Total Pageviews

Wednesday, April 6, 2016

பக்கவாதம் - ஸ்ட்ரோக்- STOKE- வருவதை இனங்கண்டு தடுக்கலாம்!!





பக்கவாதம் - பாதிக்கப்பட்ட ஒரு நபரை, பாதிப்பு ஏற்பட்ட முதல் 3 மணி நேரத்திற்குள், நரம்பியல் நிபுணரிடம் அழைத்துச் சென்று விட்டால், அந்நபருக்கு ஏற்பட்ட பாதிப்புகளை முழுவதுமாக மாற்றி விடலாம் என்கிறார் நரம்பியல் நிபுணர்!! 
முழுவதுமாக.......
அவர் சொல்வது அதற்குத் தேவை,  1)பாதிக்கப்பட்ட நபரின் பாதிப்பைக் கண்டு பிடித்து அங்கீகரிப்பது, 

 2)பாதிக்கப்பட்டவரின் பாதிப்பு , 'ஸ்ட்ரோக்' என அடையாளம் கண்டறியப்படுவது,

3)மூன்றாவதாக அந்நபரை சரியான மருத்துவ வசதிக்குட்படுத்துவது!! 3 மணி நேரத்திற்குள்!
இது மிகவும் கடினமானதே!! "
ஸ்ட்ரோக் அடையாளம்கண்டு கொள்வது எப்படி?;;;;

3 வழிகள் எப்போதும் நினைவில் வையுங்கள்!
எவையெல்லாம்?
 
வாசித்து அறிந்து கொள்ளுங்கள்!
சிலசமயங்களில் ஸ்ட்ரோக் என்பதன் அறிகுறிகளை அடையாளம்  கண்டு கொள்வது கடினமாக இருக்கும்!! துரதிஷ்டவசமாக அதற்கான விழிப்புணர்வு இல்லாமை பாதிப்பை அதிகமாகத் தருகிறது!
 
பாதிக்கப்படும் நபரின் அருகிலிருப்பவர்கள் "ஸ்ட்ரோக்" என்பதை அடையாளம் காணத் தவறும் போது,ஸ்ட்ரோக்கினால் பாதிக்கப்படுபவர், கடுமையான மூளை பாதிப்புக்குள்ளாகிறார்!
தற்போது டாக்டர்கள் சொல்வது;;
  பாதிக்கப்படும் நபரின் அருகிலிருக்கும் பார்வையாளர்கள், மூன்று. எளிய கேள்விகளைப் பாதிக்கப்பட்ட நபரிடம் கேட்பதினால், பாதிக்கப்பட்டவருக்கு, ஸ்ட்ரோக் அறிகுறிகள் இருப்பதாக அடையாளம் காணலாம்" என்கின்றனர்.
S**  Smile  பாதிக்கப்பட்ட நபரைப் புன்னகை ( Smile)  புரியச் சொல்லுங்கள்!

T**  Talk. பாதிக்கப்பட்ட நபரை ஒரு எளிய வாக்கியத்தைத் தடுமாற்றமின்றி  பேசச் சொல்லுங்கள்!

(உ.ம். வானம் மிகவும் தெளிவாய் இருக்கிறது!)

R***  Raise  பாதிக்கப்பட்ட நபரின் இரண்டு கைகளையும் உயர்த்தச் சொல்லுங்கள்!
பாதிக்கப்பட்ட நபருக்கு இந்த மூன்று பணிகளைச் செய்வதில்,ஏதாவது ஒன்றில். பிரச்சினை யிருந்தாலும், உடனடியாக ஆம்புலன்சை வரவழைத்து, பாதிக்கப்பட்ட நபரை அழைத்துச் செல்பவரிடம்,பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்டிருக்கும் அறிகுறிகளை விளக்கிச் சொல்லுங்கள்!
குறிப்பு;;  "ஸ்ட்ரோக்" கின் மற்றுமொரு அடையாளம்!!

1.   பாதிக்கப்பட்ட நபரை அவரது நாக்கை வெளியே நீட்டச் சொல்லுங்கள்!

2.   அவரது நாக்கு கோணலாய் இருந்தாலோ, நாக்கு ஏதாவது ஒரு பக்கமாய்ச் சென்றால் அதுவும் அவர் ஸ்ட்ரோக்கினால் பாதிக்கப்பட்டதிற்கான அடையாளமே!

ஒரு முக்கியமான இதய நோய் நிபுணர் சொல்வது;;
இந்த பதிவைப் படிப்பவர்கள், அனைவரும் 10 நபர்களுக்காவது இதனை இமெயிலில் அனுப்பினால், ஒரு உயிரையாவது காப்பாற்றலாம்!
அது உங்களுடையதாகவும் இருக்கலாம்!!!!

விலைமதிப்பில்லாத உயிரை பாதுகாத்துக் கொள்ளுங்கள்!
நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா?
அப்படியென்றால் இது உங்களுக்குத்தான் உங்களுக்காக..
உங்களின் விலைமதிப்பற்ற இரண்டு நிமிடங்களை செலவழித்து இதை கண்டிப்பாக படிக்கவும்…
மாரடைப்பு மற்றும் சூடான குடிநீர்:
சீன மற்றும் ஜப்பான் மக்கள் தங்களின் உணவிற்கு பிறகு குளிர்ந்த தண்ணீரை விடுத்து சூடான தேநீர் அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இப்பழக்கத்தை நாமும் பின்பற்ற வேண்டிய நேரம்
வந்துவிட்டது.
சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீர் குடிப்பதனால் , நம் உணவில் உட்கொண்ட எண்ணெய் பொருட்கள் திடப்பொருளாக மாறி செரிமானத்தை மெதுவாக்கி விடும்.
திடப்பொருளாக மாறிய கலவை நம் வயிற்றில் இருக்கும் அமிலத்தோடு (Acid) வினைபுரியும்.இது திட உணவை விட வேகமாக உடைந்து குடலால்
உறிஞ்சபடும். இது நம் குடலில் அணிதிரண்டு அப்படியே நின்றுவிடும். மிக விரைவில், இது கொழுப்புகளாக மாறி புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.
ஆகவே உணவிற்கு பிறகு சூடான தண்ணீர் அல்லது சூப் குடிப்பது நல்லது.
மாரடைப்பு பற்றி ஒரு குறிப்பு:
மாரடைப்பின் முதல் அறிகுறி இடது கையில் ஏற்படும் கடுமையான வலி ஆகும். தாடையில் தீவிர வலி ஏற்பட்டாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மாரடைப்பு வரும்போது பொதுவாக நெஞ்சு வலி ஏற்படாது. 
குமட்டல் மற்றும் கடுமையான வியர்வையே மாரடைப்பு ஏற்பட பொதுவான அறிகுறிகள் ஆகும்.
60% சதவீத மக்கள் தூக்கத்தில் மாரடைப்பு ஏற்படும்போது அவர்களால் எழுந்துகொள்ள முடியாது. 

உறக்கத்திலேயே இறந்துவிடுவர்.
தாடை வலி ஏற்பட்டவர்கள் மட்டுமே அயர்ந்த தூக்கத்திலிருந்து எழுந்து கொள்ள முடியும். 
ஆகவே எப்பொழுதும் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.
படித்தவுடன் உங்களின் நண்பர்களுக்கு கண்டிப்பாக
பகிருங்கள். 

விழிப்புணர்வுடன் பகிர்ந்தால் குறைந்தபட்சம் ஒரு உயிரையாவது காப்பாற்ற முடியும் !

No comments:

Post a Comment

எதிர்கால வாழ்க்கைக்கான வருமானம் ! மற்றும் வருமான யோசனைகள் !

பெரும்பாலும், "நீங்கள் தூங்கும்போது பணம் சம்பாதிக்கவும்" என்ற சொற்றொடரை நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம்.   பெரும் பாலான மக்களை செய...