Total Pageviews

Monday, March 21, 2016

25 வருடங்களுக்கு முன் !

25 வருடங்களுக்கு முன்

செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டுக் கொண்டோம்..

ஆணியில் மாட்டி கிழிந்த துணியை டானிங்க் செய்தது உடுத்தி கொண்டோம்.

முதல் நாள் கூட்டு பொறியல் ரசம் சாம்பாரை சுருண்ட செய்து பழங்கஞ்சியுடன் பருகினோம்.

எல்லா கல்யாணத்திலும் மத்திய உணவு பிரதானமாக இருந்தது வடை பாயசத்துடன்.

ரயில் பயணத்திற்கு புளியன்சாதமும் எலுமிச்சை சாதமும் கட்டி சென்றோம்.

பெரும்பாலும் பேருந்தில் தான் போனோம்.

பள்ளி மாணவர்கள் குழந்தைகளாக இருந்தனர்.

இளையராஜா தான் எங்கும் ஒலித்தார்.

பாடல்களின் வரிகள் புரிந்தன.

காதலிப்பதற்கும் உறவுகளுக்கும் கடிதங்கள் எழுதினோம்.

ரஜினி கமல் பொங்கல் தீபாவளி க்ரீடிங்க்ஸ் கிடைத்தது.

உண்டு களித்து தீபாவளிக்கு சினிமா பார்த்தோம்.

காணும் பொங்கலுக்கு உறுவுகளை பார்த்தோம்.

திருடனை பிடிக்க ஊரே ஓடியது.

பாம்படிக்க பக்கத்து வீட்டு மாமா வந்தார்.

பக்கத்து வீட்டு பெரியவர்களுக்கு பயந்தோம்.

கல்யாணத்திற்கு உறவுகள் இரண்டு நாள் முன்னரே வந்தனர்.

எல்லாவற்றையும் விட காலை பொழுதுகள் ரம்மியமாக இருந்தது,

சுவாசிக்கவும் யோசிக்கவும்.

- சாம் மகேந்திரன்

1 comment:

  1. மிக்க நன்றி கல்கி ...மகிழ்ச்சி .

    ReplyDelete

அரசு பள்ளியில் படிப்போம் ! 👍 ஆகச்சிறந்த அரசு பதவியில் அமர்வோம் !

  வயிற்றுப் பஞ்சமில்லாமல் நல்ல சோறு சாப்பிட வேண்டுமென்றால் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேருங்கள். எதிர்காலத் தேவைகளுக்குப் பணம் சேமிக்க வேண்ட...