Total Pageviews

Friday, April 27, 2012

வாழ்வை இனிதாக்க புத்தர் கூறிய எட்டு வழிகள்




1.நற்காட்சி,
2
.நல்லூற்றம்,
3
.நல்வாய்மை,
4
.நற்செய்கை
5
.நல்வாழ்க்கை,
6
.நல்லூக்கம்,
7
.நற்கடைப்பிடி,
8
.நல்லமைதி.....

1.நற்காட்சி.
மனிதனுடைய தனிப் பெருமை பகுத்தறிவு ..தன்னுடைய பகுத்தறிவை கண்ணாக கொண்டு பார்பதே காட்சி..காட்சியில் இருவகை..

1
.நற்காட்சி  ௨.தீய காட்சி (அ) பொய் காட்சி.

எதையுமே பகுத்தறிவு கண் கொண்டு ஆராய்ந்து தெளிவது நற்காட்சி..

எதையும் வெறும் நம்பிக்கைகளை மட்டுமே அடிப்படையாக கொண்டு பார்ப்பது பொய்காட்சி..இதனால் தீமைகள் விளையும் சாத்தியங்கள் அதிகம்..

ஒவ்வொரு செயலுக்கும் காரணம் நோக்கம் அல்லது லட்சியம். நோக்கத்திற்கு தூண்டு கோளாக விளங்குபவை நம்பிக்கையும் கொள்கையும். ஆதலால் தன காட்சி நற்காட்சியாக இருக்க வேண்டு மென்று கூறப்பட்டது ...

மனிதன் ஏதயும் தன புத்தியை கொண்டு அறிந்து இருந்தால் மட்டும் போதாது...அதனை வாழ்க்கைலயே அனுபவித்தும் உணர்ந்திருக்க வேண்டும்.

 
2.நல்லூற்றம்:

 1)
புலன் இன்பங்களை துறத்தல்
 2)
மனக்காழ்ப்பு கொல்லாமை
 3)
அஹிம்சை ஆகியவற்றில் உறுதியாக நிற்றலே ஆகும்..

நல்லூற்றம் என்பது சத்யத்தை அடிப்படையாக கொண்ட நல்ல ஆசைகளை வளர்த்தல் எனவே உண்மையை நாடி செல்பவன் மகான்கள் என்றும் மகரிஷிகள் என்றும் எவரெவர்களோ எக்காலதிலோ சொல்லிவைதவை எல்லாம் உண்மை என்று நம்பிக்கொண்டு இராமல் தானாக முயன்று ஆராய்ந்து பார்க்க வேண்டும்.அறிவுக்கு பொருத்தம் இல்லாதவைகளை உதறிவிட வேண்டும். மேலும் புலன் இன்பங்களை துறத்தல் என்று புத்தர் சொல்வது "6”  புலன்களால் மற்றவர்க்கு துன்பம் செய்து அடைந்த இன்பம்" எவருக்கும் துன்பம் தராத இன்பங்களை அனுபவிப்பதில் தவறு இல்லை.

மனக்காழ்ப்பு கொல்லாமை என்பது மற்றவரிடம் காரணம் இன்றி கோபம் அடைவது. .அவர்களை வெறுப்பது.

அஹிம்சை என்பது முடிந்த அளவு எல்லா உயுர்கட்கும் துன்பம் தராமல் இருப்பது.

3.நல்வாய்மை

பொய்யுரையில் இருந்தும், புறம்கூறு வதில் இருந்தும், நிந்தைப்பேச்சில் இருந்தும், பயனற்ற சோம்பேறி பேச்சுகளில் இருந்தும் ஒதுங்கி இருத்தல் . இதுவே நல்வாய்மை எனப்படுவது. நல்வாய்மை நயம்பட உரைத்தலும் ஆகும். எவருக்கும் எந்த தீமையும் இல்லாத சொற்களே நல்வாய்மை.ஆகும் .

இதை விளக்கும் குறள் .....

"
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்

4.நற்செய்கை:
நற்செய்கை யாதெனின்.உயிர் கொலை, தமக்கு அளிக்கப்படாதவைகளை கவர்ந்து கொள்ளல், முறை தவறிய சிற்றின்ப உணர்சிகள் ஆகியவற்றில் இருந்து விலகுதல் ஆகும்.
5.நல்வாழ்க்கை:
தவறான வழிகளில் வாழ்க்கை நடத்துவதை விட்டு நியாயமான முறையில் சாதகன் தன ஜீவனத்திற்கு வேண்டிய வருவாயை பெறுகிறான்.இதுவே நல்வாழ்க்கை

6.நல்லூக்கம்:
இதற்கு முன் தோன்றி இராத ஒழுக்கக்கேடான நிலைமைகள் எழாதபடி சித்த உறுதியை எற்படுத்தி கொள்ளுதல்.ஏற்கனவே எழுந்துள்ள தீய, ஒழுக்கக் குறைவான நிலைமைகளை நீக்குதல்.. இதுவரை தோன்றி இராத நல்ல நிலைமைகளை தோற்றுவித்தல் ..ஏற்கனவே தோன்றிய நல்ல நிலைமைகளை பழுதாகாதபடி நிலை பெற்று பெருகும் படி செய்தல்...இவையே நல்லூக்கமாம்

7.நற்கடைப்பிடி:
உடல் கந்தங்களால் ஆகிய கலப்பு என்று கருதி ஊக்கத்துடனும் நிலைத்த சிந்தயுடனும் உலகிலுள்ள பேராசையையும் அயர்வையும் அடக்குதல்.அதன் மூலம் சாந்தி அடைதல் உணர்ச்சி சம்மந்தமாயும் புலன்களின் அறிவு சம்மந்தமாயும் ,செய்கைகள் சம்மந்தமாயும், மனதின் சிந்தனைகள் சம்மந்தமாயும் அடக்க வேண்டியவைகளை அடக்குதல்....

8.நல்லமைதி.

இதுவே அனைதுப்படிகளின் சிகரம் ..ஞானத்தால் நன்மை தீமைகளை பாகுபடுத்தி அறிந்துகொள்ள முடியுமே தவிர, அதனால் மனதை ஒருமைப்படுத்த முடியாது.. தியானமே அதற்கு சிறந்த வழி..

உயர் கொலை புரிவோருக்கும் சீலங்களை பேனாதோருக்கும் ஏற்பட்டது அன்று தியானம். அவா, வெறுப்பு, மயக்கம், கர்வம், போய கட்சி ஆகிய தளைகளை கடந்து மேலேரியாவர்களுககே அது உகந்தது.
புலன்களின் ஆசைகள், துவேஷம், சோர்வு, பரபரப்பு, சந்தேகங்கள் ஆகியவற்றை அறவே நீக்கி விட்டு அவற்றிற்கு பதிலாக பரிசுத்தம், அன்பு உள்ளத்தின் விழிப்பு ,தெளிவு அறிவை ஆதாரமாக கொண்ட நம்பிக்கை ஆகியவற்றை பெற வேண்டும்.அதன் பின்னரே தியானம் அல்லது சமாதி எளிதாகும்.

தியானம் நான்கு வகைப்படும் :

1.ஏகாக்ரக வாசத்தில் ஆராய்ச்சி, பரிசீலனை, ஏகாக்ரக சிந்தனை ஆகியவற்றின் மூலம் பெரும் இன்பா நிலை. (இதில் ஒரு பிக்கு புலன்களின் ஆசைகளில் இருந்து ஒதுங்கி தீய நிலைகளில் இருந்தும் ஒதுங்கி குறிப்பிட்ட ஒரு பொருளை சார்ந்து நிலைத்துள்ள சிந்தனையுடன் முதலாவது தியானத்தில் பிரவேசிக்கிறான்..)

2.ஆராய்ச்சி சிந்தனை முதலியவைகளை கடந்து மன சாந்தியும் ஆனந்தமும் பெரும் நிலை

3
.சகல உணர்சிகளும் ஒடுங்கும் நிலை..

4.
.தன்னிலே தான் நிறைவு பெற்று ,இன்ப துன்பங்களை கடந்து பூரணமான அமைதியை பெரும் நிலை...

ஒருவரிடம் பணி செய்து ஓடிப்போன பணியாளர் தனது முதலாளியிடம் திரும்ப வரும் வரை அவருடைய தொழுகையை இறைவன் ஏற்றுக் கொள்ள மாட்டான்.

- பணியாளர்கள் மீது முதலாளிகள் இரக்கம் கொள்ள வேண்டும்.
 

No comments:

Post a Comment

முதியோர் இல்லத்தில் அன்னதானம் செய்ய போறீங்களா!ஒரு நிமிடம் இதை படியுங்கள்!

 ஒரு முதியோர் இல்லத்துக்கு சென்று, அங்குள்ள நிர்வாகியிடம் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தேன். எனக்கு 10 ஆண்டுகளாக அவரோடு பழக்கம் உண்டு. அந்த சம...