாக முயன்று ஆராய்ந்து பார்க்க வேண்டும்.அறிவுக்கு பொருத்தம் இல்லாதவைகளை உதறிவிட வேண்டும். மேலும் புலன் இன்பங்களை துறத்தல் என்று புத்தர் சொல்வது "6”  புலன்களால் மற்றவர்க்கு துன்பம் செய்து அடைந்த இன்பம்" எவருக்கும் துன்பம் தராத இன்பங்களை அனுபவிப்பதில் தவறு இல்லை.

மனக்காழ்ப்பு கொல்லாமை என்பது மற்றவரிடம் காரணம் இன்றி கோபம் அடைவது. .அவர்களை வெறுப்பது.

அஹிம்சை என்பது முடிந்த அளவு எல்லா உயுர்கட்கும் துன்பம் தராமல் இருப்பது.

3.நல்வாய்மை

பொய்யுரையில் இருந்தும், புறம்கூறு வதில் இருந்தும், நிந்தைப்பேச்சில் இருந்தும், பயனற்ற சோம்பேறி பேச்சுகளில் இருந்தும் ஒதுங்கி இருத்தல் . இதுவே நல்வாய்மை எனப்படுவது. நல்வாய்மை நயம்பட உரைத்தலும் ஆகும். எவருக்கும் எந்த தீமையும் இல்லாத சொற்களே நல்வாய்மை.ஆகும் .

இதை விளக்கும் குறள் .....

"
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்

4.நற்செய்கை:
நற்செய்கை யாதெனின்.உயிர் கொலை, தமக்கு அளிக்கப்படாதவைகளை கவர்ந்து கொள்ளல், முறை தவறிய சிற்றின்ப உணர்சிகள் ஆகியவற்றில் இருந்து விலகுதல் ஆகும்.
5.நல்வாழ்க்கை:
தவறான வழிகளில் வாழ்க்கை நடத்துவதை விட்டு நியாயமான முறையில் சாதகன் தன ஜீவனத்திற்கு வேண்டிய வருவாயை பெறுகிறான்.இதுவே நல்வாழ்க்கை

6.நல்லூக்கம்:
இதற்கு முன் தோன்றி இராத ஒழுக்கக்கேடான நிலைமைகள் எழாதபடி சித்த உறுதியை எற்படுத்தி கொள்ளுதல்.ஏற்கனவே எழுந்துள்ள தீய, ஒழுக்கக் குறைவான நிலைமைகளை நீக்குதல்.. இதுவரை தோன்றி இராத நல்ல நிலைமைகளை தோற்றுவித்தல் ..ஏற்கனவே தோன்றிய நல்ல நிலைமைகளை பழுதாகாதபடி நிலை பெற்று பெருகும் படி செய்தல்...இவையே நல்லூக்கமாம்

7.நற்கடைப்பிடி:
உடல் கந்தங்களால் ஆகிய கலப்பு என்று கருதி ஊக்கத்துடனும் நிலைத்த சிந்தயுடனும் உலகிலுள்ள பேராசையையும் அயர்வையும் அடக்குதல்.அதன் மூலம் சாந்தி அடைதல் உணர்ச்சி சம்மந்தமாயும் புலன்களின் அறிவு சம்மந்தமாயும் ,செய்கைகள் சம்மந்தமாயும், மனதின் சிந்தனைகள் சம்மந்தமாயும் அடக்க வேண்டியவைகளை அடக்குதல்....

8.நல்லமைதி.

இதுவே அனைதுப்படிகளின் சிகரம் ..ஞானத்தால் நன்மை தீமைகளை பாகுபடுத்தி அறிந்துகொள்ள முடியுமே தவிர, அதனால் மனதை ஒருமைப்படுத்த முடியாது.. தியானமே அதற்கு சிறந்த வழி..

உயர் கொலை புரிவோருக்கும் சீலங்களை பேனாதோருக்கும் ஏற்பட்டது அன்று தியானம். அவா, வெறுப்பு, மயக்கம், கர்வம், போய கட்சி ஆகிய தளைகளை கடந்து மேலேரியாவர்களுககே அது உகந்தது.
புலன்களின் ஆசைகள், துவேஷம், சோர்வு, பரபரப்பு, சந்தேகங்கள் ஆகியவற்றை அறவே நீக்கி விட்டு அவற்றிற்கு பதிலாக பரிசுத்தம், அன்பு உள்ளத்தின் விழிப்பு ,தெளிவு அறிவை ஆதாரமாக கொண்ட நம்பிக்கை ஆகியவற்றை பெற வேண்டும்.அதன் பின்னரே தியானம் அல்லது சமாதி எளிதாகும்.

தியானம் நான்கு வகைப்படும் :

1.ஏகாக்ரக வாசத்தில் ஆராய்ச்சி, பரிசீலனை, ஏகாக்ரக சிந்தனை ஆகியவற்றின் மூலம் பெரும் இன்பா நிலை. (இதில் ஒரு பிக்கு புலன்களின் ஆசைகளில் இருந்து ஒதுங்கி தீய நிலைகளில் இருந்தும் ஒதுங்கி குறிப்பிட்ட ஒரு பொருளை சார்ந்து நிலைத்துள்ள சிந்தனையுடன் முதலாவது தியானத்தில் பிரவேசிக்கிறான்..)

2.ஆராய்ச்சி சிந்தனை முதலியவைகளை கடந்து மன சாந்தியும் ஆனந்தமும் பெரும் நிலை

3
.சகல உணர்சிகளும் ஒடுங்கும் நிலை..

4.
.தன்னிலே தான் நிறைவு பெற்று ,இன்ப துன்பங்களை கடந்து பூரணமான அமைதியை பெரும் நிலை...

ஒருவரிடம் பணி செய்து ஓடிப்போன பணியாளர் தனது முதலாளியிடம் திரும்ப வரும் வரை அவருடைய தொழுகையை இறைவன் ஏற்றுக் கொள்ள மாட்டான்.

- பணியாளர்கள் மீது முதலாளிகள் இரக்கம் கொள்ள வேண்டும்.
 

எதிர்கால வாழ்க்கைக்கான வருமானம் ! மற்றும் வருமான யோசனைகள் !

பெரும்பாலும், "நீங்கள் தூங்கும்போது பணம் சம்பாதிக்கவும்" என்ற சொற்றொடரை நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம்.   பெரும் பாலான மக்களை செய...