Total Pageviews

Friday, December 16, 2011

மன அழுத்தம் பற்றி


பெரும்பாலான மக்கள் அவர்களது வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் மன அழுத்தத்தை உணர்கின்றனர். ஆனால் சிலருக்கு இந்த உணர்வுகள் கடுமையானதாகவும், நீடித்தும் அமைந்து விடுகிறது.
இந்த வகை மன அழுத்தம் எளிதில்விலகாது', அந்த நபரிடம்தைரியமாயிருங்கள்', ‘கவலைப்படாதீர்கள்'என்று கூறுவதெல்லாம் உதவாது. அது அவ்வளவு எளிதானதல்ல.
ஆனால் வழியிருக்கிறது. மன அழுத்தம் சிகிச்சையளிக்கக்கூடிய மருத்துவ நிலையே. ஒரு மருத்துவர் மருந்துகளையோ, சிகிச்சையோ அல்லது இரண்டையுமோ பரிந்துரைக்கப்படும்.
உதவியை நாடுவது மிக முக்கியமானதாகும்.
கவனிக்க வேண்டிய அறிகுறிகள்:
  • அழுத்தமான மனநிலை - பெரும்பாலான நாள், தினமும்
  • மனநிலை மாற்றங்கள் - ஒரு நிமிடம் உற்சாகமாயிருந்தால், அடுத்த நிமிடமே உற்சாகம் வடிதல்
  • பலவீனம் மற்றும் வாழ்க்கையில் பிடிமானத்தை இழத்தல்
  • கோபம் மற்றும் அமைதியின்மை
  • உறக்கத்தில் மாற்றங்கள் - அதிகமமாக உறங்குதல் அல்லது குறைவாக உறங்குதல்
  • குறிப்பிடத்தகுந்த எடை அதிகரிப்பு அல்லது எடையிழப்பு
  • மதிப்பின்மை மற்றும் குற்றவுணர்வு எண்ணங்கள்
  • கவனித்தலில் மற்ரும் தெளிவாக சிந்தித்தலில் சிரமம்
  • பாலுறவில் ஈடுபாடு குறைதல்
  • மரணம் மற்றும் தற்கொலை பற்றிய எண்ணங்கள்
நீங்கள் அறிந்த ஒருவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால்:
ஒரு மருத்துவரையோ அல்லது உடல் நல நிபுணரையோ சந்திக்க அவரை ஊக்கப்படுத்துங்கள்
அவர்களுக்கு இருங்கள
தற்கொலை உணர்வுள்ள நண்பர் அல்லது உறவினருக்கு உதவுதல்
அமைதியாகக் கேளுங்கள்!
யாராவது ஒருவர் மனஅழுத்தமடைந்திருந்தாலோ அல்லது தற்கொலை உணர்வுடன் இருந்தாலோ, அதிலிருந்து அவர்கள் விடுபட உதவி செய்ய முயற்சித்தலே நமது முதல் செயலாகும். தீர்வுகளைக் கண்டறிய அறிவுரைகள், நமது சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் போன்றவற்றை நாம் செய்யலாம்.
அமைதியாக அவர்கள் கூறுவதைக் கேட்பது இன்றும் சிறந்த செயல். தற்கொலை உணர்வுள்ளவர்கள் பதில்களையோ அல்லது தீர்வுகளையோ வேண்டுவதில்லை. அவர்களது பயங்களையும், ஆபாசங்களையும் வெளிபடுத்துவதற்கான ஒரு பாதுகாப்பான இடமே அவர்களுக்குத் தேவைபபடுகிறது.
கேட்டர் - உண்மையாகக் கேட்டல் - எளிதானதல்ல. ஏதாவது சொல்ல வேண்டும் - கருத்துக்கூறல், அறிவுரை சொல்லுதல் அல்லது வேறு ஏதாவது கூறுதல் - என்ற நமது உள்ளுணர்வை நாம் கட்டுப்படுத்த வேண்டும். அந்த நபர் நம்மிடம் கூறும் விஷயங்களைக் கேட்பது மட்டுமின்றி அதற்கப் பின்னால் உள்ள அவர்களது உணர்வுகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களது கோணத்தில் இருந்து விஷயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும், நமது கோணத்திலிருந்து அல்ல.
தற்கொலை உணர்வுள்ள ஒருவருக்கு நீங்கள் உதவுகிறீர்கள் எனில் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய ி அம்சங்கள்
தற்கொலை உணர்வுள்ள ஒரு நபர் என்ன விரும்புகிறார்?
  • கேட்கக்கூடிய ஒருவர். அவர்கள் கூறுவதை நேரம் ஒதுக்கி தூய மனதுடன் கேட்கும் ஒருவர். யூகிக்காமல் அல்லது அறிவுரைகளோ அல்லது கருத்துக்களோ கூறாமல் அவ்ரகள் கூறுவதை முழுக்கவனத்துடன் கேட்பவர்.
  • நம்பிக்கைக்குரிய ஒருவர். அவர்களை மதிக்கவும் பொறுப்புகள் ஏற்கவும் முயலாத ஒருவர். அனைத்தையும் முழுமையாக இரகசியமாக வைத்திருக்கக்கூடும்.
  • அக்கறை காட்டும் ஒருவர். அந்த நபரை தேற்றி அமைதியாகப் பேசச் செய்ய தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்பவர். ஏற்கும், நம்பும் மற்றும் மன உறுதியளிக்கும் ஒருவர் "நான் அக்கறைப்படுகிறேன்." என்று கூறும் ஒருவர்.
தற்கொலை உணர்வுள்ளவர்கள் என்ன விரும்புவதில்லை?
  • தனித்திருத்தல். புறக்கணிப்பு பிரச்சினையைப் பத்து மடங்கு மோசமானதாகக் காட்டும். கேளுங்கள்.
  • அறிவுரை கூறப்படுதல். விளக்கங்கள் உதவாது "எல்லாம் சரியாகிவிடும்"போன்ற சுலபமான வாக்குறுதிகள் அல்லது "தைரியமாயிருங்கள்" போன்ற கருத்துக்களும் உதவாது. புகுத்தாய்தல், ஒப்பிடுதல், வகைப்படுத்தல் அல்லது விமர்சித்தல் போன்றவற்றைச் செய்யாதீர்கள். கேளுங்கள்.
  • குறுக்கு விசாரணை செய்தல். பேசிக்கொண்டிருக்கும் விஷயத்தை மாற்றவோ அல்லது ஊக்கமளிக்கவோ வேண்டாம். உணர்வுகளைப் பற்றிப் பேசுதல் கடினமானது. தற்கொலை உணர்வுள்ளவர்கள் கட்டாயப்படுத்தப்படவோ அல்லது பாதுகாப்பு நிலைக்குத் தள்ளப்படவோ விரும்புவதில்லை. கேளுங்கள

No comments:

Post a Comment

திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?

 திருமணம் தள்ளிப் போவதற்கு என்னென்ன காரணங்கள்?   பெண்கள் 1)   பையன் நல்லா படிச்சிருக்கனும் , 2)   சொந்த வீடு இருக்கனும் , 3)   ந...